கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Thursday, July 06, 2006

ஈனா மீனா டிகா..!

லேனா என்பவர் எனது 'வயறு எரிகிறது' என்ற பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்கான பதில் இது. நீளமாகி போனதால் மட்டுமில்லாது, அந்த பதிவுடன் இதன் தொடர்பின்மை மற்றும் இதன் தனிப்பட்ட விவாதத் தன்மை கருதியும் இங்கே இடுகிறேன்.

லேனா பின்னூட்டமளிக்க காரணமான முந்தய பின்னூட்டங்களையும் இத்தாலிக்கில் அளித்துவிட்டு எனது பதிலை கீழே தருகிறேன். இதற்கு பதில் எழுத வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன் என்ற வழக்கமான பல்லவி ஒன்று போட முடியும்தான். லேனாவிற்கு பதில் எழுதுவதை விட, மார்க்சிய மொக்கைத்தனத்தை இப்போது இல்லாவிட்டாலும் பின்னால் எப்போதாவது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சில விஷயங்களை ஒருமுறை சொல்லிவிட்டால் பின்னால் பழைய வைக்கோலை அசைபோடும் கட்டாயம் இருக்காது. அதனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு....!

மோகன்தாஸ்: வசந்த், நீங்கள் உட்பட (வசந்தன் தவிர்த்த) அனைவரும் ஜெர்மனியை எதிர்ப்பதில், அவர்களுடைய முறை தவறிய ஆட்டத்தை விடவும் ஏதோவொன்று இருப்பதாகவே எனக்கு படுகிறது. இதை நான் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து வெல்லவேக்கூடாதென்று நினைக்கும் என் சில நண்பர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.

இதை சாருவும் மொழிந்தது வருத்தத்திற்குரியது.

இதற்கு(ஜெர்மனியை வெறுப்பதற்கு) வேறு எதுவும் காரணங்கள்(ஹிட்லர்???) இருந்தால் விளக்கவும். நடுநிலை ஜல்லி உங்களிடம் இருந்து வராதென்று நம்பிக்கையில.

ரோஸாவசந்த்: மோகன்தாஸ்,

தாமதத்திற்கு மன்னிக்கவும். நடுநிலமை என்று ஜல்லி எதுவும் அடிக்காமல் ஜெர்மனி பற்றி ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறது என்று ஒப்புகொள்கிறேன்.

இத்தாலியில் இருந்த போது மொத்தமாய் நான்கு வாரங்கள் -இடையில் ஒருவார இடைவெளியுடன் -ஜெர்மனியில் இருக்க நேர்ந்தது. எப்படா இத்தாலிக்கு திரும்புவோம் என்று இருந்தது. வறலாற்றில் ஒரு ஹிட்லர் இருந்தது மட்டும் ஜெர்மனி மீதான கற்பிதத்திற்கு காரணம் என்று தோன்றவில்லை. இத்தாலியிலும் ஒரு முசோலினி, பிரான்ஸில் ஒரு லூபானும் நிச்சயம் உண்டு. (அதேநேரம் ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்.)

இனவாதம் குறைவாக இருப்பதாக நான் கருதும் பிரான்ஸிலேயும் எதிர்பாராமல் அவமதிக்கப் படும் வாய்ப்பு உண்டு. ஜெர்மனியிலும் மிக நல்ல மனிதர்களை சந்திக்க முடியும். அதனால் எதையும் பொதுமை படுத்தி சொல்வதில் அர்த்தமில்லைதான். ஆனால் ஜெர்மனியின் சமூக வாழ்வில், அவர்களின் நகைச்சுவை தொடங்கி எல்லாவற்றிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது. இது தவறாகவும், கற்பிக்க பட்டதாகவும் இருக்கலாம், தெரியவில்லை. ஆனால் பிரன்ஸில் காணும் சுதந்திரத்தை, களியாட்டத்தை அங்கே காணமுடியவில்லை என்றே தோன்றுகிறது.

ஊருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் பிரான்ஸில் நீங்கள் ரோட்டை கடந்தால், அதி வேகத்தில் காரில் வருபவர் தூரத்திலேயே உங்களை கண்டு, வேகத்தை குறைத்து, பொறுமையாய் நீங்கள் ரோட்டை கடக்க காத்திருந்து புன்முறுவல் மாறாமல் 'bonjour' சொல்லிவிட்டு கடந்து செல்வார். ஜெர்மனியில் நீச்சயமாய் நீங்கள் சாலையை கடந்திருக்க மாட்டீர்கள். இப்படித்தான் நான் கேள்விப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. குறைந்த கால சொந்த அனுபவமும் இதையே உறுதி செய்கிறது.

(இதே போன்ற கருத்தை சாருவும் தனது கோணல் பக்கங்களில் எழுதியிருப்பார்.)

லேனா: "ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்"

இதை எழுதிய இந்த மனிதன் யார்? என்னையே வினவிக்கொண்டபோது,"ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்" என்பது என் கண்ணில் பட்டது. உண்மையில் இவரது மேற்கணாணும் பந்தி எதை எமக்கு அறிவுறுத்துகிறது? ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும் என்கிறார். குட்டிபூர்சுவாக்களின் மூக்குக்கு மேலே பார்க்கதெரியாத குறுகிய பார்வையினதும், மக்கள் மீதான வெறுப்பின் தன்மையை, இந்த வசனம் அசதாரணமுறையில் வெளிப்படுத்துகின்றன. இவர்களுக்கு உழைக்கும் மக்களின் மீதோ அல்லது வரலாற்று உண்மை மீதோ அக்கறை கிடையாது. 20ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வின் வெளிப்பாட்டிற்கு(1917 இல் ரஷ்யாவில் ஏற்பட்ட உலக் சோசலிச புரட்சிக்கு) எதிராக நனவான முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசிசத்தினை, ஜேர்மானிய மக்களின் பொதுவுணர்வாக அது இருந்தது என கூறுவது ஒரு பொய்மைப்படுத்தலாகும். இந்த பொய்மைப்படுத்தலை ரோசா வசந் கண்டுபிடிக்கவில்லை, அவரது ஆசான்களான குட்டிமுதலாளித்துவ மற்றும் வலது சாரி வரலாற்று ஆசிரியர்களின் கூற்றாகும் இது. தயவு செய்து, இவரது இந்த கூற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு கட்டுரையின் ஒரு குறிப்பிட்ட தலையங்கத்தை, அது ஆங்கிலத்தில் இருக்கிறது, இங்கே பதிவு செய்கிறேன், தயவுசெய்து அந்த கட்டுரையில் இணைப்பினை இதில் பதிவுசெய்கிறேன், இதை முற்றாக வாசிக்கவும்.

ஒரு குட்டிபூர்ஷவாவின் பண்பு இதுதான். சமூக பிரச்சனை, மக்களின் துயரங்கள் எதையிட்டும் அது அக்கறைப்படுவதில்லை மற்றும் சுயப்பிரதாபங்களும், குறுகிய சுயநலமும் கொண்டதாக அது எப்போதும் இருந்துவருகிறது. இதனால் வரலாற்றினை அது ஆழமாக அறிந்துகொள்ள அது எப்போதும் எத்தனிப்பது கிடையாது. அதற்கு ஒரு சாதரண சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன், ரோச வசந் எனும், அவரது வார்த்தையில் சொன்னால்,''ஒரு குட்டிபூர்ஷ்வா'', எழுதுகிறார், ''ரோஸா (லக¢சம¢பர¢க¢) ப¤றந¢து இறந¢ததும¢ கூட ஜெர¢மன¤தான¢.'' இது ஒரு சிறிய தவறான புள்ளிவிபரமாகும். ஆனால் இதைக்கூட இந்த நபர் அறிந்துகொள்ளாது அக்கறையற்று எழுதியதே இவரது எல்லாவித அக்கறைகளும் எவ்வளவு பாசாங்குத்தனமானது என்பதை நிரூபித்துவிடுகிறது. 20 நூற்றாண்டின் மாபெரும் (லெனினுக்கு நிகரான)மார்க்சிஸ்டுகளில் ஒருவரான ரோஸ லக்சம்பேர்க் ஜேர்மனியில் பிறக்கவில்லை என்பது உலகறிந்த ஒரு சாதரண உண்மை. இது கூட தெரியாமல் இவர் இதை எழுதியது இந்த குட்டிபூர்ஷவாவின் குணாம்சத்தின் சிறந்த நிரூபணமாகும். தெரியாமல் இருப்பது பெரும் பிழையல்ல, ஒன்றில் எழுதும்போது, அதைப் பலர் படிப்பார்கள் ஆகையால் நாம் எழுதுவது சரியா பிழையா என ஆய்ந்து அறிந்தபின்தான் அதை எழுதவேண்டும். இன்று கூக்கிளில் போய் அவரது பெயரை அடித்தால் போதும், அவர் பற்றிய உண்மை அறிந்துகொள்ளலாம் அதுகூட இவருக்கு பஞ்சியாக இருக்கிறது. யூத வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த ரோச லக்சர்ம்பேர்க் போலந்தில் சமோஸ்க் எனும் நகரில் 1871 ம் ஆண்டு பிறந்தவர், பின்னர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்துதுடன், வலதுசாரி பாசிச இராணுவ பிரிவினரால்,1919 இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப் புரட்சிகர பெண்மணியைப்பற்றி சொல்வதென்றால் நிறைய விடயம் இருக்கிறது. எப்படியிருந்தபோதும், ரோசவசந் மீதான் தனிப்பட்ட தாக்குதலாக இதை நான் எழுதவில்லை. அந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதை சுட்டிக்காட்வே இதை எழுதினேன்.

lena

go and read this link, http://www.wsws.org/history/1997/apr1997/fascism.shtml

Goldhagen's argument

The principal theme of Goldhagen's book is easily summarized. The cause of the Holocaust is to be found in the mind-set and beliefs of the Germans. A vast national collective, the German people, motivated by a uniquely German anti-Semitic ideology, carried out a Germanic enterprise, the Holocaust. The systematic killing of Jews became a national pastime, in which all Germans who were given the opportunity gladly and enthusiastically participated.Germans killed Jews because they were consumed, as Germans, by an uncontrollable Germanic anti-Semitism. Hatred of Jews constituted the foundation of the universally accepted weltanschauung, world view, of the German people.The politics of the regime was of only secondary importance. Goldhagen insists that terms such as "Nazis" and "SS men" are "inappropriate labels" that should not be used when referring to the murderers. Goldhagen seems to suggest that the only essential causal relationship between the Third Reich and the extermination of the Jews was that it allowed the Germans to act, without restraint, as Germans, in accordance with German beliefs.As Goldhagen writes: "The most appropriate, indeed the only appropriate general proper name for the Germans who perpetrated the Holocaust is 'Germans.' They were Germans acting in the name of Germany and its highly popular leader, Adolf Hitler" (page 6).So as not to distract attention from the flow of Goldhagen's astonishing insights, I will not dwell on the fact that Hitler himself was an Austrian, or that his racial theories were plagiarized from the writings of a nineteenth century French count, Gobineau, or that his political hero, Mussolini, was an Italian, or that his chief ideologist, Alfred Rosenberg, hailed from a Baltic province of czarist Russia, or that Hitler's closest comrade-in-arms, Rudolf Hess, was born in Egypt.Rather than ponder the implications of such awkward contradictions, let us move quickly to Goldhagen's conclusion: "that antisemitism moved many thousands of 'ordinary' Germans--and would have moved millions more, had they been appropriately positioned--to slaughter Jews. Not economic hardship, not the coercive means of a totalitarian state, not social psychological pressure, not invariable psychological propensities, but ideas about Jews that were pervasive in Germany, and had been for decades, induced ordinary Germans to kill unarmed, defenseless Jewish men, women, and children by the thousands, systematically and without pity" (page 9).Employing a crude version of Kantian epistemology, Goldhagen argues repeatedly that anti-Semitism was an integral, virtually a priori, component of the cognitive apparatus of the Germans: "the antisemitic creed," he writes, "was essentially unchallenged in Germany" (page 33).



இனி வருவது எனது பதில்.


அன்புள்ள லேனா,

நான்காம் அகிலத்தில் வந்த கட்டுரையின் சுட்டிக்கு மிகவும் நன்றி. நேற்று பதிலாக ஏதாவது எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த கட்டுரையை படிப்பதற்குள்ளேயே தாவி தீர்ந்து போய்விட, வீட்டிற்கு கிளம்ப வேண்டியதாக விட்டது. உங்களை போல இந்த கட்டுரைகளை எழுதியோ படித்தோ சித்திக்க போவதாக கருதும் ஒரு புரட்சியை விசுவாசித்திருக்காத காரணத்தால், என்னை மாதிரி குட்டி பூர்ஷ்வாவிற்கு வீட்டுக்கு போய் சம்சார சாகரத்தில் ஆழ்வது இங்கே பதிலளிப்பதை விட முக்கியமாகிவிடுகிறது.

முதலாளித்துவ சாத்தானின் பார்வை காரணமாக மட்டுமே இந்த உலகில் எல்லா தீமைகளும் தலை விரித்தாடுகின்றன என்ற ஒற்றை விஷயத்தை நிறுவ, சைடுபார் இக்கிணியூண்டாக தெரியும் அளவிற்கு நீளமாய் மாய்ந்து மாய்ந்து இந்த ட்ராட்ஸ்கியிஸ்டுகள் சோறு தண்ணியில்லாமல் எழுதுவதை, சிசிபஸ் பாறாங்கல்லை மலைமீது சுமந்து போகும் உழைப்பின் அபத்தமான படிமம் மூலம் வாழ்விற்கான பொருளை கற்பித்து கொள்ள முடிவது போல், வேறு வகைகளில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இப்படி சொல்வதையும் வலது சாரி குட்டிபூர்வாத்தனம் என்ற முத்திரைக்கு மேல் உங்களால் வேறு எதுவும் சொல்ல முடியாது என்று தெரியும்! இருந்தாலும் அடுத்த முறையாவது நீங்கள் இன்னும் அறிவுபூர்வமான தளத்தில் பேசவேண்டும், மீண்டும் சுட்டி கொடுத்த கட்டுரையை கூட படிக்காத குட்டி பூர்ஷ்வாக்களின் மனநிலை, சமூக அக்கறையின்மை என்று ஜல்லியடிக்க வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக முழுவதுமாய் படிக்க முனைந்தேன். ஆனாலும் முழுவதும் முடியவில்லை.

ரோஸா லக்சம்பர்க் ஜெர்மனியில் பிறந்ததாக போகிற போக்கில் குறிப்பிட்டது பிழைதான். அதற்காக என் பதிவை வாசிப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரோசா பற்றி தமிழ் சிறு பத்திரிகைகளில், எஸ்.வி.ராஜதுரை/வ.கீதா எழுத்துக்களில், பின்னர் இணையத்தில், குறிப்பாக அவரது வாழ்க்கை பற்றி எடுத்த திரைப்படம் இதன் மூலம் மிகவும் குறைவாகவே எனக்கு தெரியும். நான் படித்தவற்றில்/பார்த்த திரைப்படத்தில் நிச்சயமாய் அவர் போலந்தில் பிறந்த தகவல் எங்காவது குறிப்பிடப் பட்டிருக்கும் என்றாலும், என் மண்டையின் தகவல் கிடங்கில் அது ஏனோ தங்கவில்லை. வழக்கமான மரபுசார் மார்ச்சியர்களின் வரட்டுத்தனத்தை மீறி அவர் சிந்தித்திருப்பது என்னை கவர்ந்தது - குறிப்பாக அவர் சக கம்யூனிஸ்ட்களுடன் காட்ஸ்கி போன்றவர்களுடன் செய்த வாதங்கள் - குறிப்பாக தேசியத்தை முன்வைத்த அவரது விமரசனங்கள்; அதை விட முக்கியமாக புரட்சி -அதுவும் தவறாக குறிக்கப்படும் புரட்சி - அதில் வெளிபடும் வன்முறை குறித்த அவரது சுய உணர்வு என்னை கவர்ந்தது; இது எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது அவரது கவித்துவம் நிறைந்த, பேரன்பை உள்ளடக்கிய, நிரம்பி வழியும் காதல்களும் போராளித்தனமும் கொண்ட கடைசி வரையிலான அவரது வாழ்க்கை. இவ்வாறு தத்துவத்தை விட அவர் வாழ்க்கையால் உந்தப்பட்டு, அவர் பெயரை என் புனைபெயருடன் இணைத்து கொண்டு, அவரது பிறப்பிடத்தை கூட நினைவில் வைத்துக் கொள்ளாதது சற்றே வெட்கத்திற்குரியதுதான் என்றாலும், உங்களுடன் பேசும் போது இந்த அல்ப விஷயத்திற்காக வெட்கப்பட தேவையிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் ரோஸாவின் வாழ்வு ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நான் சரியாகவே உள்வாங்கிருக்கிறேன்; சுரண்டலுக்கு எதிரான என் போன்ற ஒருவனையும், ஒரு தகவல் பிழையை முன்வைத்தாவது எப்படி போட்டுத் தள்ளலாம் என்று, தன் சட்டகத்தின் உள் அடங்காத கருத்துக்களை ஒரு மதவாதியின் மூர்க்கத்தோடு எதிர்கொள்ளும் உங்களால், ஒருநாளும் ரோஸாவின் அருகே வர முடியாது.

ஒரு உதாரணம் ரோஸாவின் பிறப்பிடம் பற்றிய தகவல் பிழையை, அதற்கு காரணமான அசிரத்தையை மட்டும் முன்வைத்து நீங்கள் ஜல்லியடிக்கும் குட்டி பூஷ்வான்மை, சமூக அக்கறையின்மை, இன்னும் இதர விஷயங்கள். குட்டி பூர்ஷ்வாக்கள், பூர்ஷ்வாக்கள் ஏகாதிபத்திய ஏஜெண்ட்கள், (லும்பன் பாட்டாளிகள் இந்த விஷயத்தில் சந்தேகம்தான்) மற்றும் மதவாதிகள், யாரானாலும் மிக துல்லியமான தகவல்களுடன், எந்த தகவல் பிழையும் எல்லாமல், மிகுந்த சிரத்தையுடன் எழுத முடியும். எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தகவல் பிழை விடுவதற்கும், குட்டி பூர்ஷ்வா தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி, லேனாவிற்கும் கூட மிக நன்றாகவே தெரியும். ஆனால் கையில் எது கிடைத்தாலும் அதை கொண்டு, எதிராளியை உழைக்கும் மக்களின் விரோதியாய் கற்பிக்கும் முனைப்பில் , இது போன்ற சாதாரண காமன் ஸென்ஸ் கூட இவர்களுக்கு உதவுவதில்லை. நியாயமாய் பார்த்தால் லேனா என்ற ஒரு தனி மனிதரின் இந்த மூர்க்கத்தனம் கொண்டு, எல்லா கம்யூனிஸ்டுகளையும் பொதுமை படுத்த முடியாது என்றாலும், பொதுவாகவே இவர்கள் சிந்தனை இப்படித்தான் விரிகிறது என்பதற்கு இந்த நான்காம் அகிலத்தின் இணையதளத்தின் பல கட்டுரைகளே ஒரு சாட்சி. (அவர்கள் லேனாவை விட இன்னும் அறிவுபூர்வமாய் தோற்றமளிக்கும் மொழியில் எழுதினாலும் உள்ளடக்க அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது.)

நான் எழுதிய சாதாரணப் பின்னூட்டம் ரோஸாவின் வாழ்க்கை பற்றியது அல்ல. ஜெர்மனி பற்றியும் ஆராய்ச்சி பூர்வமாய் எதையும் அங்கே சொல்ல விழையவில்லை. மோகன்தாஸ் 'ஜெர்மனி குறித்த ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறதா?'என்று கேட்டதற்கு, அதை மறுத்து 'ஜெர்மனி காலபந்தாட்டத்தில் தோற்கவேண்டும்' என்று பலரை போல நானும் நினைப்பதற்கு வேறு காரணங்களை எளிதாய் தர்க்கப்படுத்த முடியும். ஆனால் அவர் கேட்டுகொண்டபடி நடுநிலை ஜல்லி எல்லாம் அடிக்காமல், அப்படி ஒரு முன்னபிப்ராயம் இருப்பதை நேரடியாய் ஒப்புக்கொண்டு அளித்த பதில் அது. பதில் தெளிவாகவே 'இருக்கலாம், தெரியவில்லை' என்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. தனக்கு தானே கேட்டுக்கொள்ளும் தொனியுடன் அது எழுதப்பட்டிருப்பதும் சிலருக்கு புரியலாம். ஜெர்மனி பற்றி கொண்டிருக்கும் முன்னபிப்பிராயம் தவறாக இருக்க கூடிய வாய்புகளை கருதி, ஒரு எதிர் உதாரணமாகவே ரோஸாவும் கூட அங்கெ 'பிறந்து இறந்ததாக' குறிப்பிட்டிருந்தேன். சொன்னதன் காரணம், அதன் தொனி, அந்த சந்தர்பத்தில் அதன் பின்னுள்ள வாதம் இது எதையுமே புரிந்து கொள்ள தேவையில்லாமல், ஒரு வார்த்தையில் உள்ள ஒரு தகவல் பிழையை முன்வைத்து இத்தனை ஆராய்ச்சி முடிவுகளுக்கு லேனா போகிறார்.

'குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுக்குணாம்சத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பது சுட்டி காட்ட இதை எல்லாம் எழுதினாராம். என் ஒருவனை வைத்து பொதுகுணம்சத்தை கண்டுபிடிக்கும், இவர்களின் பொது குணாம்சம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஒரு குட்டி பூர்ஷ்வா என்பதை எப்படி கண்டு பிடித்தார்? அந்த பின்னூட்டத்தை படித்து, 'இதை எழுதிய மனிதன் யார்?' என்று தன்னையே வினவிக்கொண்டு மேலே பார்த்த போது, நானே பதிவின் தலைப்பில் எழுதியது கண்ணில் படவும் தெரிந்து கொண்டாராம். மாறாக நான் 'பாட்டாளி' என்றோ, 'நக்சலைட்' என்றோ எழுதிகொண்டிருந்தால் அப்படியே எடுத்து கொள்வாரா என்று அவரை போல மொண்ணையாக நான் கேட்பதில்லை.

ஒருவன் குட்டி பூர்ஷ்வா என்று தன்னையே சொல்லி கொள்வதன் பின்னுள்ள ஒரு அடிப்படை நேர்மை, அந்த வார்த்தைக்கான இந்த சந்தர்பத்தின் பொருள், 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று சொல்வதில் உள்ள சுய எள்ளல், உள்முரண் பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஒரு மொண்ணைதனம் மட்டுமல்ல இது; எதிராளியாய் ஒருவரை கற்பித்து விட்டபின் எதை கொண்டெல்லாம் மர்மஸ்தானத்தில் அடிக்கலாம் என்று பார்க்கும் மூர்க்கம் மட்டுமே லேனாவிடம் வெளிபடுகிறது. (ஏற்கனவே இராம,கி. அவர்கள் சொன்னதுபோல்) வழைமையான பொருளில் என்னை குட்டி பூர்ஷ்வா என்று சொல்ல முடியாது என்ற சிறிய மார்க்சிய அறிவு கூட இல்லாமல்தான் லேனா ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார். (நான் என்ன பொருளில் அப்படி ஒரு பட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே விளக்க முடியாது, அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதிகாரத்தின் விசாரணையற்ற, எந்த ஆபத்துக்கும் வழிவகுக்காத கலகத்தையே வலைப்பதிவில் செய்துகொண்டிருப்பதாக சொல்ல வேண்டிய தேவையினாலேயே, 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்று ஒரு தலைப்பு வைப்பதற்கு பின்னால் உள்ளது என்பதை, பலமுறை அது தவறாக வாசிக்கப் பட்ட காரணத்தால் சொல்ல வேண்டியிருந்தது. )

இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஜெர்மனி பற்றிய பிரச்சனைக்கு வருவோம். 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சாராம்சப் படுத்தி நான் எதையும் சொல்லவில்லை. அது லேனாவின் திரித்தல் மட்டுமே. அவர் மேற்கோள் காட்டியபடி நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் தொடர்புடையதாய் அடைப்பு குறிகளுக்குள் சொல்லியிருப்பது,

"ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது."

இதில் எதை இவர் மறுக்கிறார் என்று புரியவில்லை. 'ஹிட்லரை ஒரு வறலாற்று விபத்தாக பார்க்க முடியாது' என்று சொல்வதை அவர் மறுப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சுட்டியளித்த கட்டுரை அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்கவில்லை. முதாளித்துவத்தின் வளர்ச்சி கூட அதற்கு ஒரு பிண்ணணியாய் இருந்ததை பற்றி கட்டுரை பேசுகிறது. அதனால் ஹிட்லருக்கு துவக்க வெளியையும், பின்னர் ஒரு கூட்டு ஹிஸ்டீரியாவையும் வெகு மக்கள் உணர்வு ஏற்படுத்தி தரவில்லை என்கிறாரா என்று கேட்கவேண்டும். அதற்கு 'ஆமாம்' என்று சொன்னால், புளுகு அல்லது வறலாற்று அறிவு சூன்யம் என்ற இரண்டு நிலையிலிருந்துதான் அவர் பதில் சொல்ல வேண்டும். அதனால் இந்த இடத்தில் லேனா பதில் சொல்ல ரொம்பவே திணர வேண்டும்.

நான் ஹிட்லருக்கு துவக்கத்திலும் பிறகும் எதிர்ப்பே இருந்ததில்லை என்று சொல்லவில்லை. அப்படி சொல்ல நினைத்திருந்தால் ரோஸாவின் பெயரை கூட சாமர்த்தியமாய் உச்சரித்திருக்க மாட்டேன். அன்றய வெகு மக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாகவும், கைப்பற்றிய பிறகு தொடர்ந்த விசாரணைகளை அங்கீகரிப்பதுமாகவே இருந்தது என்பது ஒரு வறலாற்று உண்மை. அவர் சுட்டியளித்த டேவிட் நார்த்தின் கட்டுரையும் இதை மறுத்து பேசவில்லை. இவ்வாறு நான் எழுதி அவரும் மேற்கோள் காட்டிய வரிகளில் அவரால் மறுக்க எதுவும் இல்லாத நிலையில் சொன்னதை திரித்து, 'ஜேர்மானியர்களின் துவேச உணர்வுதான் ஹிட்லிரின் வெற்றியாகும்' என்று சொன்னதாக திரித்து, நான் Goldhagen என்பவர் சொன்னதைத்தான் சொல்வதாகவும் ஒரு புரட்டை முன்வைக்க வேண்டி வந்தது. கோல்தாகென் எழுதிய எதையும் நான் இதுவரை படித்ததில்லை. (இப்போது அவர் எழுதியதை படிக்கும் ஆர்வம் வந்துள்ளது என்பது வேறு விஷயம். அதற்கு லேனாவிற்கு நன்றி.) மேலும் நான் அவர் சொன்னதை சொன்னதாகவும் தெரியவில்லை. (அதாவது அவர் ஒரிஜினலாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, மேற்படி கட்டுரையிலிருந்து அறிந்த வரையில் ...).

கோல்தாகென் என்ன சொல்லியிருந்தாலும், ஜெர்மனியில் நிகழ்ந்த அனைத்திற்கும் அந்த சமுகத்தின் பிரஞ்ஞைக்கு நிச்சயமாய் ஒரு பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸீக்ஃப்ரெட் லென்ஸ் எழுதிய 'நிரபராதிகளின் காலம்' (தமிழில் ஸ்ரீராம் மொழிபெயர்த்தது) என்ற நாடகத்தை படிக்க வேண்டும். (இன்னும் பலரும் இது குறித்து பேசியுள்ளார்கள். அந்த காலகட்டத்தில் குற்றமற்றவர்கள் என்று யாருமே இருக்கமுடியாது என்பதையும், பலரும் (எந்த குற்றத்திலும் நேரடியாய் பங்கு கொள்ளாத ) தங்களுக்கு அதை அனுமதித்ததில் பங்கு உண்டு என்று ஒப்புகொண்டுள்ளனர். ) ஒரு சமூகத்தின் கூட்டு மனநிலையின் உள்ள சிக்கலான பிரச்சனைகளை வரட்டு மார்க்சியத்தால் ஒரு நாளும் உள்வாங்க முடியாது. ஒருவகையில் டேவிட் நார்த் தன் கட்டுரையின் தொடக்கதில் சொல்வதை போலவே, இந்த வறலாறும் அது தரும் தகவல்களும் தர்க்கத்திற்கு தர்க்கப்படுத்துதலுக்கும் அப்பாற்பட்டே இருக்கிறது. ஆனால் இந்த படுகொலை வறலாற்றின் வேர்கள் ஜெர்மனிய சமூகத்தின் பிரஞ்ஞையில், அதன் மரபில், எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியமானது.

ஜெர்மனியில் மட்டுமின்றி, குஜராத்தில் கூட அந்த மாநிலத்திற்கு பிரத்யேகமான பிரச்சனைஇருக்கிறதா என்று பார்ப்பதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குஜராத்தின் வறலாற்றில், அங்கே நிலவிய அதீதமான சமஸ்கிருத மயமாக்கலில், இடதுசாரி அரசியலின் பாதிப்பே இல்லாமல் இருக்கும் சமூக யதார்த்தத்தில், அதன் சாதி சார்ந்த புள்ளிவிவரத்தில், அதன் வெகு மக்கள் உணர்வில் அதன் நம்பிக்கைகளில், அங்குள்ள பிரத்யேக முதாலாளித்துவ வறலாற்றில் இருக்கிறதா என்ற ஆய்வு மிக முக்கியமானது. ஆனால் இவை எதுவுமே ஒரு சாராம்சபடுத்துதலாக இருந்தால் அதுதான் ஆபத்தானது.

அந்த வகையில் கோல்தாகெனின் புத்தகத்தில் நாஜிக்களில் எழுச்சி அனைத்திற்கும் ஜெர்மானிய மனநிலையும், ஜெர்மானிய நம்பிக்கைகளும் *மட்டுமே* என்று சாராம்ச படுத்தியிருந்தால் அது எனக்கு ஏற்புடையதன்று. மாறாக ஜெர்மானிய நம்பிக்கைகளும், சமூக மனநிலையும் என்ன வகை பங்கு வகித்தது என்ற ஆய்வில் இறங்கியிருந்தால் அது மிக முக்கியமானது. டேவிட் நார்த் தருவதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வருவது எனக்கு சாத்தியமில்லை. ஏனெனில் மார்க்சியர்கள் திரிப்பதில் வல்லவர்கள். (லேனா எழுதிய பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே) இதை நேர்மையின்மை என்று சொல்ல முடியாது. ஒரு மத நம்பிக்கையை ஒத்த அணுகுமுறையே அதற்கு அடிப்படை காரணம். காண்டின் கச்சாவான ஒரு எபிஸ்டமாலஜியை (crude version of Kantian epistemology) கோல்தாகென் பயன்படுத்துவதாக டேவிட் சொல்கிறார். காண்டை அறிவுபூர்வமாய் பயன்படுத்தவில்லை என்கிறாரா அல்லது காண்டிற்கும் ஒரு பூசை வைக்கிறாரா என்று புரியவில்லை. நேரடியாய் படித்தால்தான் சொல்லமுடியும். (லேனா WSWS கட்டுரை தவிர்த்து கூகுளில் தேடினாரா என்று தெரியவில்லை. நான் தேடி படித்த வரையில் கோல்தாகெனை ஏற்றுகொள்ள முடியும் என்று தோன்றவில்லை, ஆனால் கணக்கில் கொள்ள வேண்டியதாகவே தெரிகிறது. ஆனாலும் கூட நேரடியாக படிக்காமல் இன்னமும் எந்த முடிவிற்கும் வர இயலாது.)

ஆனால் டேவிட் நார்தின் பிரச்சனை என்னவெனில் அவர் தன் காலில் தானே கட்டிகொண்டிருக்கும் ட்ராஸ்ட்கியிச சங்கிலி. உதாரணமாய் கட்டுரையின் துவக்கத்தில் ஹோலோகாஸ்டிற்கான காரணங்கள் எளிதான புரிதல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதாக, தர்க்கத்திற்கு அப்பால் இருப்பதாகவும் சொல்கிறார். கொஞ்சம் கவித்துவமாய் கூட பேசுகிறார். ஆனால் கட்டுரை முழுக்க அன்று பரிணமித்து வந்த முதாலாளித்துவமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று நிறுவ படாத பாடு படுகிறார். இப்படி நகைச்சுவையாய் கட்டுரை போய்விடுவதால், அவர் அர்த்தமுள்ளதாய் எதாவது விமர்சனம் வைத்திருந்தாலும், அதுவும் அதில் அடித்து செல்லப்பட்டு விடுகிறது.

சரி, லேனா, டேவிட் நார்த் இவர்களை விட்டுவிட்டு எனது பின்னூட்ட துணுக்கிற்கு வருவோம். நான் ஹிட்லர் மட்டும் எனக்கும் மற்ற பலருக்கும் இருக்கும் ஜெர்மனி பற்றிய முன்னபிப்ராயத்தித்ற்கு காரணமில்லை என்றே சொல்லியிருக்கிறேன். அந்த முன்னபிப்ராயத்துடன் எனக்கு மிக தீவிரமான பிரச்சனைகளும் உண்டு. இது ஒரு உலகளாவிய உணர்வாக இருப்பதையும் காணமுடியும். நானும் இந்த உணர்வை பகிர்ந்து கொண்டாலும், இதன் பின்னுள்ள அரசியலையும் கவனிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

ஜெர்மனி மீது மேற்கின் மனநிலை கொண்டிருக்கும் முன்னபிப்ராயத்தை நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெர்மனி ஒரு காலத்திலும் மற்ற பிரிடீஷ், பிரான்ஸ், ஸ்பெயின், போர்சுகிஸ், டச்சு காரர்களை போல ஒரு ஐரோபிய காலனி அமைக்கவில்லை. மீண்டும் வாசிக்கவும். நம்மை போன்ற முன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை ஜெர்மனி தவிர்த்த ஐரோப்பா காலனியாக்கியது. அந்த ஐரோப்பாவையே ஜெர்மனி தனது காலனியாக ஆக்கிக் கொண்டது. இதில் ஜெர்மனிக்கு எதிரான கற்பிதங்களும் ஒரு காலனிய மனோபாவமும், காலனிய அடிமை மனோபாவமும் கொண்டது என்பது எனக்கு இருக்கும் ஒரு பார்வை. இதுதான் எனது அடிப்படை பார்வை அல்ல. இப்படி ஒரு பார்வையில் ஜெர்மனி மற்றிய கற்பிதத்தை மறுபரிசீலனை செய்தும் எல்லாவற்றையும் மீள வாசிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இதை நிச்சயமாய் மார்க்சியர்கள் ஒரு நாளும் சாத்தியமாக்க போவதில்லை.


இன்னும் கொஞ்சம் இன்றய முதாலாளித்துவத்தின் bruttalதன்மை, அது எதிர்காலத்தில் அதிகமாக மட்டுமே இருக்கும் வாய்ப்பு, அது தரப்போகும் அழிவு, தவிர்க்க முடியாமல் மார்க்சையும் அவர் எழுத்துக்களையும் மறுவாசிப்பு உட்படுத்தப் பட வேண்டிய தேவை இதை பற்றி எழுத நினைத்தேன். மணி இரவு ஒன்றாகிவிட்டது. வீட்டிற்கு கிளம்பவேண்டும். அடுத்த பதிவாய் இதை எல்லாம் எழுதலாம்தான். ஆனால் இப்படி எதற்காகவாவது பதில் சொல்ல நேரும் போது இருக்கும் உத்வேகம் பிறகு இருப்பதில்லை (ஈகோ?). பார்போம்!

உள்ளே இடும் முன் லேனாவிற்கு ஒரு கேள்வி. சில வருடங்கள் முன்னே, திண்ணையில் 'திராவிட திண்ணை, மஞ்சள் இந்துத்வம்... 'என்று ஒரு கட்டுரை (அ. மார்க்ஸையும் இடையில் நாலு சாத்து சாத்தி) எழுதியது நீங்கள்தானே? (அது தெரிந்தும் இந்த பதிலை ஏன் எழுதினேன் என்று பிறகு யோசித்து கொள்கிறேன்.)

10 Comments:

Blogger ROSAVASANTH said...

அன்புள்ள சுரேஸு, தகவலுக்கு நன்றி.

Hஇட்லர் ஆஸ்டிரியாவில் பிறந்தார் என்பது எனக்கு முன்னமெ தெரியும் என்று சொன்னால் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். பள்ளி பாடத்திலிருந்து படித்து வருகிறேன். எதற்காக இந்த தகவலை கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. ஆஸ்ட்ரியாவை ஜெர்மனியின் பகுதியாகத்தான் இட்லர் உட்பட்ட நாஜிக்கள் கருதிக் கொண்டார்கள்.

ஆனால் நீங்கள் இரண்டாவதாய் அளித்த விக்கிபீடியா தகவல் முக்கியமான்னது. அப்படி இப்படி இருக்கும் என்று தெரியும் என்றாலும் ஜெர்மனிக்கு இத்தனை காலனிகள் இருந்தது உங்கள் சுட்டி மூலம்தான் தெரியும். அதற்கு நன்றி. அதை சரியாய் தெரிந்து கொள்ளாமல் ஸ்டேட்மெண்ட் விட்டதற்கு மன்னிக்கவும். ஆனாலும் பிரிடீஷ் அளவிற்கு பிரான்ஸ் அளவிற்கு காலனித்துவ படுத்தவில்லை அல்லவா?

எனினும் நான் கூறியது ஜெர்மனி ஐரோப்பாவையே தன் காலனியாக்கியது, ஆக்க முயன்றது. இந்த நிலையில் நம்மை காலனித்துவம் செய்தவர்கள், ஜெர்மனி பற்றி ஏற்றிவிட்ட முன்னபிப்ப்ராயம் பரிசீலனைக்கு உரியது என்பதுதான் நான் சொன்னது. முக்கிய்மான கருத்தாய் உங்களுக்கு தோன்றுகிறதா?

பின்னூட்டத்திற்கு நன்றி.

1:53 AM  
Blogger ROSAVASANTH said...

(லேனாவின் பின்னூட்டம் மின்னஞ்சலில் வந்தது, ஆனால் இங்கே காணவில்லை. ஏதாவது ஏகாதிபத்திய சதி இருக்குமோ என்று தேடியதில், அவர் பழைய பதிவில் தன் பின்னூட்டத்தை இரண்டு முறை அளித்திருந்தது தெரிந்தது. அதை கீழே இடுகிறேன். அவர் வெட்டி ஒட்டிய ஆங்கில கட்டுரையை நீளம் காரணமாய் தரவில்லை. கட்டுரைக்கான சுட்டியை மட்டும் தருகிறேன். நன்றி.)

ரோசா வசந் (எனும் அ.மார்க்ஸ்) தின் பதிலானது, கோபத்தால் ஏற்பட்ட ஒரு அகவய தாக்குதலாகும். நான் கீழே ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் கட்டுரைகளை நேரம் எடுத்து ஆழமாக படியுங்கள், அப்புறம் ஒரு வரலாற்று தெளிவு உங்களுக்கு வரும். அப்போது நாம் மேற்கொண்டு உறுதியுடன் விவாதிப்போம். நான் உலக சோசலிச வலைத்தளத்தின் நீண்டகால வாசகன், அதனால் தான் உங்கள் எழுத்தில் இருந்த தவறினை சுட்டிக்காட்டவும், அது எதை பிரதிநித்துவம் செய்கிறது என்பதையும் சொல்ல வேண்டி தள்ளப்பட்டேன்.

முன்னர் நான் ஏன் உங்களுக்கு எழத தள்ளப்பட்டேனோ அதோ பிழையை மீண்டும் குறிப்பிடுகிறீர்கள்,'' நான் ஹிட்லருக்கு துவக்கத்திலும் பிறகும் எதிர்ப்பே இருந்ததில்லை என்று சொல்லவில்லை. அப்படி சொல்ல நினைத்திருந்தால் ரோஸாவின் பெயரை கூட சாமர்த்தியமாய் உச்சரித்திருக்க மாட்டேன். அன்றய வெகு மக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாகவும், கைப்பற்றிய பிறகு தொடர்ந்த விசாரணைகளை அங்கீகரிப்பதுமாகவே இருந்தது என்பது ஒரு வறலாற்று உண்மை.”
ஏன் நீங்கள் எதையும் ஆழமாக அறிந்துகொள்ள முற்படுவதில்லை. இப்படி குறிப்பிடுவதன் ஊடாக நீங்கள் எதை வலியுறுத்துகிறீர்கள், எந்த விஞ்ஞான விளக்கத்தின், புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இந்து முடிவுக்கு வருகிறீர்கள்? இப்படியாக எழுதிவிட்டால் உங்கள் வலைப்பக்கத்தை படிப்பவர்கள் ரோசா வசந்தின் இந்த முடிவானது, வரலாற்று உண்மைகளையும், புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட பெரும் ஆய்வில் இருந்து வந்ததாக நினைத்துவிடப்போகிறார்களா? இது ஒரு சின்னப்பிள்ளைத்தனமான பதிலையும், விளக்கத்தையுமே காட்டுகிறது.

'வெகுமக்கள் உணர்வு' என்பதன் கீழ் சமூக வர்கங்களுக்கிடையான முரண்களை விளங்கிக்கொள்வதை தவிர்க்க முயல்கிறீர்கள். பொத்தாம் பொதுவாக 'வெகுமக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாக இருந்தது என்பது வரலாற்று உண்மை' என்று நீங்கள் குறிப்பிடுவது, வரலாற்றின் ஒரு பெரும் கொடூர நிகழ்வு ஏன்,எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ள எவ்வித பங்களிப்பையும் செய்யவில்லை. ஆழமாக ஒரு ஆய்வினை ஊடாக அல்லது ஒரு ஆய்வினை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் அது உண்மையில் வரலாற்றின் உண்மை மீது ஒரு அக்கறை கொண்ட மனிதரின் செயலாக இருந்திருக்கும். இது எதையும் தொடாமால் பொத்தாம் பொதுவாக அகவயரீதியாக கருத்துக்களை எழுதுவது, ஒரு அக்கறையற்ற தன்மையை காட்டாமல் எதைக்காட்டுகிறது?

வரலாற்று ஆய்வுகள், புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருத்தினை வைப்பது உங்களுக்கு அவசியமற்றதாக இருக்கிறது. ஏன் பாசிச வடிவத்தினை ஜேர்மானிய நிதி மூலதனம் தேர்ந்தெடுத்தது? எப்படி ஹிட்லர் ஆட்சிக்கு வரமுடிந்தது? என்ன காரணிகள் அதற்கு உந்துதலாக இருந்தன? எந்த வரலாற்று நிலைமைக்குள் பாசிசம் அபிவிருத்தியடைந்தது? ஹிட்லரின் வருகை தவிர்க்கப்பட முடியாதிருந்ததா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்ள முயலும் போது, தங்களது விளக்கமானது மேலெழுந்தவாரியானது என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

'’’ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது’’, ‘’அன்றய வெகு மக்கள் உணர்வு நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவாகவும், கைப்பற்றிய பிறகு தொடர்ந்த விசாரணைகளை அங்கீகரிப்பதுமாகவே இருந்தது என்பது ஒரு வறலாற்று உண்மை ‘’ இப்படி வெறுமையாக குறிப்பிடுதவன் ஊடாக, உண்மையை அறிந்துகொள்வதை நிராகரித்து விடுகிறீர்கள். இதனால் தான் உங்கள் கருத்து மேலெழுந்த வாரியாகவும், மூக்குக்கு மேலே பார்க்கதெரியாத குட்டிமுதலாளித்துவ தன்மையையும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கு மேலாக, டேவித் நோர்த் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு மேலான தங்களின் அகவயரீதியான தாக்குதல் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. இதை நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் சரி உண்மையானது, வலது சாரிகளின் எல்லாவித கீழ்த்தரமான தாக்குதலுக்கும் எதிராக தன்னை வருங்கால சந்ததியிடம் நிலைநிறுத்திக்கொள்ளும்.

கீழ்காணும் இணைப்புகளை கண்டிப்பாக படியுங்கள். புரிந்துகொண்டால், குளப்பங்கள் இருந்தால் மேலதிக விளக்கத்திற்கு நீங்கள் அவ்வலைத்தளத்தின் ஆசிரியர்களை தொடர்புகொள்ளலாம்.


நன்றி

http://www.wsws.org/articles/2002/dec2002/corr-d05.shtml

2:04 AM  
Blogger ROSAVASANTH said...

//ோசா வசந் (எனும் அ.மார்க்ஸ்) தின் பதிலானது...//

அய்யோ..ஆளை விடுங்க சாமி. தெரியாம வாயை குடுத்து விட்டேன். உங்க பதிவில் உங்க கருத்த விரிவா எழுதுங்க. என்னை திருத்தி என்ன சாதிக்க போகிறீர்கள்? எனக்கு ஏகாதிபத்தியத்தை விட காம்ரேடுகளை கண்டால் இன்னும் பயம் அதிகம். விட்டுவிடுங்களேன் ப்ளீஸ்!

(சுரதாவில் தட்டுவதால் வரும் எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்.)

2:09 AM  
Blogger ROSAVASANTH said...

லேனா அளித்த சுட்டிகளை நான் முழுமையாய் தரவில்லை. (முதலில் அதை சரியாக வாசிக்காததால்.) கீழே அவைகளை தருகிறேன்.

http://www.marxists.org/archive/trotsky/works/1930-ger/320914.htm

http://www.wsws.org/articles/2003/dec2003/hohm-d23.shtml
http://www.wsws.org/articles/1999/sep1999/nazi-s23.shtml

http://www.wsws.org/articles/2005/oct2005/le85-o10.shtml
http://www.wsws.org/articles/2001/sep2001/wehr-s20.shtml

http://www.wsws.org/articles/2000/jun2000/nov-j29.shtml
http://www.wsws.org/history/1997/apr1997/fascism.shtml

http://www.wsws.org/articles/2002/dec2002/corr-d05.shtml

அவருடைய முழுமையான பின்னூட்டத்தை இந்த சுட்டியில் காணலாம்.

http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post.html#c115224273277828283

3:23 AM  
Blogger ROSAVASANTH said...

http://madippakkam.blogspot.com/2006/07/blog-post_115269967624063871.html

நம்ம ஆட்கள் என்று யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொதுவான தமிழனை குறிக்கிறீர்கள் என்றால், 'தேவடியா மவனே' என்று சொலவதற்கு நீங்கள் சொல்வது போட்டு தூக்கிப் போட்டு மிதித்து ஒரு எதிர்வினை வைக்க நேரிடலாம். ஆனால் இனரீதியாய் ஒரு வெள்ளைகாரன் திட்டினால் இப்படி ஒரு எதிர்வினை வராது. நீங்கள் சொல்லும் திராவிடத் தமிழனின் அடிமை புத்தி அத்தகையது. (ஐரோப்பாவில் வாழும் பல தமிழர்கள் வெள்ளையனை விட மிக மோசமாக அரேபியர்களை கருப்பர்களை பற்றி பேசக்கூடியவர்கள் என்பது வேறு விஷயம்.)

4:36 AM  
Blogger ROSAVASANTH said...

http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115335931758664622.html
டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியா? சரி, இருக்கட்டும். ஆனால் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கும் இதைவிட தீவிரமாக இந்த வாதத்தை பயன்படுத்த முடியுமே!?

1:46 AM  
Blogger ROSAVASANTH said...

http://bhaarathi.net/sundara/?p=278

தங்கமணி, ரவி ஸ்ரீனிவாசின் முட்டாள்தனமான எழுத்து கூட
எனக்கு எரிச்சல் அளிக்கவில்லை. பக்கிங்காம் கேனாலை தினமும்
தாண்டும் போது, அதன் நாற்றம் பழகிப்போவது போல்.

அவருக்கு இத்தனை சீரியசாய் நீங்கள் அளித்த பதில்தான் எரிச்சல்
தருகிறது. தான் இன்ன சாதியை சேர்ந்தவன் என்று அடையாளப்படுத்தி
கொண்டு ஒரு போருக்கு தயாராவதாய் எழுதி (அதை இன்றுவரை ஒரு
கோபத்தில் வார்த்தையை விட்டதாக கூட ஒரு விளக்கம் தராததை
நினைவில் வைக்கவும்) தன் சாதி வெறியை நேரடியாய் காட்டிக்
கொண்ட ஒருவருக்கு இத்தனை நிதானமாக பதில் தருவதன்
பின்னுள்ள பார்வை என்ன? இந்த நிதானத்தை மற்ற பல பார்பனிய
கருத்துக்களை அள்ளி வீசுபவர்களுக்கு உங்களால் ஏன் அளிக்க இயலவில்லை
(உதாரணமாய் முகமுடிக்கு) ?

இன்னமும் கூட ரவி எழுதும் அருவருக்கத் தக்க எழுத்துக்களுக்கு
நீங்கள் அளிக்கும் அங்கீகாரம்தான் எரிச்சல் தருகிறது.

4:28 AM  
Blogger ROSAVASANTH said...

http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_27.html

//தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. //

அணு ஆயுதத்திற்கும் இது பொருந்தும்; இதற்கு மேலும் பல விஷயங்கள் பொருந்தும். உதாரணமாய் அணு ஆயுதம் பயன்படுத்தப் படாத போது கூட சிறந்த ஆயுதமாய் சில காரியங்களை சாதிக்க பயன்படும்.

12:29 AM  
Blogger ROSAVASANTH said...

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

தேவரின் சாதி வெறி பற்றிய பல ஆதரங்களை நீங்கள் அளித்திருப்பது முக்கியமானது. இன்று எல்லா கட்சிகளும் (பாமக உட்பட, திருமா இன்னும் கலந்து கொள்ளவில்லை என்று இன்னமும் நம்புகிறேன்) தேவர் ஜெயந்தி போன்ற ஒரு ஆபாசத்திருவிழாவில் கலந்து கொள்ளும் போது இது போன்றவற்றை தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. முதுகுளத்தூர் கலவரத்தின் போதும் பெரியார் மட்டுமே முத்து ராமலிங்கத்தின் கைதை வரவேற்று பேசினார். பல காரணங்களால் தேவர் ஜாதி வெறி குறித்த சமரசம் பல இடங்களில் மேற்கொள்ளப்படுவதால் இந்த விஷயங்களை நாம் தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. மிக்க நன்றி!

12:05 AM  
Blogger ROSAVASANTH said...

http://maruthanayagam.blogspot.com/2006/08/blog-post_01.html

ஒற்றுமைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

யூதர்கள் ஐரோப்பா முழுவதும் (கவனிக்க வேண்டியது முஸ்லீம்களால் அவர்கள் பட்டதை விட மிக மிக பல்லாயிரம் மடங்கு அதிகமாக) காலகாலமாக வேட்டையாடப்பட்டனர், துன்புறுத்தப் பட்டனர், இழிவு படுத்தப் பட்டனர். ஆனால் அப்படி எதையுமே அனுபவித்திராத பார்பனர்கள் அப்படி ஒன்றை கடந்த ஒரு நூற்றாண்டாய் அனுபவிப்பதாக தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டு உலக மகா புளுகை கூசாமல் சொல்வார்கள்.

12:38 AM  

Post a Comment

<< Home

Site Meter