கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, October 27, 2010

நோய் காமெடியன்கள்.

என்னாதான் உள்ளடக்கச் சரக்கே இல்லாவிட்டாலும், என் பதிவிற்கு பதிலாக இரண்டு பதிவு போட்டதற்கு, நாம் ஒரு குட்டிபதிவாவது பதில் போடாவேண்டாமா? மற்றபடி ஏதாவாது திடுக்கிடும் ஆதாரங்கள் (அப்படி எதுவும் யதார்த்தத்தில் இல்லாத காரணத்தால் பொய்கள்) வந்தால் ஒழிய இனி இதை நான் எதிர்கொண்டு எழுத மாட்டேன்.

நாம் இயல்பான சிந்தனை என்று நினைப்பதற்கு நேரெதிர் விநோதமாக, எப்படி வேறு சிலர் அதே இயல்பாக யோசிக்க கூடும் என்று சும்மா சம்பந்தமில்லாமல் யோசித்த போது தோன்றியதை நேற்று பின்னூட்டமாக எழுதியிருந்தேன். சுரேஷ் கண்ணனை நான் முதலில் திட்டவில்லை. அவர்தான் மோசமாக திட்டினார். நான் பதிலுக்கு நிதானம் காத்து அவர் என்னை பற்றி சொன்னதற்கு விளக்கத்துடன் எழுதுமாறு கேட்டேன். அவர் நேர்மையான பதிலை நிச்சயம் தரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு என் காட்டமான பதிலை எழுதினேன். மிக தெளிவாக நான் சீண்டியதாக, அவரை திட்டியதாக, பொது சந்திப்பில் அவரிடம் அநாகரிகாமாக நடந்ததாக சொல்லியதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மறுத்து, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி ஆதாரம் தரசொல்லி கேட்டு எழுதியிருக்கிறேன். இன்னமும் வேறு எதையோ ஜல்லியடிக்கிறாரே ஒழிய, நான் எங்கே சீண்டினேன், அவரை பற்றி இது வரை என்ன ஆபாசமாக எழுதினேன், பொது சந்திப்பில் என்ன அநாகரிகமாக நடந்தேன் என்பதற்கு பதில் இல்லை. இவ்வளவு எழுதும் ஆசாமிக்கு இதை ஒரு நாலுவரி எழுத, இவ்வளவு உதார் விட்ட பிறகும் செய்யவேண்டுமே என்கிற துப்பில்லை. அட, ஆதாரமும், பதிலும் இருந்தால்தானே சொல்லமுடியும். இவ்வாறு அவர் பதில் சொல்லாமல் வெட்டியாக வேறு எதையோ எழுதுவதையும், மேலும் மேலும் என்னை பற்றி ஆதாரமில்லாமல் மோசமாக எழுதுவது பற்றியும் நான் கவலைப்படமுடியாது. வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று (அவர்களை போல் வாய்பேச்சில் இல்லாமல் உண்மையாக) புறக்கணிப்பதுதான் நான் செய்யகூடியது.

ஆனால் இப்போது பல யோக்கியசிகாமணிகள் இதில் செட்டு சேர்ந்து போகிற போக்கில் கருத்து சொல்லிவிட்டு போகிறார்கள். நான் வலைப்பதிவை விட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விலகியிருக்கிறேன். சு.க. தொடர்ந்து எழுதுவதால், நாலுபேர் 'தல, வாங்க ஒரு கை பாத்துரலாம்' என்று, சுரேஷ் ரொம்ப வெறுக்கும் சில்லூண்டித்தனமாக எழுதுவது ஒகே. பொதுபுத்தியில இதெல்லாம் சகஜம். தர்க்கரீதியாய் எதுவுமின்றி சல்லித்தனமாக சொல்லிவிட்டு ஓடுபவர்கள் பற்றி என்றைக்கும் கவலையில்லை. அல்லது ரொம்ப நாளாய் 'சீரியசான' சமாச்சாரங்கள் பற்றி சு.க. எழுதிவருவதால், 'கவலை விடுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்' என்று மொட்டையாக அவருக்கு 'தார்மீக ஆதாரவு' தெரிவித்து வரும் பின்னூட்டமும் ஒகே. இப்போது அதை தாண்டி உளவியல் நிபுணர்களும், வேறு சில யோக்கிய சிகாமணிகளும் கிளம்பியிருக்கிறார்கள். சமூகத்தின் புற்று நோயே இவர்கள்தான்.

பொதுவில் கருத்து சொல்லும் தைரியம் இல்லாத ஒரு பேர்வழி, பெயர் சொல்லாமல் கருத்து மட்டும் சொல்லியிருக்கிறது. அந்தாள் பேர் வராவிட்டாலும், கடிதத்தில் வெற்றாக விடப்பட்ட மற்ற பெயர்கள் யாருடையன என்பதை ஊகிக்க முடியும். அது கருத்து அல்ல கழிவு என்றால், திட்டுகிறான் என்று திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூட புரியாமல், அல்லது புரிந்து கொண்டு பொய்யாக போகிற போக்கில் மற்றவர்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலையின்றி, எதோ அறிவுஜீவி போல நடித்து கருத்து சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம்? சுரேஷ் தனியாக 'சீண்டினான் ..தாக்கினான்' என்று ஆதாரம் தராமல் புலம்பினால் பரிதாபம் கூட கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் கல்லெறிந்து, மேதாவித்தனம் காட்டும் இந்த பேர்வழிகளின் நோய் உளவியல்தான் சுவாரசியமானது. அதிலும் நோய் உளவியல் உளவிலாராய்ச்சி செய்வதுதான் இன்னும் சுவாரசியம். இதில் மாதவ்ராஜும் சேர்ந்திருக்கிறார்.

இந்த மாதவ்ராஜ் எழுதிய அப்பட்டமான அரசியல் ஹிபாக்ரசி பதிவுகளாக, இலங்கை பிரச்சனை பற்றியும், தோழார் வரதராஜன் மரணத்தை பற்றியும் வாசித்திருக்கிறேன். அதெல்லாம் அவர் கோளாறு மட்டுமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கோளாறு. மற்றபடி நான் அவரை வாசித்ததில்லை, வாசிப்பதில்லை. ஆனால் இப்போது அவர் செய்திருப்பதற்கு அவரது இயல்பு கோளாறு மட்டுமே காரணம்.


அய்யா..மாதவராஜ்.. இந்த நாட்டாமை வேலை ரொம்ப அயோக்கியத்தனம் அல்லவா? நடந்தது என்னவென்றாவது தெரியுமா? அந்தாள் என்னை பற்றி அபாண்டமாகவும், மோசமாகவும் திட்டிவிட்டு, நான் இவ்வளவு provoke செய்தபிறகும் எந்த யோக்கியமான பதிலும் ஆதாரமும் தராமல் எழுதுவதை எல்லாவற்றையும் வாசித்து பார்த்தீர்களா? உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையெனில் விட்டுவிடலாம்; மௌனமாக இருக்கலாம். போகிற போக்கில் அடித்தவனுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவனை தாக்கும்விதாமாக எழுதுவது என்ன வகை முற்போக்குத்தனம்? நாட்டமையாக எதுவும் சொல்லவில்லையே என்று சமாளிக்க முடியாது. உங்கள் பின்னூட்டம் யாரை மதிக்கிறது, யாரை சீண்டல்பேர்வழி, அரட்டை பேர்வழி என்கிறது என்பது தெளிவு.

பொதுபுத்தி எவ்வளவு லூஸுத்தனமாக வேண்டுமானாலும் சிந்திக்கும் என்று தெரியும். அது யோக்கிய வேஷம் போடுவதும் சகஜம்தான். ஆனால் அறிவுபோலவும், விவேகம் போலவும் வேஷம் போடுவதை இங்கேதான் பார்க்கிறேன்.

(இதை சுனா கானாவின் பதிவில் பின்னூட்டமாக எழுதினால் வராது என்று தெரியும். மேலும் எனக்கு விருப்பமில்லை. அதனால் இங்கே போட்டிருக்கிறேன். இதற்கான பதிலை யோக்கிய சிகாமணிகள் இங்கே எழுதலாம். எழுத வரவேற்கிறேன். ஆனால் எச்சரிக்கை: பிரித்து மேயப்படும். ஆனால் ஏற்கனவே ட்விட்டரில் நான் அறிவித்தபடி புதன் வந்துதான் பின்னூட்டங்களை அனுமதித்து தேவையானால் பிரித்து மேயமுடியும்)

14 Comments:

ROSAVASANTH said...
சுரேஷ் கண்ணனுக்கு தன் பக்கம் நியாயம் எதுவும் கிடையாது என்று நன்றாக தெரியும். அதனால் தன் யோக்கியவாதி இமேஜை சாமாளித்து நிறுத்துவதற்காக தொடர்ந்து இப்படி எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் எதற்காக புறக்கணிக்க வேண்டும், புறக்கணியுங்கள் என்று சொல்லியபடி சுனா கானாவின் அதே காமெடி சீனை தாங்களும் மறு ஆக்கம் செய்கிறார்கள்?

10/15/2010 2:01 PM
மணிகண்டன் said...
ரோசா, சென்றமுறை பொது புத்தியில் உங்களை அனைவரும் தாக்கியபோது நீங்கள் ப்ளாக் செய்தவரில் நானும் ஒருவன். சுந்தரின் பதிவில் நான் உங்களுக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. நீங்கள் ட்விட்டரில் வந்து தற்செயலாக கேபிள் சங்கரின் குறும்படத்தை பார்த்ததாகவும், தமிழ்மணத்தை சுற்றி வந்தபோது நர்சிம்மின் பதிவை பார்த்ததாகவும் எழுதினீர்கள். அப்பொழுது உங்களிடம் அடுத்தது யார் தற்செயலாக "சுரேஷ் கண்ணனா" என்றேன். உடனடியாக ப்ளாக் செய்தீர்கள். நல்லது தான். ஏனென்றால் கோபத்தை கட்டுபடுத்தமுடியாமல் அடிப்பதை விட, இது போன்ற கேள்வி கேட்பவர்களை ப்ளாக் செய்வது சரியானது தான். நல்ல பாடம் கற்று கொண்டீர்கள் என்று தான் நினைத்தேன்.


ஆனால் நான் கேட்ட கேள்வியான அடுத்தது சுரேஷ் கண்ணனா என்பதற்கு அவரே ஒரு சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமல் தர்க்கரீதியாக அருமையாக அடித்துள்ளீர்கள். நல்லது.


சுந்தரை குறித்தும் சிவராமன் /வினவு பதிவின் போது மறுபடியும் ஆரம்பித்தீர்கள். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கவலைப்படாதீர்கள். அவரும் ஏதாவது தவறு செய்வார். அப்பொழுது அடிக்கலாம். காத்திருப்போம்.

10/15/2010 2:31 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
கோவி.கண்ணன் said...
//'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' //

வழிமொழிகிறேன்.

Kaarthik said...
நான் எண்ணியதையே தங்கள் நண்பரும் கூறியுள்ளார், சற்று அருமையான நடையில். தாங்கள் இதுபோன்ற வம்புச் சண்டைகளிலிருந்து விலகி தங்களுக்கே உரித்தான அற்புத பதிவுகளை என்னைபோன்ற விசிரிகளுக்காக மீண்டும் எழுதத் துவங்க வேண்டுகிறேன். Ignore them and pls come back to your form.

வடகரை வேலன் said...
சுரேஷ் கண்ணன்,

சில மாதங்களுக்கு முன்பே இதை நான் தங்களுக்குத் தனி மடலில் எழுதி இருந்தேன். இது ஒரு மாயச் சுழல் மாட்டிக் கொண்டால் பாழாவது உங்கள் படைப்புத் திறன் என்று.

அதுவேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

விரைவில் வெளியே வந்து விடுங்கள்.


எப்படிப்பா இதெல்லாம்? நீங்கள்ளாம் தமிழ் படிக்க தெரிந்தவர்கள்தானே. எதோ பத்தாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கதானே? (பத்தாங்கிளாஸ் எனபது சும்ம உருவகம், ஏட்டு சுரிக்காய் கறிக்குதவாது என்று தெரியும்) போற போக்கில் இப்படி எல்லாம் சொல்ல வெக்கமாவே இல்லையா? சோத்துக்கு பதில் வேற எதையாவது தின்கிறீர்களா?
(ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் இந்த பின்னூட்டத்தை என் பதிவில் இடுவதற்கு பதில் சுரேஷ் கண்ணன் பதிவில் இட்டுவிட்டேன். அதுவும் நல்லதுதான். வெளிவந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.)

10/15/2010 4:37 PM
மணிகண்டன் said...
ரோசா, நரசிம், கேபிள் சங்கர் மற்றும் சுரேஷ்கண்ணன் சுந்தர் விஷயத்திற்கு பிறகு உங்களை குறித்து பதிவோ / காட்டமாக பின்னூட்டமோ போட்டார்கள். நீங்கள் ட்விட்டரில் எழுத ஆரம்பித்தவுடன் அவர்கள் நரசிம் மற்றும் கேபிள் சங்கர் பதிவை தற்செயலாக பார்த்ததாக எழுதினீர்கள். அதற்கு நான் .அடுத்ததாக சுரேஷ் கண்ணன் தானே என்றேன். இதில் என்னளவில் எந்த அதிபுத்திசாலித்தனமும் இல்லை. அந்த சமயத்தில் உடனடியாக எழுதியதால் ஏற்பட்ட சந்தேகம். இப்பொழுதும் நீங்கள் சமயம் பார்த்து அடிக்கிறீர்கள் என்று தான் கூறுகிறேன். உங்கள் விமர்சனம் குறித்தான கருத்தையோ / நேர்மையோ குறித்தோ பேசவில்லை.

மற்றபடி நீங்கள் சுரேஷ்கண்ணன் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனங்களை நான் படித்ததில்லை. எனக்கு அவரின் பதிவுகள் சுவாரசியமாக பட்டதில்லை. அதனால் பதிவுகளையும் அதிகம் படித்ததில்லை.

இங்கு நான் திரித்ததாக கூறுவது எல்லாம் டுபாக்கூர். அடுத்ததாக சுரேஷ்கண்ணன் உங்களை சைக்கோ என்று அழைத்ததில் உடன்பாடில்லை.

10/15/2010 5:01 PM
ROSAVASANTH said...
'உலகம் உருண்டைன்னு இந்தாள் அநாகரிகமாக, வன்மத்துடன் பொய் சொல்றான்' என்கிறான் அவன். உலகம் உருண்டைக்கான என்பதற்கான ஆதாரங்களை அடுக்கி, அதில் அநாகரிகமும், வன்மமும் இல்லை என்கிறான் இவன். இந்த மாதிரி சொல்லி என்னை முதலிலிருந்தே சீண்டினான், நுள்ளினான், கிள்ளினான் என்று ஒப்பாரி வைக்கிறான் அவன். நண்பர்கள் 'சிலர் தாங்கள் புகழ் பெறுவதற்காக இவ்வாறு உலகம் உருண்டை என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்கிறார்கள். ஆமாம், 'அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்று வழிமொழிகிறார்கள். அவனுக்கு குஷி, இனி உலகம் தட்டை என்பதற்கு ஆதாரம் எதுவும் தரவேண்டாம். 'உங்களை எனக்கு தெரியும், உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை' என்று வேறு சொல்கிறார்கள்.

இவ்வளவுதானப்பா உலகம். இதில் தர்க்கம் அறிவு எதுவும் தேவையில்லை. இந்த குருட்டுபயல்கள் உலகத்தில் நாம் சொல்வது எடுபடுவது எடுபடாதது குறித்து கவலைப்பட முடியுமா?

நண்பர்களே, ஒரு சமூகக் கூட்டம் அறிவும், நேர்மையும் குறைவாக இருப்பது பிறழ்வோ பெரிய பிரச்சனையோ அல்ல; அதை புத்திசாலித்தனமாகவும், யோக்கியமாகவும் கருதி, கும்பல் புத்தியாக பரிணமிப்பதுதான் விபரீதம்.

இவ்வளவுதான். நான் எழுத வேண்டியதை எழுதியாகிவிட்டதால் மன உளைச்சல் எல்லாம் எதுவும் இல்லை. மனம் விடுதலை அடைந்த உணர்வுதான். பை!

10/15/2010 5:07 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
V.Radhakrishnan said...
பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

பார்வையாளர்கள் கருத்து சொல்பவர்களாக மாறும்போது பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்வதுதான் சிறந்தது.

எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நிலைப்பாடு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

மிகவும் வருத்தம் தரும் செயல்கள் நடந்தேறிவிட்டது என்பதுதான் கொடுமை.

10/15/2010 7:13 PM
ROSAVASANTH said...
ராதா கிருஷ்ணன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. ஏனெனில் நீங்களும் சுரேஷ் கண்ணன் பதிவில் ஒழுங்காய் நடந்ததை புரிந்து கொள்ளாமல் ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. எப்படி இருப்பினும் இந்த இடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

சுரேஷ் கண்ணன் பதிவில் எழுதப்பட்ட மற்றவைகளை பார்த்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் கேவலமாக, புழுக்களின் ஓர்மை கூட இல்லாதவர்களாக எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று கண்டு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அது தவிர ரொம்ப சீரியசாக தங்களை கருதிகொண்டு எப்படி எல்லாம் விநோதமாக யோசிப்பார்கள் என்றும் அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக மேலே மணிகண்டன் என்கிற அதி புத்திசாலி எழுதியிருப்பதை சொல்லலாம்.

5 நாட்களாக இணையத்திலிருந்து விலகியிருந்தது நல்ல ஆசுவாசமாக இருந்தது. நான் இந்த விஷ சூழலை விலகியிருந்து புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதால் எந்த உணர்ச்சி கொந்தளிப்பும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதுவேன். புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

10/20/2010 12:17 PM
ROSAVASANTH said...
இன்னமும் யோக்கியமாக எதையும் பேசாமல், பல பல நாடகங்கள் மட்டும் போடும் மலப்புழு, ட்விட்டரில் அடித்த கிண்டல் குறித்து எழுதியதை வாசித்தேன். அட, மலப்புழு முகம் சுளித்து 'மலநாற்றம்' என்று புகாரிட்டால், அது என்னவென்று முகரும் திறன் கொண்டவர்கள் அறிவார்களே; அது அற்றவர்கள்தான் பாவம்!

10/21/2010 5:21 PM
test said...
புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

- ennathu neer Ezhuthalara. Ithu eppothula irunthu ....

10/23/2010 4:19 AM
ROSAVASANTH said...
இந்த பதிவும், முந்தய பதிவும் நாளை இங்கிருந்து எனது 'கூத்து' வலைப்பதிவிற்கு மாற்றப்படும். வேறு தீவிர விஷயங்கள் பேசும்போது இந்த பதிவுகள் திசை திருப்பலாக இங்கே இருக்க வேண்டாமே என்று இந்த ஏற்பாடு. மற்றபடி பதிவுகள் நீக்கப்படவில்லை என்பதை அறிக.

10/27/2010 3:10 AM

சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு.

எனது மெயின் வலைப்பதிவில் Thursday, October 14, 2010 என்று எழுதிய பதிவு இங்கு (பின்னூட்டங்களுடன்) மாற்றப்பட்டுள்ளது.

'சைக்கோ' என்று சொன்னபோது கண்டித்தீர்களே, இப்போது மலப்புழு என்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பதாக, சுரேஷ் கண்ணன் சற்றும் விவஸ்தை இல்லாமல் லாஜிக் போடக்கூடும்தான். அதற்காக மலப்புழு என்று நன்கு தெரிந்த ஒருவரை வேறு மாதிரி அழைப்பதும், அதை எதிராளி தன் தர்க்கத்திற்கு சாதகமாக திரிப்பதை பற்றி கவலைப்படுவதும் என் இயல்புக்கு ஒவ்வாத சமாச்சாரம். ஆனால் நான் சும்மா திட்டமட்டும் செய்துவிட்டு ஓடமாட்டேன். சுரேஷ் ஒண்ணா நம்பர் ஹிப்போக்ரைட்டாக இருப்பதை கூட பொறுக்கலாம்; ஆனால் ஏதோ உலக மகா யோக்கியமும், சாந்தமும், அறிவும், ரசனையும் ஒன்றாய் கலந்தது குடிகொண்டது போல ஆக்டிங் குடுப்பதுதனால்தான், மலம் தின்னும் பன்னிக்கு கொடுக்கும் மரியாதையை கூட இந்த மலப்புழுவிற்கு கொடுக்க முடியாமல் போகிறது. (மலப்புழு என்பது, எந்த மலப்புழுவும் இந்த பதிவை வாசிக்காது என்ற தைரியத்தில் ஒரு உருவகம்தான். மற்றபடி ஒரு மலப்புழுவின் வாழ்க்கை எந்த வகையில் இழிந்தது?)

யாரையும் எந்த கட்டத்திலும் திட்டக்கூடாது என்று எனக்கு எந்த கொள்கையோ, நேர்த்தி கடனோ கிடையாது. அதை காரண காரியத்தோடு, நேர்மையாக, ஆதாரபூர்வமாக, அறிவுடமை கலந்து செய்யவேண்டும் என்பது மட்டுமே என் அக்கறை. சுரேஷ் கண்ணனின் நேர்மையான பதிலுக்கு காத்திருப்பதில், தேவைக்கு அதிகமாக நேரமும், பொறுமையும் விரயம் செய்தபின்புதான் இதை எழுதுகிறேன்.

என்னை பற்றி அநியாயமாக புழுகினார். அதை குறிப்பிட்டபோது மிக மோசமாக வன்மத்துடன் திட்டினார். நான் பொறுமையாக அவர் என் மீது சொன்ன பழிக்கு ஆதாரம் கேட்டேன். 'அக்கப்போர் மனநிலையில் இல்லை' என்று திமிருடன் பதில் சொன்னபோதும் பொறுமை காத்தேன். அதாவது என்னை பற்றி புளுகிவிட்டு, அதை சுட்டியதற்கு, மிக கேவலமாக திட்டி விட்டு, ஆதாரமும் பதிலும் கேட்டால் 'அக்கப்போர் மனநிலையில் இல்லை' என்பது என்ன ஒரு திமிர்தனம்! அறிவில், சமரசமில்லாத நேர்மையில் திமிர் ஏற்படலாம். ஏதாவது ஒருவகை அதிகாரத்தால் வரலாம். அது எதுவும் இல்லாத மலப்புழுவுக்கு எப்படி இவ்வளவு திமிர் என்பதுதான் புரியவில்லை? இந்த லட்சணத்தில் 'இது டெரெயிலர், இன்னும் மெயின் பிச்சர் இன்னும் பாக்கலை' என்று உதார் வேறு. பயந்தாங்கொள்ளியின் உதார்; வண்டி ஒட்டத்தெரியாதவன் நாராசமாக அடிக்கும் ஹார்ன் போல, ஆத்திரத்தின் பின்னுள்ள பயத்தினால் வரும் போலியான தோரணை இந்த திமிர்.

அல்ப விஷயத்திலிருந்து, அபாண்டம் வரை ஒருவனை பற்றி புளுகிவிட்டு இவர் இசைரசனை பற்றி எழுத போய்விட்டாராம். மீண்டும், மீண்டும் புளுகுவதையும், உதார்விடுவதையும், போலியான அறிவுபாவனை செய்வதை தவிர வேறு எதையும் இந்தாள் செய்யபோவதில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். முதலில் பொது சந்திப்புகளில் அநாகரிகமாய் வன்மத்துடன் நான் நடந்ததாக சொன்னார். இப்போது வலைப்பதிவில் நான் சு.க.வை திட்டியிருக்கிறேன், காழ்ப்பை கக்கியிருக்கிறேன் என்று தொடர்சியாக புளுகுகிறார். சரி, ஆதாரமாக எதையாவது மேற்கோள் காட்டுவதில் என்ன பிரச்சனை? மற்ற சுட்டிகளை தருபவர், இந்த ஆதாரங்களுக்கு மட்டும் ஆயாசம், பாயாசம் என்று பாவனை செய்கிறார். விளக்கம் கேட்டு நிதானமாக காத்திருப்பதில் இனி பலனில்லை. அவர் செய்வது அத்தனையும் அயோக்கியத்தனம். இப்படி சும்மா சொல்லி விட்டு ஓடமாட்டேன். அதை பிரித்து மேய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

தொடர்வதற்கு முன், அன்பர்களே, இது அறிவு பூர்வமான விவாதம் இல்லை. இணையத்தில் 'Poincare conjecture', 'Perelman' என்று தேடுங்கள். கிடைக்கும் சுட்டிகளில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு எவ்வளவு புரிகிறதோ அவ்வளவு நன்று; இல்லையெனில் ஒரு மாதம் கழித்து என்னை நினைவு படுத்துங்கள். உங்களுக்கு இதை வைத்து ஒரு கட்டுரை எழுதி தருகிறேன். இந்த அறிவு டீலிங் ஒகேயே? மற்றபடி என்னை பற்றிய பொய்களுக்கான எதிர்வினை இது. இஷ்டமிருந்தால் வாசியுங்கள். ஆனால் இதில் அறிவுபூர்வமான விஷயங்களை எதிர்பார்த்து வாசிக்காதீர்கள். அத்தோடு அநியாயமாக பொய் சொல்பவனையும், அந்த பொய்யால் பாதிக்கப்படும் என்னையும் ஒரே தராசில் வைத்து, 'சண்டை வேண்டாமே' என்று அறிவுரை சொல்லாதீர்கள்.

முன் கதை சுருக்கம்:

நான் எழுதிய ட்வீட்கள் பற்றிய குறிப்புகள் கீழே உள்ள பதிவில் உள்ளன.

சுரேஷ் கண்ணன் என்னை பற்றி எழுதிய குறும்பதிவு.

அதற்கு நான் எழுதிய பதில்.

நாராயணின் பதிவு.

நாரயணன் பதிவு குறித்த என் கருத்து.

சுரேஷ் கண்ணன் நாராயணனுக்கு எழுதியது.



1. முதலில் அல்ப விஷயம். என் பதிவுகளை பொருட்படுத்தி வாசிப்பதில்லை என்கிறார். தொடர்ந்து இப்படி சொல்லிகொண்டே இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் என் எழுத்தை புறக்கணிக்கிறாராம். நான் அவரை புறக்கணிக்கவில்லையாம். ரொம்ப விசித்திரமான பொய் அல்லது அதிபயங்கரமான ஞாபக மறதி.

சுரேஷ் கண்ணன், நானாக அவரை block செய்யும்வரை, ட்விட்டரிலும், ப்ளாகரிலும் என்னை follow செய்துகொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தி வாசிக்கும் காரணமல்லாமல் வேறு எதற்காக என்னை follow செய்தார் என்று சொல்லமுடியுமா? அதிலும் ப்ளாகரில் எனக்கு இருந்த சொற்ப 10 followerகளில் சுரேஷ் கண்ணன் ஒருவர். என்னை பற்றிய பொய்யை அவர் சொன்னபிறகு, நான் அவரை ட்விட்டரில் block செய்தேன். அதற்கு பிறகு (நான் block செய்யும் முன்), அவசரமாக bloggerஇல் இருந்து என்னை unfollow செய்துகொண்டார். என்னை follow செய்ய, என்னை பொருட்படுத்தி வாசிப்பதை தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? அவரை follow செய்யும் உத்தேசம் என்றுமே இருந்திராத நான், அவரை தேடி தேடி படிக்கிறேனாம். நான் block செய்யும் வரை என்னை ட்விட்டரிலும், ப்ளாகிலும் follow செய்த அவர் என்னை படிப்பதில்லையாம்! என்னய்யா விநோதமான லாஜிக்?

2. /இணையத்தில் நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்தே ரோசா, என் மீதுள்ள - இதுவரை என்னால் காரணமே அறிந்து கொள்ள முடியாத - காழ்ப்புடன் தொடர்ந்து என்னைச் சீண்டிக் கொண்டேயிருந்தார்./

இப்படி தொடர்ந்து திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட சீண்டியதற்கான/ காழ்பிற்கான ஆதாரம் மேற்கோள், சந்தர்ப்பத்தை சுட்டுதல் என்று எதுவும் இல்லை. அவை அத்தனையும் முழு பொய் என்கிறேன். ஆதாரத்தை முன்வைக்க கேட்கிறேன். சுரேஷ் கண்ணன் எழுதியதை முன்வைத்து, கடந்த எழு வருடங்களில்,ஒட்டு மொத்தமாக 10 முறைகூட எதிர்கருத்து எழுதியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அதில் காழ்ப்பு, ஆபாசமான தாக்குதல் என்று ஒன்று கூட கிடையாது. எல்லாம் கருத்து ரீதியான எதிர்வினைகள் மட்டுமே. எனக்கு இருக்கும் எதிர்கருத்தை சொல்லிவிட்டு, சு.க. சொல்வதை அபத்தம் என்று நினைப்பதை அபத்தம் என்று சொல்லியிருக்கிறேன். அதை சொல்லக்கூடாதெனில் எதற்கு பின்னூட்டம் மற்றும் விவாதம்? நான் என்ன சு.கவிற்கு மட்டுமா எதிர்வினை வைத்திருக்கிறேன்? சுரேஷ் கண்ணன் தான் சொன்னதற்கான ஆதாரத்தை மேற்கோளாக தரவேண்டும் என்று, அவர் அதை செய்யமாட்டார் என்று நன்கு தெரிந்து, சும்மா இங்கே கேட்கிறேன்.


3. /நண்பர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் குறிப்பிடட சிலரிடம் இவ்வாறுதான் நடந்து கொள்வதாகவும் கடுமையான ஆபாசமான மொழியில் திட்டி விட்டு சமயங்களில் அதை அழித்துவிடுவதாகவும் சொன்னார்கள்./

அடுத்த அப்பட்டமான பொய். வசதியாக 'நண்பர்கள்' மீது பழி போடுகிறார். இந்த குற்றச்சாட்டு நான் தீவிரமாக ப்ளாகில் எழுதிய காலத்தில் வந்து, ஒருமுறைக்கு மேல் பதில் சொல்லியிருக்கிறேன். அவை என் பதிவுகளில், சேமிக்கப்பட்ட பின்னூட்டங்களில் உள்ளன. திருமலை, பிகே சிவகுமார் போன்றவர்கள் இதை சொன்னபோது, உதாரணம் காட்டச் சொல்லி சவால் விட்டிருக்கிறேன். பதில் வந்ததில்லை. நான் சிலரை திட்டியதுண்டு. அதற்கு பின்னான காரணமும் தர்க்கமும் உண்டு. அதை அழிக்கவில்லை. இன்னமும் உள்ளது. (ஜ்யோவராம் சுந்தர் சம்பவம் பிறகு எழுதியவைகளை என் மன அழுத்தம் காரணமாக நீக்கினேன். அதில் ஆபாச தாக்குதல் எதுவும் கிடையாது. மேலும் அவை எல்லாம் 11 மாதங்களாக இணையத்தில் உள்ளன. கூகுளில் தேடுபவர்களுக்கு கிடைக்கும். காட்டாயம் ஏற்பட்டால் அவைகளை முன்வைக்க முடியும்.)


4. மீண்டும் மீண்டும் நான் தொடர்ந்து, சுரேஷ் கண்ணனை தொடர்ந்து சீண்டி கொண்டே, இருந்ததாக சொல்லிகொண்டே இருக்கிறார். அட, நான் சுரேஷ் கண்ணனை தொடர்ந்து படித்தது கூட கிடையாது. எப்படி தொடர்ந்து சீண்ட முடியும்? அவர் எழுதிய ஏதாவது கண்ணில் படுகிற, மிக குறைவான சந்தர்ப்பங்களில், எதிர்கருத்து சொன்னது உண்டு. முன்பு சொன்னமாதிரி 10க்கும் குறைவான சந்தர்ப்பங்களில் சொல்லியிருப்பேன். சீண்டியதற்கான ஆதாரம் சு.க. தரவேண்டும், புத்திசாலித்தன,ம் என்று நினைத்து சீண்டாததற்கான ஆதரத்தை முட்டாள்தனமாக என்னிடம் கேட்ககூடாது. அடுத்தவனை பற்றி ஏதையாவது சும்மா சொல்லிவிட்டு ஓடுவது மொள்ளமாரித்தனம். இணையத்தில் ஆதாரங்கள் இருக்கும் போது, எடுத்து போடுவதில் என்ன பிரச்சனை? தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்ததற்கான ஆதரத்தை தருவதுதான் யோக்கியதனம்.


5. அவர் பதிவுகளை மொக்கை என்று சொன்னதால் மட்டும், என்னை பற்றி இப்படி மோசமான மொழியில் எழுதவில்லையாம். உண்மையான காரணம் எனக்கு தெரியும் என்கிறார். இல்லை, தெரியாது. வேறு காரணம் எதுவும் கிடையாது, நான் தொடர்ந்து சீண்டினேன் என்பது பொய் என்றுதான் நான் சொல்கிறேன்.


6. /என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை./

என்னய்யா கேள்வி இதெல்லாம். நான் பொதுக்களத்தில் கருத்து சொல்பவன். தமிழ்மணத்தில் சு.க.வின் ஏதோ பதிவை பார்க்கிறேன், அல்லது யாரோ எழுதிய பதிவின் பின்னூட்டத்தில், அல்லது பலர் இருக்கும் ஒரு பொது சந்திப்பில் அவர் கருத்தை சொல்கிறார். அது அபத்தம் என்று நினைக்கும் போது, அதற்கு எதிராக என் நிலைபாடு இருக்கும் போது, மிக குறைவான விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சந்தர்ப்பத்தில் எதிர் கருத்து சொல்கிறேன். இதில் துன்பம் நேர்கையில் புறக்கணிப்பை மீட்ட வேண்டியதுதானே என்றால் என்ன பதில் சொல்வது? டீவியில் மேயும்போது ஏதோ ஒரு சினிமா வருகிறது; அரையும் குறையுமாக பார்த்துவிட்டு, 'ரொம்ப மொக்கை' என்று சொன்னால், 'மொக்கை படத்தை நீ ஏன் தேடி தேடி பார்க்கிறாய்?' என்று ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வது?

இணையத்தில் நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர், அரசியல் ரீதியாக உவப்பானவர், பிரச்சனை உள்ளவர், ஆணாதிக்க வாதி, சாதிவெறியர், கம்யூனிஸ்டு, பெரியாரிஸ்ட், இந்துத்வவாதி என்று கிடைக்கும் அனைவரையும்தான் படிக்கிறேன். அந்த தருணத்தில் ஏதோ தோன்றினால் கருத்து சொல்கிறேன். இதில் நான் சுரேஷ் கண்ணனின் எழுத்துக்களை தேடி படிப்பதாக தானே கற்பித்து கொள்வது ரொம்ப ஓவர். உண்மையில் நான் அவரை வாசிப்பதேயில்லை. அப்படி நான் எத்தனை முறை அவர் பதிவுகளை பற்றி பேசியிருக்கிறேன்? இந்த சந்தர்பத்தில் ட்விட்டரில் அதிஷா லிங்க் கொடுத்திருந்தார்; பழக்கத்தில் சுட்டினேன். அதுவும் பாதி கூட வாசிக்கும் பொறுமை இல்லை. கடந்த 2 வருடத்தில் சுனாகானாவின் எழுத்தாக இந்த பாதி பதிவை மட்டும்தான் வாசித்தேன். 'மகாமொக்கை' என்று கருத்து சொன்னேன் (கவனிக்கவும் அதுவும் அதிஷாவிடம் கருத்து சொன்னேன்). வேறு எதையும் நான் வாசிக்கவில்லை, வாசித்ததில்லை. 'எந்திரன்' பற்றி அவர் இன்னும் நிறைய எழுதியிருப்பதாக (அதுவும் அதிஷாவின் ட்விட்கள் மூலமாக) கேள்விபட்டவைகளையும் நான் படிக்கவில்லை. (அதே நேரம் சுரேஷ் கண்ணன் என்னை படிக்காமல் புறக்கணித்ததாக பாவனை செய்வது பொய் என்று ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.)


7. /ஆரம்பத்திலிருந்தே பதிவுகளில், பின்னூட்டங்களில் என்னைச் சீண்டி வந்துக் கொண்டிருந்ததும். இதற்கெல்லாம் இணையத்திலிருந்தே என்னால் பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்றாலும் இதற்காக பழைய பதிவுகளை - குறிப்பாக ரோசா பதிவுகளை- தேடி வாசிக்க நேர்வது மிகுந்த அலுப்பையும் மனஉளைச்சலையும் தருவது. /

அய்யய்யோ.. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அலுப்பா இருந்தாலும் ஆதாரம் தரணும், அதுதான் முறை. இவர் பொய் சொல்வதை வாசித்து எனக்கு இல்லாத மன உளைச்சலா? ஒருவனை பற்றி அயோக்கியத்தனமாக பொய் சொல்லிவிட்டு, அதை பற்றி கேட்டால் பின் திட்டவும் செய்துவிட்டு, ஆதாரம் தர மெனக்கிடுவது மன உளைச்சலை தரும் என்பது என்ன ஒரு மொள்ளமாரித்தனம். அதை ஏதோ யோக்கிய சிகாமணியாய், அறிவு விவாதத்தில் மட்டுமே தனக்கு ஆர்வம், அக்கப்போர்களில் அல்ல என்று பாவனை செய்துகொண்டு சொல்வதை பார்த்து கொண்டிருக்க முடியுமா?

பின்னூட்டங்களில் மட்டுமில்லாது என் பதிவுகளிலும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சீண்டியுள்ளதாக சொல்கிறார். ஒரு ஆதாரம் , ஒரே ஒரு ஆதாரம் என் பதிவுகளிலிருந்து, நான் சுரேஷ் கண்ணன் பற்றி ஆபாசமாகவோ, காழ்ப்புடனோ பேசியதற்கான ஆதாரத்தை தேடி கொடுக்க வேண்டும். மாறாக சொல்லிவிட்டு ஓடிப்போவது களவாணித்தனமன்றி வேறென்ன? என்னை யாராவது இப்படி சவால் விட்டு பேசியிருந்தால், நிறுவுவேன் அல்லது நாண்டுகொண்டிருப்பேன், குறைந்த பட்சம் என் தவறையாவது முழுமையாக ஒப்புக் கொண்டிருப்பேன்.


8. முதலில் பதிவர் கூட்டங்களில் அநாகரிகமாக, வன்மத்துடன் நடந்து கொள்பவர் என்றார். அதை பொய் என்றேன். சாந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை குறிப்பிட்டேன். மீண்டும் தன் வசைப்பதிவில் அதை வலியுறுத்தி சொன்னார். நான் நிதானமாக, அது குறித்து விரிவாக எங்கே , எப்போது, எந்த சந்திப்பில், யார் முன்னிலையில் அவ்வாறு நடந்தேன் என்று கேட்டேன். இன்னமும் அது குறித்து எதுவும் பேசாமல், வேறு எதை எதையோ குண்டக்க மண்டக்க பேசுகிறார்.


/அது முழுக்க முழுக்க (நண்பர்கள் சந்திப்பில்) ரோசாவால் சப்ஜெக்டிவ்வாக காயப்பட நேர்ந்த (கருத்து அல்லது விவாத ரீதியானது அல்ல) அனுபவங்க்ளின் எதிரொலியாக எழுதினது./


'நீங்க சொல்றது ரொம்ப தப்பு சுரேஷ்' என்று யாராவது மறுத்து சொன்னால் கூட, காயப்படக்கூடிய அழுகுண்ணி மனப்பான்மை கொண்ட சுரேஷ் கண்ணன், என் எதிர்கருத்தால், மறுப்பால், கிண்டலால் காயப்பட்டால் யாரும் எதுவும் செய்யமுடியாது. அப்படி காயப்பட்டால் என்னை தவிர்ப்பதும் தப்பிப்பதும் அவர் பிரச்சனை. ஆனால் பொதுக்களத்தில் அதை அநாகரிகம், வன்மம் என்றால் அதற்கு ஆதாரம் தரவேண்டும். குறைந்த பட்சம் என்ன சொன்னேன் என்ராவது சொல்லவேண்டும். முடிந்தால் அதில் என்ன வன்மம் அல்லது காழ்ப்பு அல்லது அநாகரிகம் அல்லது சீண்டல் என்று சொல்லவேண்டும். இதை இன்னும் எத்தனை முறை கேட்பது. அட, குண்டக்க மண்டக்க ஏதாவது கேள்வி கேட்டு தர்க்கம் செய்ய தெரிகிறது (கீழே). இதற்கு பதில் சொல்ல மட்டும் கைவராதது மீண்டும் களவாணித்தனம்தானே.

/ஆனால் இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு 'சுரேஷ் கண்ணன் என்னைப் பற்றி அபாண்டமாக புளுகி விட்டார்' என்று ரோசா தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதை மறுப்பதற்கான ஆதாரங்களையும் தன்னால் தர முடியும் என்றும் சுந்தர் தாக்குதல் தொடர்பான விளக்கப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்./ (

எனக்கும் சுந்தருக்கும் இடையில் நடந்தது இருவருக்கும் மட்டும் தெரிந்தது. அதில் ஆதாரபூர்வமாக பேச (அடுத்தவர் ஒத்துழைத்தால் ஒழிய) எதுவுமில்லை. ஆனால் சுரேஷ் கண்ணன் சொல்வது பலர் சாட்சியுள்ள ஒரு பொது சந்திப்பில் நடந்தது பற்றி. அதனால் அதற்கு ஆதாரம் உண்டு என்றேன். மற்றபடி என்ன நடந்தது என்று சொல்லாமல் நான் எதை மறுப்பது? சும்மா ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நான் அநாகரிகமாக் பேசவில்லை என்று மொட்டையாக சொல்லச் செய்ய வேண்டுமா? சரி. அந்த வகையிலும் நாராயணன் அந்த சந்திப்புகளில் கலந்து கொண்ட சாட்சிதான். (நான் கேட்காமல் )அவர் சொல்கிறாரே. ஓ.. அவர் என் நண்பர்! (அப்ப மற்றவர்கள் எல்லாம் என்ன எதிரியா?) அந்த சந்திப்பில் சுரேஷ் கண்ணனை கூட எதிரியாக கருதாத நான் எப்படி ஒரு ஒரு எதிரியை கண்டு பிடித்து சாட்சியாக இங்கே கொண்டு வர முடியும்?

நான் என் அந்த பதிவில் சொல்லியது 'ஆதாரம் தரமுடியும்' என்று சொன்னது, இப்போது நான் செய்து கொண்டிருப்பதைத்தான், செய்ய முடியும் என்றேன். என்ன நடந்தது என்று சுரேஷ் கண்ணனிடம் கேட்டு, அவர் என்ன நடந்தது என்று சொன்னால் அதை சாட்சிகளுடன் மறுக்க கூடியதைத்தான் சொன்னேன்.

//'என்ன வகையில் அநாகரிமாக நடந்து கொண்டேன்' என்று என்னிடம் ரோசா விளக்கம் கேட்பது போல, நான் அபாண்டமாக புளுகியதற்கு ஆதாரம் உண்டு என்று ரோசா எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு எனக்கும் உரிமையுண்டு. /

இருக்கட்டும்.. இருக்கட்டும். எல்லாருக்கும் என்னா வேணுமானாலும் குண்டக்க மண்டக்க கேட்க உரிமை உண்டுதான். அதற்குதான் மேலே பதில் சொல்லியுள்ளேன்.

//மேலும் என்னைக் குறித்தும் எழுதிய குறிப்புகள் அடங்கிய பதிவுகளை நீக்கி விட்ட ரோசாவிற்கு என்னிடம் விளக்கம் கேட்பதற்கு எந்த வகையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. /

சில நூறு வரிகள் கொண்ட அந்த பத்து பதிவுகளில், ஒரே ஒரு வரி சுரேஷ் கண்ணனை என்னை பற்றி சொன்ன பொய் பற்றியது. அந்த பதிவுகளை நீக்கிவிட்டால், என்னை பற்றி சொன்ன பொய் குறித்து கேள்வி கேட்க உரிமை இல்லையா? என்னய்யா லூசுத்தனமா இருக்கு? லூசுத்தனாமா இல்லையா என்று இந்த பதிவை வாசிக்கும் யாரவது ஒருவர் வந்து சொல்லட்டும் கேட்போம். சுரேஷ் கண்ணன் சொன்ன புளுகு இன்னும் இணையத்தில்தானே இருக்கிறது. அதை பற்றி கேள்வி கேட்க எப்படி நண்பா (அந்த பதிவுகளை நீக்கியதால்) உரிமை இல்லாமல் போகும்?

/ரோசா என்னைத் தொடர்ந்து சீண்டி வந்துக் கொண்டிருந்த மனநெருக்கடிகளின் போதே அவர் கேட்டிருந்த விளக்கப்பதிவை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இதில் என்னையும் ரோசாவையும் தாண்டி சந்திப்பிற்கு அழைத்த பொதுவான நண்பர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன். /

அதெல்லாம் சங்கடப்படாத யாரையாவது சாட்சிக்கு கூப்பிடலாம். இந்த அறிவு எல்லாம் பொய் சொல்வதற்கு முன்னால் இருக்க வேண்டும். பொய் சொன்னபிறகு, இன்னமும் விளக்கம் தராமல் இப்படி எல்லாம் யோக்கியமாக பேசும் நேரத்தில் அதை செய்யலாம். 




9. /ரோசாவை கடுமையான எழுதினது தொடர்பாக பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு 'நீங்களா அதை எழுதினது' என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் கேட்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டிரு்ப்பது போல இவ்வாறு எழுதுவது என்னுடைய இயல்பும் வழக்கமும் அல்ல என்பதை என் பதிவுகளை வாசிப்பவர்களே உணரக்கூடும். தவறு செய்தவனைக் காட்டிலும் அதைச் செய்யத் தூண்டியவனே பிரதான குற்றவாளி என்கிற முறையில் என்னை இந்த மனநெருக்கடிக்கு தள்ளின ரோசாவிற்கும் இந்த நிகழ்வில் பங்குண்டு என்பதையும் என் குறிப்பை வாசிப்பவர்கள் உணர வேண்டும் என நான் விரும்புகிறேன். /

என்ன திமிர்? என்ன அயோக்கியத்தனம்? அப்படி நான் என்னவகையில் provoke செய்தேன் என்பதுதான் என் கேள்வி. திரும்ப திரும்ப இத்தனை முறை கேட்டபின்பும், இன்னமும் அதற்கு மேலோட்டமாக பதில் கூட சொல்லமல், சும்மா சீண்டல், நோண்டல் என்று ஏதோ சொல்லிவிட்டு, இப்படியும் ஒரு பாயிண்ட் எடுத்துவிட எவ்வளவு கேவலமான மனசாட்சியே இல்லாத மனிதனாக இருக்க வேண்டும். அப்புறம் மன நெருக்கடிக்கு தூண்டிய நபர்தான் பிரதான குற்றவாளியா? சுந்தர் தாக்கப்பட்ட சமபவத்தில் இப்படி ஒரு லாஜிக் சுனாகானா போட்டாரா? அட, நான் ஒரு வார்த்தை கூட என் தரப்பில் இருந்து சொல்லாத நேரத்தில், ஒரிருவர் என் தரப்பையும் கேட்கவேண்டும் என்று குறைந்த பட்சமாக சொன்னவர்களை குதறியவர்தானே இந்த ஆசாமி. அப்படிப்பட்ட பதிவுகளில் போய், என் தரப்பை கேட்பதே அநியாயம் என்கிற கருத்துக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டவர், இப்போது இப்படி ஒரு லாஜிக் போட என்ன ஒரு விவஸ்தைகெட்ட ஹிப்பாக்கரசி தேவை. இலக்கியம் மண்ணங்கட்டி படித்து (ஒரு வேளை புரிந்தால்) அதெல்லாம் என்ன எழவுக்கு?


10. 
/இனி ரோசா என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும் என்றும் இதை இப்படியே தலைமுழுகித் தொலைப்பது என்றும் இப்போதைக்குத் தோன்றுகிறது./

நேர்மையும், சொல்வதற்கு தர்க்க பூர்வமான சரக்கும் இல்லாத ஆசாமி வேறு என்னப்பா செய்யமுடியும். ட்ரெயிலர், மெயின் பிக்சர் என்று உதார் விட்டு விட்டு இப்படி களவாணித்தனமாக ஓடுவதற்கும் இப்படி ஒரு தோரணையா?


/அப்போது நீங்கள் உள்ளிட்ட இணைய நண்பர்கள் இவ்வாறான 'பஞ்சாயத்து மற்றும் உபதேசப்' பதிவுகளை எழுதுவீர்களா அல்லது கள்ள மெளனம் சாதிப்பீர்களா என்பதை காத்திருந்து பார்க்க விரும்புகிறேன். /

என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை. எனக்கு பதில் சொல்லாமல் போனால் அது மொள்ளமாரித்தனம். அப்போது கள்ள மௌனம் சாதிப்பவர்களை (யாராக இருந்தாலும்) பார்த்து இவர் என்ன செய்ய போகிறார்?



என்னை மோசமாக வசைந்து எழுதிய பதிவில், நான் எதோ இவரை பற்றி எழுதியதற்கு, அவர் பதிலடி கொடுத்த பின் ஓடி வாலை சுருட்டிக்கொண்டேனாம். உலகில் எப்படி எல்லாம் விசித்திரமாக மனிதர்களால் யோசிக்க முடிகிறது, அதை தைரியமாக சஎப்படி சொல்லவும் முடிகிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை. சுனா கானா (சுயமௌதுனம் செய்வது போல) கற்பனைசெய்து, அப்படி நடந்ததாக தனக்கு தானே கற்பித்து கொண்டால் மட்டுமே உண்டு. மற்றபடி, எப்ப ஸார் அப்படி நடந்தது, அப்படி என்ன தடலடி லாஜிக்கில் என்னை மாட்டிவிட்டீர்கள், எடுத்து காட்டுங்கள் என்றெல்லாம் சுகவை கேட்பதில் எந்த பயனும் இருக்காது என்பதில் இன்னுமா சந்தேகிக்க முடியும்.


கடைசியாக சில வார்த்தைகள். சுரேஷ் கண்ணனிடம் எந்த முன்பகை, சொத்து தகறாரு, கொடுக்கல் வாங்கல், குடும்ப தகராறு, ஒரே பெண்ணை சைட் அடித்தது உட்பட எந்த பிரச்சனையும் ஆரம்பத்தில் இருந்து கிடையாது. ஆகையால் ஆரம்பத்தில் இருந்தே நான் காட்டுவதாக சொல்லும் காழ்ப்பிற்கு எந்த காரணமும் கிடையாது. அப்படி எதையும் காட்டியதில்லை. கருத்துரீதியான எதிர்ப்பை மட்டுமே, என் நிலைபாடு சார்ந்து செய்துள்ளேன். இணையத்தில் தேடி இதை விரும்புபவர்கள் தெளிவாக அறியலாம்.

ஆனால் நாகரீகம் என்று சிலர் கற்பிக்கும் சட்டகத்தில் அடங்காத விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நான் செய்ததுண்டுதான். ஆனால் சுரேஷ் கண்ணனை முன்வைத்து செய்ததாக அவர் சொன்னது அப்பட்டமான பொய் என்பதுதான் இதுவரை நான் சொல்லி வந்தது. ஆனால் கருத்து ரீதியான பின்புலம் இன்றி, வெறும் வசை தாக்குதல்களை மட்டும் நான் வைத்ததில்லை என்பதை விளக்க முடியும். இப்போது சுரேஷ் கண்ணனை இந்த பதிவில் திட்டியதை, தர்க்கரீதியான வாதங்களின் கான்க்ரீட் ஆதரவோடு செய்வது போலத்தான் இதற்கு முன்னாலும் செய்துள்ளேன். ஏதோ வகையில் பகைமை உணர்வு கொண்டவர்கள் மட்டுமின்றி நான் நட்பு பாராட்டும் அனாதை, பெயரிலி, டீஜே தமிழன், தங்கமணி, சுந்தர வடிவேல், லக்கி, வெங்கட், சங்கரபாண்டி, சுந்தர மூர்த்தி, சுமதி ரூபன் என்ற கறுப்பி, பத்ரி, ப்ரூனோ, என்றென்றும் அன்புடன் பாலா, இன்னும் டோண்டு என்று பலருடன் கிண்டலாகவும், கடுமையான வார்த்தைகள் கலந்தும் சண்டைகள் போட்டிருக்கிறேன். கருத்துரீதியான சண்டைகளே தவிர அதில் தனிப்பட்ட காழ்ப்பு கிடையாது. அவர்கள் யாராவது என்னை இப்படி குற்றம் சாட்டியது கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி சொன்னால் கூட பரவாயில்லை. அப்படிபட்ட சண்டைகள் கூட இல்லாத சுனா கானா சொல்வதுதான் வேடிக்கை. எது எப்படி இருந்தாலும் சண்டைகளுக்கு பிறகு என்னிடம் நட்பு பாராட்டும் அனைவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். அவர்களுக்கு என் அன்பும் நட்பும் (கருத்திரீதியாக சமரசம் இல்லாமல்) என்றும் தொடரும்.




11 Comments:

ராம்ஜி_யாஹூ said...
உங்கள் இருவரின் மீது உள்ள அன்பா, மரியாதையா எது காரணம் என்று தெரியவில்லை. எனக்கு நீங்கள் இருவரும் நடத்தும் எழுத்து யுத்தத்தின் மீது ஈர்ப்போ, தீவிரமோ வரவே இல்லை.

இந்த நிகழ்வுகளுக்கு முன்பு உங்கள் இருவர் மீதும் என்ன மதிப்பேடு,மரியாதை,பாசம் இருந்ததோ, அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. (am i reading your posts with predetermined mind).

10/14/2010 11:50 AM
ROSAVASANTH said...
ராம்ஜி, என் மீதான உங்க மதிப்பு, மரியாதை, பாசம் குறித்து உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி. (சு.க. மீது வைத்தித்க்கும் அதே மதிப்பைத்தான் என் மீதும் வைத்திருக்கிறீர்கள் என்கிறபோதும்). ரொம்ப நன்றி.

10/14/2010 12:11 PM
TiredRannaSuarus said...
Because this was related,
http://textbin.com/r5762

10/14/2010 1:03 PM
S.Ravi said...
Suresh Kanna is a jallra of jemo.

Ignore these மலப்புழு.

S.Ravi
Kuwait

10/14/2010 4:22 PM
தங்கமணி said...
நீண்ட நாளைக்குப் பிறகு தமிழ்மணம் வந்தேன். இதைப் படிக்க நேர்ந்தது. உங்களை உங்கள் நண்பர்கள் அறிவார்கள். பதிவுகளில் எழுதுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். உங்களுக்கு நேர்மை காரணமாக இருக்கும். ஆனால் அதை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது வசந்த்.

10/14/2010 8:18 PM
ROSAVASANTH said...
அன்புள்ல தங்கமணி, நலமா, நீண்..ட நாட்களுக்கு பிறகு இங்கே என்னை நீங்கள் வாசிக்க நேர்வதும், சந்திக்க எனக்கு நேர்வதும் துரதிர்ஷ்டமே. ஆனாலும் உங்கள் பின்னூட்டத்தை கண்டதில் மகிழ்ச்சி. எல்லாம் நலம் என்று நம்புகிறேன்.

(நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட எனக்கு இதை எழுதியிருக்கலாம். தேவையில்லாம் உங்களுக்கு பூசை விழுமோ என்று பயம்.)

10/14/2010 8:44 PM
ROSAVASANTH said...
//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது காரணமாகயிருக்க்கூடும்// இது சுனாகானா

//இம்முறை பார்த்து கொண்டு இருக்காது!, திரும்ப கொடுக்கும்.// இது வால்பையனாம்.

//dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து குத்திடலாம்... 

அதுக்குன்னு நான் ரௌடியில்ல... ஆனா திருப்பி தாக்குவதுல... பிஸ்துதான் நாங்க :))//

அய்யோ.. ரோட்டில் யாரிடமாவது வம்பிழுத்து சுரேஷ் கண்ணன் அடிவாங்க கூடாது என்று நான் தினமும் பெருமாளிடம் பிரார்திக்க வேண்டுமா?

10/14/2010 8:52 PM
ROSAVASANTH said...
சுனாகானாவின் இரண்டாவது பதிவை ரசித்து படித்தேன். நானும் கூட ஏதாவது பதில் கிதில் சொல்லி, மீண்டும் பிரித்து மேயும் வேலையை இன்றைக்கும் எனக்கு வைத்துவிடுமோ என்று கொஞ்சம் பயந்தேன். நல்லவேளை 'பதில் சொல்லணும்..சொல்லபோறேன்... சொல்லித்தான் ஆகணும்... இதுக்குதானே ஆசைப்பாட்டாய் நான் சொல்கிறேன்..நான் மட்டும் இல்லை எல்லோரும் பதில் சொல்லணும்... ' என்றெல்லாம் மட்டுமே சொல்லியிருகிறார். அதனால் நான் என் வேலையை பார்க்கலாம்.

கையில் தயராக பதிலை வைத்து கொண்டு கண்ட கண்ட விஷயத்தை எல்லாம் நீட்டி முழக்கி எழுதும் சுனாகானா... நீங்கள் ஒரு புரியாத புதிர். ஆனால் ஆதரத்தை எல்லாம் இப்படி நீங்களே வைத்து கொண்டு, குற்றச்சாட்டுகளை மட்டும் வகைவகையாய் எடுத்து போட்டு எங்கள் அறிவு பசிக்கு தீனி போட மறுப்பது நியாயமா?

மொக்கையான நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவர் கூட, அவரது எழுதும் நோக்கத்தை தாண்டி, சிறந்த முறையில் காமெடி செய்ய முடியும் என்று சுனாகானாவின் இன்றய பதிவை வாசித்துதான் அறிந்தேன். சில நூறு இலக்கிய பிரதிகள் சொல்லித்தராத பாடத்தை எனக்கு அவர் சொல்லிதந்துள்ளார். மிக்க நன்றி சுனா கனா.

10/14/2010 9:03 PM
ROSAVASANTH said...
சில மாதங்கள் முன்பு சுபாவின் (90களின் இறுதியில் வந்த) பாக்கெட் நாவல் ஒன்று, பெங்களூர் நண்பர் வீட்டில் காணக் கிடைத்தது. அதில் வந்த பல 'பாராட்டுக் கடிதங்களில்' ஒரு கடிதத்தில் சுபாவிற்கு ஏன் சாகித்ய அகாடமி விருது தரவேண்டும் என்று நீளமாக் விளக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் சுபாவை கண்டுகொள்ளாத இலக்கிய விமர்சகர்களையும் கடிதம் விளாசி தள்ளியிருந்த்து. பதிலுக்கு சுபா இது போன்ற வாசகர்களின் கருத்துதான் தங்களுக்கு உண்மையான விருது என்று சொல்லியிருந்தார். சாகிதய அகாடமி விருது வாங்கியவர்கள் இலக்கியம் படைப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டதையும் சுட்டி காட்டி, தங்களை இயக்குவது இது போன்ற வாசக விருதுகளே என்று குறிப்பிட்டிருப்பார்.

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிய சந்தர்ப்பத்தில், சன் டீவியில் 'கவிஞர்' முத்துலிங்கம் நேர்காணல் வழங்க நேர்ந்தது. அதில் தரத்திற்கும் விருதுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்று விளக்கி கொண்டிருந்தார். அதை சொல்லிவிட்டு', உதாரணமாக இப்போது பிரபஞ்சன் என்று ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளார்கள். அவரை நான் ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் என்று கூட நான் சொல்ல மாட்டேன். நான்காம் தரத்திற்கும் கீழான அவர் படைப்புக்கு விருது வழங்கியுள்ளார்கள்' என்று உதாரணபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தார். அன்று இதை கேட்ட எனக்கு ஆத்திரம் தாங்காமல், பிரபஞ்சனை பாரட்டி நேர்காணல் ஒளிபரப்ப வேண்டிய சண்டீவி இப்படி செய்வது பற்றி தூத்துகுடியில் என் நண்பர்களிடம் புலம்பி தீர்த்தேன்.

ஆனால் இந்த முறை சுபாவிற்கான கடிதம் எனக்கு சுவாரசியமாக பட்டது. அந்த கடிதம் சுபாவே எழுதி சும்மா பதிப்பித்து கொண்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு என்றாலும், உண்மையிலேயே சுபாவின் வாசகர் ஒருவர் அப்படி எழுதியிருக்கவும் சிறு வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை கணக்கில் கொண்டு அதை புரிந்து கொள்ள முயன்றேன். அப்படி முயலும் போது 'கவிஞர்' முத்துலிங்கம் கூட உண்மையான தனது நம்பிக்கை சார்ந்த கருத்தை கூறியிருக்க முடியும் என்றும் தோன்றியது. இதயெல்லாம் இங்கே எதற்காக சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதனால் பரவாயில்லை

10/15/2010 2:50 AM
-/பெயரிலி. said...
ரோசாவசந்த், ஏற்கனவே கீச்சிலே சொன்னதுதான். என்றாலும் மீண்டும் வேறுவரிகளிலே; "எழுத்தென்பதும் இலக்கியமென்பதும் அரசியலோ விளையாட்டோ அல்ல, அவதானமாக எல்லோருக்கும் நல்லவராக ஜெமோ பாணியிலே களமாடிக்கொண்டிருக்க. சமகாலத்திலே இருபத்தாறு மைல்களுக்கு அப்பால் குழந்தைகள் கொல்லப்பட்டபோது அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நடவாததுபோல ஒதுக்கிவிட்டு, 1926 இலே அவுஸ்ரேலியாவிலே பிரிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சோகத்திரைப்படத்துக்காக உலக அழுகை மொட்டைமாடியிலே வடிப்பதுதான் எலக்கியம், ஒலக சினிமா என்றானது உங்களுக்குத் தேவையா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும். ஒவ்வாதென்றால், விமர்சனம் தவிர்த்து ஒதுங்க வேண்டும். பட்டறிவு சொல்வது இதுவே. லோஸா இடதுசாரி என்பதாலேயே நோபல்_இலக்கியம் வழங்கப்படவில்லை என்று அரைகுறைச்செய்தியைத் துணிந்து தரும் இலக்கிய உலகிலே வாள் தூக்கி, வேல் எறிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதனாலேயே, சில சமயங்களிலே ஒத்துக்கொள்ளமுடியாதபோதுங்கூட, வினவு போன்றவர்கள், தமிழ் இலக்கியபிம்பங்களைவிட எத்துணை மேலெனத் தெரிகின்றது. தொடர்ந்து வாதிப்பதால், ஆவதேதுமில்லை. "

10/15/2010 8:03 AM
ROSAVASANTH said...
பெயரிலி, பின்னூட்டத்திற்கு நன்றி. இதற்கு மேலை காமெடியக எடுப்பது என்றுதான் இருக்கிறேன். சும்மா ஜாலிக்காக இன்னொரு பதிவு எழுதினேன். அதில் சொல்லியபடி ஏதாவது திடுக்கிடும் ஆதாரம் (அதாவது மேலும் பொய்) வந்தால் மட்டுமே திரும்ப எழுதுவேன். 5 நாட்கள் இணையத்தில் இருக்க மாட்டேன் என்பதும் உற்சகமாக இருக்கிறது.

10/15/2010 2:04 PM

Friday, October 06, 2006

புதிய பதிவு.

எனது மெயின் பதிவில் எழுதிய புதிய பதிவை, தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஏதோ RSS பிரச்சனை என்கிறது. எனக்கு புரிபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியாததால், இங்கே அறிவிக்கிறேன். நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்துவிடக்கூடும் எனில், (அரசியல்/சமூகம் பிரிவிலோ, அல்லது குசும்பு செய்ய நினைத்தால் நகைச்சுவை/நையாண்டி பகுதியிலோ அவர்கள் விருப்பப்படி) சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Tuesday, September 19, 2006

என் பின்னூட்டம்.

ரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும் ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.



என் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட, நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே.



மேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே.



ரவி சீனிவாஸு,

என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன்.

Monday, August 21, 2006

கேவலங்களிலும் கேவலம்-3.

மீண்டும் இந்த விவகாரம் பற்றி எழுதுவது துன்பமாக இருந்தாலும், அவசரப்பட்டு நேற்றய பதிவில் கருப்புவை தவறாக கண்டனம் செய்துவிட்டதாக நினைத்து வருத்தம் தெரிவித்து விட்டேன். அதற்கான ஒரே காரணம் அந்த நேரத்தில் அவரது இன்னொரு சாக்கடை பதிவை படித்திருந்திருக்கவில்லை. லக்கிலுக் பதிவில் தன் பெயரில் வந்த பின்னூட்டங்களை தான் எழுதவில்லை என்றவர் தன் பதிவிலேயே எழுதியிருப்பது கீழே.

//
ஆண்குறியை அறுத்து அந்த இடத்தில் ஓட்டை ஒன்றை போட்டு, வெற்று மார்பைக் கிழித்து சிலிக்கான் ஜெல் வைத்து திணித்து தாய்லாந்தில் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு மும்பைக்கு வந்து பிராத்தல் செய்வார்கள் என டாக்டர் அம்பேத்கருக்கு அப்போதே தெரியாமல் போய் விட்டது.


நான் எல்லாரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் செய்யும் தொழிலை நம் வலைப்பதிவர்கள் அறிவார்கள். திருநங்கைகள் கும்பலாய் சென்னையில் கடைகடையாய் ஏறி காசு கேட்பதும் தரவில்லை என்றால் 'வாத்தா வம்மா' என்று ஏகத்துக்கும் திட்டுவார்கள். அதற்குப் பயந்தே பெரும்பாலும் எல்லா கடைமுதலாளிகளும் காசைக் கொடுத்து விடுவார்கள். சென்னையில் கடை நடத்திய நானே அனுபவப் பட்டவன் என்பதால் எனக்கும் தெரியும்.


ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையின் மெரினாவில் காற்றுவாங்க மாலை வேளையில் மணலில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தமர்ந்த ஒருவர் 'சார் மணி என்ன?' என்று கேட்கவே திரும்பி முகம் பார்த்து ஏழரையாக இன்னும் ஒன்றரை நிமிடம் இருக்கு என்று சொல்லிக்கொண்டே முகம் பார்த்தால்.. 'அய்யோ.. இது அதுவாச்சே!'.. பயம் குடிகொண்டது மனதில்!

சொன்ன பிறகும் நகரவில்லை..

'சார் வேணுமா?'


'இன்னாது?'


'அக்காங்.. புரியாத மாதிரில்ல கேட்குறீக.. கைக்கு பத்து வாய்க்கு இருபது!'


பார்வையால் எரித்து விடுவதுபோல பார்த்து.. 'அடச்சீ.. தூரப்போ!' எனகோபமாகச் சொல்லி விட்டு வேறிடம் சென்றவன் நான் என்பதால் அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது எனக்கு! இது அன்றாடம் மாலைவேளைகளில் நடக்குமாம் அங்கே. நிறைய திருநங்கைகள் தலைநிறைய மல்லிகையோடு வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு மெரினாவை வலம் வந்தது ஒரு காலம்.

அடுத்த நிகழ்ச்சி ஒன்று. நானும் நண்பர் மகேந்திரனும் யமஹா வண்டியில் துறைமுகம் ஓரமாக உள்ள சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்க கும்மிருட்டில் கைகாட்டி நிறுத்தினார் ஒரு பெரியவர். உதவி என நினைத்து நிறுத்தி விஷயம் கேட்க, இருளில் இருந்து கும்பலாய் ஓடி வந்தனர் அவர்கள். விபச்சரமோ.. மிரட்டிப் பணம் பறித்தலோ எதுவாயினும் தப்பிப்பதே இப்போதைய குறிக்கோள் என்றெண்ணி அவசரம் அவசரமாக ஓட எத்தனித்து எனது குழாய்ச்சட்டை கிழிந்து போகும்வரை ஓடி வந்தவன் நான் என்பதால் எனக்கும் அவர்களைப் பற்றித் தெரியும்///


ஆக போலி பின்னூட்டம் என்பதாக அவர் சொல்வதில் உள்ள கருத்தைத்தான் மீண்டும் வலையுறுத்தி தன் பதிவில் சொல்லுகிறார். இந்த சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்படும் மக்களை பற்றி இத்தனை கேவலமான கருத்துக்களை வைத்திருக்கும், வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் அதை இத்தனை வெளிப்படையாக வெட்கமின்றி சொல்லும் இந்த இழிந்த பிறவிதான் பெரியாரை முன்வைத்து எதை எதையோ பேசி வருகிறது. அதை வேறு (மீண்டும் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்) வெட்கமற்ற கும்பல் கைதட்டி பாராட்டிக் கொண்டிருக்கிறது. (இதில் தங்கமணி போன்ற விதி விலக்கானவர்களை பற்றி நான் பேசவில்லை.) இதைவிட கேவலம் வேறு என்ன இருக்கிறது? பெரிய அளவில் இவர்களின் எழுத்து கண்டிக்க படாமல் இருப்பது அதைவிட கேவலம் இல்லையா?!

லக்கிலுக் மற்றும் விடாது கருப்பு (வேறு சிலரும் இருக்கலாம், நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை) போன்றவர்கள் கருத்தை போலவே, இதே போன்ற பார்வையிலேயே இந்த சமூகத்தில் தலித் பற்றியும் பெண்கள் பற்றியும், பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் சொல்லாடல்கள் கட்டமைக்கப் படுகின்றன. இந்த விவாகாரத்தின் தொடக்கத்தை கவனித்தால் அது, ஒதுக்கப் பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவர், மேலே வரும்போதும், அவருக்கு பாராட்டுக்களும், வரவேற்புகளும் வழக்கத்திற்கு அதிகமாக கிடைக்கும் போதும், ஒலிக்கும் ஆதிக்க குரலை போலவே இருப்பதை காணலாம். அதற்கு பதிலாக அவர்கள் சற்றே ஆனவம் ஒலிக்க பேசிவிட்டால் மிக மோசமான முறையில் சமூக மதிப்பீடுகளை வைத்து, அடிவயிற்றில் மிதிக்கும் ஆத்திரத்துடன் வசைகளை அவிழ்த்திவிடுவார்கள். அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.


மீண்டும் சொல்வதானால் இந்த கூட்டத்திற்கு (அதாவது விடாது கருப்பு, லக்கிலுக் சார்ந்து அவர்களை கைதட்டி பாராட்டும் கூட்டத்திற்கு) எந்த வித சமூக நீதி பற்றிய கரிசனையோ, சமூகத்தின் ஒதுக்குமுறைகள் பற்றிய அக்கறையோ எதுவும் கிடையாது. தன்னைவிட ஒருபடி மேலே பார்பனர் இருப்பதன் பொறாமை மட்டுமே. அதுவும் எலும்பு துண்டு ஒழுங்காய் கிடைத்திருந்தால் எழும்பியிருக்காது. உதாரணமாய் சங்கரமடத்து பள்ளியில் மிக மோசமாய் கேவலப்படுத்தாமல் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டிருந்தால், அம்பி ஒருவன் எச்சிவிட்டதை லக்கிலுக் பொறுத்துகொண்டிருப்பார்.

வித்யா தன் தன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆணவத்துடன் பதில் சொன்னதுதான் லக்கிலுக்கிற்கு பிரச்சனை. அதாவது லக்கிலுக் தான் படித்ததாக சொன்ன சங்கரமடத்து பள்ளியில் பவ்யமாக (அவர் அப்பாவை போன்ற மனநிலையில்) இருந்திருந்தால் மற்ற அம்பிகளுக்கும், வாத்தியார்களுக்கும் கோபம் வந்திருக்காது. அவர் கொஞ்சம் தன்மானத்துடன் இருந்ததுதான் பிரச்சனை. இப்போது வித்யாவும் அவ்வாறு ஒரு சகவலைப்பதிவாளராய் கோபமாய் பதில் அளித்ததுதான் பிரச்சனை. அந்த வகையில் ஒரு ஆதிக்க திமிர்தான் லக்கிலுக், விடாது கருப்பு மனநிலையில் வேலை செய்கிறது.

இந்த பிரச்சனை குறித்து இதற்கு மேல் பேசும் நோக்கம் இல்லை. விடாது கருப்பிடம் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். உதாரணமாக திருமலையிடம் நான் ராகாகியில் பல புரட்டுக்களை முன்வைத்திருந்ததாகவும், திருமலை அதை வெளிபடுத்தி என்னை 'ஓடஓட விட்டு கட்டையை எடுத்து துரத்தியதாக' சொல்லியிருந்தார். (http://vivathakooththu.blogspot.com/2006/08/blog-post.html#c115594690242354990) அந்த ராகாகி விவாதத்தில் பெரியாரை இனவெறியர் என்பதாக திருமலையும், அதை எதிர்த்து நானும் நிலைப்பாட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அதில் நான் என்ன புரட்டு வைத்தேன், திருமலை அதை எப்படி தகர்தார் என்று, விடாது கருப்பு சோறு போட்டு தின்றிருந்தால் விளக்க வேண்டும் என்று எழுத நினைத்தேன். அவர் பதிவை படித்த பிறகு அவர் சோறு தின்பவரல்ல என்று தெளிவாகவே தெரிந்து விட்டதால் இது போன்ற கேள்விகளுக்கு தேவையே இல்லை.

நான் வித்யா அவர்களின் பதிவில் தொடர்ந்து பின்னூட்டுபவனல்ல. அவர் எழுதத் தொடங்கிய கட்டத்தில் மட்டும் என் வரவேற்பை தெரிவித்திருந்தேன். அவரை போன்றவர்கள் எழுதுவது நம் சமூகத்தின் பண்மை தன்மையை வளர்ப்பதுடன், நமது சகிப்புத்ன்மை பரந்த மனப்பான்மைக்கான ஒரு அடித்தளமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு பரவலாய் கிடைத்த வரவேற்பு மிகவும் மனநிறைவை அளித்தது. ஒருவர் வேலைக்கு போவதும் சமூகத்தில் ஒரு அங்கத்தினராய் இருப்பதும் வலைப்பதிவில் எழுத வருவதும் எந்த விதத்திலும் சாதனையும் அதிசயமும் அல்ல. ஆனால் சமூகத்தால், தான் பிறந்த குடும்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டு, குடியிருக்கும் இடம் தொடங்கி பார்க்கும் வேலை வரை வெளியேற இயலாத இறுக்கமான தன்மையுடன், தப்பமுடியாத 'விதிவசபட்ட நிலையில்' வைக்கப்பட்ட ஒருவர் அதை செய்வதாலேயே இவையெல்லாம் சாதனைகளாகிறது. வித்யா மேலும் சாதிக்க வேண்டும். தொடர்ந்து வலைப்பதிவில் எழுத வேண்டும். இது போன்ற இடர்களை, சமூக காட்டிமிராண்டித்தனங்களை ஏற்கனவே எதிர்கொண்ட அவர், தளராமல் தன் பயனத்தை தொடர நான் புதிதாய் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு கடமையாக இங்கே சொல்லிவைக்கிறேன்.

Sunday, August 20, 2006

கழிவு!

திருமலைக்கு நான் கடைசியாக ராகாகியில் எழுதிய மடல் கீழே! நான் அறிந்த வரை அவர் இதற்கு பதில் எதுவும் எழுதவில்லை.


**************************************************************************


திருமலை (அசோகமித்திரன் தொடர்பான இழையில்) என் மீது
பிராண்டியிருந்ததை (வேண்டுமென்றே) ஊரப்போட்டு முழுவதும் படித்தேன் - மிக
நிதானமாக, மிகுந்த பொறுமையுடன். படித்ததன் முக்கிய காரணம் அவர் பல
திரித்தல்களையும், புளுகுகளையும் முன்வைத்திருப்பார் என்று நான்
எதிர்பார்த்தது. என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில புளுகுகளையும்,
திரித்தல்களையும், ஒரு பதிவிற்காக இங்கே மறுக்க வேண்டிய என் அவசியம்
காரணமாய் இந்த மடல் எழுதப்படுகிறது. திருமலையின் மடலை படிக்காதவர்கள்,
இது போன்ற சில்லரை விஷயங்களை (என்னை பற்றிய அவதூறுகளை) பற்றி
கவலைப்படாதவர்கள், என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் இதை படிக்க
தேவை இல்லை.

திரித்தல் 1. இது அவர் திரிக்கும் வகையில் நானே வசதிப்படுத்தி
கொடுத்தது. ராகாகியில் நடைபெறும் பல விவாதங்கள், அதன் 'முக்கிய'
அங்கத்தினர்கள் குறித்து எனக்கு கருத்துக்கள் உண்டு எனினும், அதை நான்
எங்கேயும் சொல்லவில்லை. குறிப்பாக அவர் மீண்டும் மீண்டும் திரித்து
சொல்வது போல், நான் ராகாகியை 'குமட்டல், அழுகல், நரகல்', இங்கே
எழுதுபவர்களை எல்லாம் 'அசடுகள், தரமற்றவர்கள்' என்று எதையுமே
சொல்லவில்லை. திருமலையை பற்றி கூட அப்படி எதுவும் குறிப்பிடவில்லை.
'குமட்டல்' என்ற வார்த்தையையே நான் ஒருமுறைகூட இங்கே பயன்படுத்தவில்லை.
அந்த வார்த்தையை நான் PKசிவக்குமார் பற்றி என் பதிவில் எழுதிய
சந்தர்பத்தில் மட்டுமே (இரண்டு அல்லது மூன்று முறை) குறிப்பிட்டிருக்கிறேன்.
சிவக்குமார் பயன்படுத்தும் ஒருவகை தர்க்கம் பற்றிய என் கருத்திலேயே இந்த
'குமட்டல்' என்ற வார்த்தை வருகிறது. அதற்கு வேறு உதாரணம் எனக்கு
கிடைக்கவில்லை என்பதையும் சொல்லியுள்ளேன். உதாரணமாய் சிவக்குமார்
செய்யும் (எதிராளியை எல்லா வகையிலும் மிரட்டும் வொயிட்மெயில் கலந்த)
'தர்கத்தையே' திருமலையும் தன் எழுத்துக்களில் பயன்படுத்தினாலும், திருமலை
பற்றி கூட நான் அப்படி சொல்லவில்லை. திருமலை போன்ற
சாதிவெறியர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னால் திருமலையை
எளிதாக தெளிவாக பரிச்சயமான சட்டகத்தில் அடக்க முடியும். அவர் செய்யும்
திரித்தல் தர்க்கமும் எனக்கு பரிச்சயமானதே. மேலும் எல்லோரையும் ஒரே
புட்டிக்குள் நான் அடைத்து பார்பதும் இல்லை. உதாரணமாய் டோண்டுவை கூட ஜாதி
வெறியர் என்று நான் சொன்னதில்லை. அவர் எழுத்தை ஒரு பழமைவாதம் கலந்த
பார்பனியமாய் மட்டுமே பார்கிறேன். அதை பெரிய ஆபத்தாகவும்
பார்க்கவில்லை. அவரிடம் ஒருவகை நேர்மை வெளிப்படுவதாகவும் பலமுறை
சொல்லியுள்ளேன்.

நான் சொன்னது நடராஜனுடனும், திருமலையுடனும் (மட்டும்) எனக்கு விவாதிக்க
எதுவும் இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. இங்கே இந்த சந்தர்பத்தில்
விவாதிக்கும்போது நான் இவர்களுடனேயே விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால்
இந்த இடத்தை விவாதிப்பதற்கான இடமாக நான் நினைக்கவில்லை.
இணையத்தில் பெரியாரை முன்வைத்து எத்தனையோ வெட்டி விவாதங்கள்
காலகாலமாய் நடந்துவருகிறது. அப்படிப்பட்ட இன்னொரு விவாதத்தில் இறங்க
எனக்கு ஆர்வமில்லை. மற்றபடி இரா.மு ஜேஜே சில குறிப்புகள் பற்றி என்னுடன்
விவாதிக்க வந்தாலோ, பாரா பாலஸ்தீன் பிரச்சனை குறித்து விவாதிக்க
வந்தாலோ, பத்ரி வெங்கட் போன்றவர்களோ என்னுடன் ராகாகியில்
விவாதித்தாலோ அதில் எனக்கு எந்த பிரச்சனையும் அல்ல. இந்த
அசோகமித்திரன் தொடர்பான இழையிலேயே இகாரஸ¤டனும், சுரேஷ¤டனும்
பேசியுள்ளேன். வலைப்பதிவில் விவாதிக்கும்போது காப்பி கிளப்பில்
விவாதிப்பதில் மட்டும் என்ன பிரச்சனை? விவதிக்கும் நபரும் அவரின்
தர்க்கமுமே பிரச்சனையே தவிர இடம் அல்ல.

நான் சொல்ல வந்ததை அப்படியே எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம்
இல்லை. ஆனால் அதை மாற்றிபோட்டு ராகாகியை நான் 'குமட்டல், நரகல்'
என்று சொன்னதுபோலவும், அதன் அங்கத்தினர்களை திட்டியது போலவும், இவர்
ராகாகியின் முதலாளி போலவும் முற்றிலும் திரித்து அளந்து கட்டியுள்ளார்.
(நடராஜன் சொன்னதை நான் ஒப்புகொண்டு பேசியதையே நான் ஏதோ
'வீடியோ ஆதாரம்' கேட்டதாக திரித்து, பின்னர் அதற்கு ஒரு சப்பைகட்டு
கட்டியது போல் இதற்கும் எதையாவது ஒளரல் சப்பைகட்டை பதிலாய் தருவார்.)

இப்போது எழுதுவதும் விவாதம் அல்ல. பாத்ரூம் சுவரில் என்னை பற்றி
அபாசமாய் எழுதப்பட்டுள்ளதை நான் மறுக்க முனைந்தால் அதை விவாதம் என்று
சொல்லமுடியாது.

திரித்தல் 2. நான் இங்கே மற்றும் வேறு இடங்களில் எழுதிய பலவற்றை முற்றும்
முழுதாக அவர் திரித்துள்ளார் என்றாலும் இதை ஒரு உதாரணத்திற்காக மட்டும்
குறிப்பிடுகிறேன். எப்படி ஒரு விஷயத்தை சொன்னதன் சந்தர்பத்திலிருந்து
பெயர்த்தெடுத்து போகிற போக்கில் சொல்லி செல்ல முடியும் என்பதற்கு
உதராணமாய் மட்டும் குறிப்பிடுகிறேன்.

அவர் மேலோட்டமாய் திரித்து சித்தரிப்பது போல் ஒரு படத்தில் பெண்களை
கொல்லுவதால் மட்டும் அந்த 'நடிகனின் ஆண்குறியை அறுக்க வேண்டும்' என்று
அறைகூவவில்லை. அப்படியிருந்தால் தினமும் ஒரு 'ஆண்குறி அறுப்பு' பதிவு
போட மட்டுமே எனக்கு நேரம் இருக்கும். 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில்
நடித்த கமல் குறித்து கூட நான் அப்படி சொல்லவில்லை. என் பதிவுகள் இங்கே
இருக்கிறது.

http://rozavasanth.blogspot.com/2004/11/blog-post_30.html

http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html

இங்கே மட்டுமில்லாமல் பல வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் அது
திரிக்கப்பட்ட போதெல்லாம், கூறியதன் பொருள், அதற்கான காரணம்,
(இங்கே திருமலை உட்பட) அதை பற்றி பேசும் யாரும் மன்மதன் படக்கதையை
பற்றி பேசாதது என்று, விளக்கிய பின்னும் கூசாமல் இங்கே திரிக்கிறார்.
மன்மதன் படத்தில் சிம்பு பெண்களை கொல்வது அல்ல பிரச்சனை. அதை ஒரு
தர்மமாக வலியுறுத்தியதுதான் பிரச்சனை. அதே தர்மத்தை சிம்பு மீது
பிரயோகிப்பதை பற்றியே எழுதியிருந்தேன். அந்நியன் பார்வையின் படி
சங்கருக்கும் மரணதண்டனை மட்டும்தான் கொடுக்க முடியும் என்று சிலர் எழுதியது
போன்றதுதான் இதுவும். ஆனால் அந்நியன், சிகப்பு ரோஜாக்கள் போன்ற
படத்திலாவது படக்கதை சார்ந்து, கொலைகான நியாயத்தை(மனநோய்
என்பதாக) வாசிக்க இடமுண்டு. மன்மதன் படத்தில் அது கிடையாது. என்
வரிகள் கீழ்கண்டவாறு உள்ளது.

"ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை
நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று
கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும்
சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம்
உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு
கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும்
தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன்
உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து
கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து
யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான்
பொறுப்பல்ல."

தமிழ் சூழலில் கண்டதற்கும் கணடனங்கள் வரும். ஆனால் ஒரு திரைப்படம்
'நடத்தை கெட்ட' பெண்களை கொல்வதை தர்மப்படுத்தி பேசுவதை கண்டிக்க
நாதியில்லாத சூழலியே இதை நான் எழுத நேர்ந்தது. முதல் பதிவில்
திரைப்படத்திற்கு ஒரு கண்டனத்தை கூட நான் வைக்கவில்லை. வலைப்பதிவில்,
மற்றும் இணயத்தின் மற்ற இடங்கள் பத்திரிகைகள் படம் குறித்து முழுக்க
நேர்மறையாய் பாரட்டி விமர்சனங்கள் வந்த பின், படம் முதலிடத்தில்
ஓடுவதாய் செய்திகள் வந்த பின் என் இரண்டாம் பதிவு எழுதப்பட்டது. மற்ற
எத்தனையோ விஷயங்களுக்கு வருவது போல், குறைந்த பட்சம் தமிழ்நாட்டு
பெண்கள் இயக்கங்கள் இதை மெல்லியதாய் எதிர்ப்பதை கேள்விப்பட்டிருந்தால் கூட
'ஆண் குறி அறுக்க வேண்டும்' என்ற அளவில் அறைகூவல் விட எனக்கு அவசியம்
இருந்திருக்காது. வரிகளை எப்படி திரிக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணம்
மட்டுமே இது.

இனி சில புளுகுகள் குறித்து.

புளுகு 1. இது குறித்து ஏற்கனவே சிவக்குமாருக்கு பதிலாய் எழுதி அது இன்னும்
மறுக்கப்படாத நிலையில் கூசாமல் மீண்டும் இவர் புளுகுகிறார். அதை இங்கே
காணலாம்.
http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html
.

அதில் சொல்லாத ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். தனது
மடல் முழுவதும் - நான் எதையோ எழுதி அதை மறைப்பதற்காக அழித்து
விட்டதாக- திருமலை வொயிட்மெயில் செய்யும் விஷயம் ('என் ஜட்டிக்குள்
கைவிடுவதாக' என்று நான் எழுதியதாக சொல்வது) டோண்டுவிற்கு ஒருமுறை
நான் எழுதியது. அதனால் டோண்டு காயப் படவும் இல்லை. மாறாக என்
நேர்மையையும், வெளிப்படையான மனதையும் பாராட்டி மின்னஞ்சல் எழுதினார்.
அதை இப்போதும் டோண்டு மறுக்க மாட்டார் என்று தெரியும்.

என் அடையாளங்களை, குறிப்பாய் ஜாதிய அடையாளங்களை நோண்டி அது குறித்து
கிசுகிசுத்தனமாய் எழுதுவதை(இப்போது திருமலையும் செய்திருப்பதை)யே 'என்
ஜட்டிக்குள் கைவிடுதல்' என்று ஒருமுறை விவரித்திருந்தேன். முன்பு என் பதிவில்
அடிக்கடி தொல்லை தந்த ஒரு அனானிமஸிற்கு அதை (பற்றி பேசும்போது)
சொல்லியிருக்கிறேன். அதே வேலையை ஒருவர் செய்து, டோண்டுவின்
வலைப்பதிவில் எழுதியிருந்தார். டோண்டு அதை சரியாய்
புரிந்துகொள்ளாமலேயே அதை என் பதிவில் எழுதினார். டோண்டுவிற்கு
விஷயம் சரியாய் புரியவில்லை என்பது எனக்கும் தெரிந்ததால் 'தன்
எதிர்பாளர்கள் மட்டுமில்லாமல், ஆதரவாளர்கள் கூறுவது கூட டோண்டுவிற்கு
புரியவில்லை' என்றே எழுதியிருந்தேன். ஒரு சந்தேகத்தின் அடிப்படையில்
'ஒருவேளை டோண்டு என் 'ஜட்டிக்குள் கைவிட முயன்றிருந்தால்' அதை நேரடியாய்
நங்கநல்லூருக்கு வரும் போது காட்டமுடியும்' என்று எழுதியிருந்தேன். இதன்
அர்த்தம் என்னவென்று குழந்தைக்கும் புரியும். ஆனால் 'சந்தேகத்தின் பலனை
டோண்டுவிற்கு அளித்து அவர் புரியாமல் எழுதியதாக எடுத்துகொள்வதாக'வே
எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே டோண்டு அதை
புரிந்துகொள்ளாமல்தான் செய்திருந்தார். அதை அவர் தெளிவாக்கிய பின்,
அவருக்கு தனிப்பட்ட முறையில் எழுதி, அவர் விஷயத்தை புரிந்துகொண்டு, தான்
புரிந்துகொள்ளாமல் எழுதியதை எனக்கு சொல்லி, பின் அவரது அனுமதியையும்,
ஆலோசனையையும் பெற்று இது தொடர்பான பின்னூட்டங்களை நீக்கினேன். இதற்கு
இடையில் ஒரு முழுநாள் அவைகள் என் தளத்தில் இருந்து அதை பலர்
வாசித்திருக்க முடியும். நீக்கியதன் அறிவிப்பும் அங்கே இன்னொரு முழுநாள்
இருந்தது. இதுதான் நடந்தது. எழுதிய எதையும் மறைக்கும் நோக்கத்தில் அந்த
பின்னூட்டங்களை நீக்கவில்லை. டோண்டு இதனால் புண்படவும் இல்லை. அவர் என்
நேர்மையையும், மற்றவர் கருத்திற்கு நான் அளிக்கும் மரியாதை, மற்றும்
வெளிப்படையான தன்மை குறித்து பாராட்டியே எனக்கு எழுதியிருந்தார். நான்
டோண்டுவை கடுமையாய் எதிர்த்தாலும், பலமுறை டோண்டுவிடம் ஒருவகை நேர்மை
வெளிப்படுவதாகவே சொல்லியுள்ளேன். அந்த என் நம்பிக்கையில் அவர் மேலே
நான் எழுதியுள்ள எதையும் மறுக்க மாட்டார் என்று எனக்கு தெரியும். இப்படி
டோண்டுவிற்கே பிரச்சனை இல்லாத விஷயத்தை, அவர் எங்கேயுமே எழுப்பாத
விஷயத்தை வைத்து இவர்கள் வொயிட்மெயில் செய்வதும், புளுகுவதும் நான்
இவர்களை பற்றி சொல்ல வருவதற்கு ஒரு பொருத்தமான உதாரணம்.

இதை தவிர ஒருவரிடம் பேசப்பிடிக்காமலோ, எழுத்துபிழை காரணமாகவோ,
பலமுறை வந்துவிட்டதன் காரணமாகவோ நீக்கியுள்ளேன். ஆனால் அவையனைத்தும்
வேறு இடத்தில் என் பதிவில் பதிவாகியுள்ளன. எந்த இடத்திலும் நான்
எழுதியதை அழித்து எதையும் நான் மறைக்க பார்த்ததில்லை. இப்போதும் நான்
எழுதியது குறித்து மற்றவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் நான் ஏதோ ஆபாசமாய் எழுதி, அதை நீக்கி எதையோ மறைப்பதாக
திருமலையும், சிவக்குமாரும் புளுகுவதை மட்டுமே நான்
மறுக்கிறேன்.அப்படிப்பட்டவற்றை சிவக்குமாரோ, திருமலையோ (டோண்டு அதை
செய்யமாட்டார்) ஆதாரம் தரலாம். (சும்மா சந்தர்பம் குறிப்பிட்டால் கூட
போதும்). ஆதாரம் தர இயலாத நிலையில் அவதூறை ஒப்புகொள்ளவோ,
மன்னிப்பு கேட்கும் நாகரீகத்தையோ நிச்சயம் இவர்களிடம்
எதிர்பார்க்கமுடியாது. வாயை மூடிகொள்ளும் காரணத்திற்காக மட்டுமே இதை
சொல்லுகிறேன்.


புளுகு 2. அதே பதிவில் நான் எழுதிய இன்னொரு விஷயம் குறித்தும் கூசாமல்
புளுகுகிறார். அதையும் இங்கே எழுதியிருக்கிறேன்.
http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html

நான் திண்ணையை ஒதுக்கவில்லை. அவரகள் என்னை தடை செய்தனர். அதற்கு ஒரே
காரணம் ஒரு RSSகாரரரின் புளுகுகளை, அதுவும் அறிவியல் தொடர்பான
புளுகுகளை, நான் வெளிகொணர முயன்றது மட்டுமே. வேறு ஏதாவது காரணம்
இருப்பதாக கருதும் யார் வேண்டுமானாலும் இது குறித்து பேசலாம். அவ்வாறு பேச
நான் பலமுறை அழைப்பு விடுத்துவிட்டேன். பதிலில்லை. நான் திண்ணையில்
தடை செய்ய காரணமாய் இருந்த கட்டுரை இங்கே இருக்கிறது.
http://www.geotamil.com/pathivukal/rosavasanth_february2004.html
பலமுறை அழைத்தாகிவிட்டது. மீண்டும் அனைவரையும் இந்த கட்டுரையில் உள்ள
வசவு வார்த்தைகளை, கெட்ட தரக்குறைவான வார்த்தைகளை கண்டு பிடித்து தர
அழைக்கிறேன். இதற்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு திருமலைக்கு நன்றி.


வேறு சில புளுகுகளும் இருக்கலாம். அதை மறுக்கும் ஒரே காரணத்திற்காக
மீண்டும் ஒருமுறை திருமலை எழுதியதை படிக்கும் துன்பத்திற்கு ஆளாக முடியாது.
என் வலைப்பதிவின் முகவரி தாங்கிய ஒரு மடலில், ஒரு சொடக்கு தூரத்தில்
போய் தெளிவாக்கிகொள்ள கூடிய விஷயங்களை பற்றி கூசாமல் திரிக்கவும்,
புளுகவும் கூடியவர், பெரியாரை பற்றி என்ன வெல்லாம் புளுகவும் திரிக்கவும்
கூடும் என்பதை அவரவர் கறபனை செய்துகொள்ள வேண்டும்.

அவர் மடலை படிக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது. பெரியார்
பேசியதாக அவர் தேதி போட்டும் போடாமலும் அளித்த மேற்கோள்கள்
மொட்டையானவை. அதை முழுவதும் அளிக்க அவரிடம் ஆதாரம் எதுவும் இப்போது
இல்லை. கைவசம் அந்த பத்திரிகையோ, அல்லது பெரியார் பேசியதன்
முழுவிவரமும் இல்லாமல் எங்கிருந்து எதனடிப்படையில் தேதிபோட்டு
'ஆதாரத்தை' அளித்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். அதை அவர்
தெளிவுபடுத்தவில்லை. என்னால் 50 வருடங்கள் முந்தய விடுதலை
பத்திரிகைகளை பார்த்து மறுக்கும் வசதி நிச்சயமாய் இப்போது இல்லை.
இணையத்தை தவிர தமிழ் படிக்க வேறு வழியில்லாமல் ஜப்பானில் உட்கார்ந்து
கொண்டிருக்கிறேன். பெரியாரின் மொழிநடை, பேசியவை குறித்த எனது
பரிச்சயம், மற்றும் திருமலை (இந்த விஷயத்தில்) உண்மை பேசமாட்டார் என்ற
நம்பிக்கையில் மட்டுமே என் கருத்தை கூறினேன். இப்போதிருக்கும் நிலையில்
அவரிடமும் ஆதாரம் இல்லை, மறுக்க என்னிடமும் இல்லை. இந்த நிலையிலேயே
இத்தனை வெத்து வேட்டுக்களை வசவுகளாய் திருமலையால் மட்டுமே கொடுக்க
முடியும்.

கடைசியாய் ஒருவர் தன் அடையாளத்தை மறைத்து (அதாவது முகமுடியாய்)
எழுதுவதாலும், அப்படி எழுதாமல் இருப்பதாலும் இனவெறித்தன்மை எப்படி
தீர்மானிக்கபடக்கூடும் என்பது இதை பற்றி முதலில் (பொதுவாய்) பேசிய
சிவக்குமாருக்கும், அதை சற்று மாற்றி வாந்தியெடுக்கும் இந்த
அதிபுத்திசாலிக்கே வெளிச்சம். ஆனாலும் திருமலை முன்வைப்பது போல் நான்
முகமுடி அல்ல. என் இயற்பெயர் இந்த மடலில் உள்ளது. இணையத்தில் உள்ள பல
நண்பர்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். நான் இருக்குமிடம், பார்க்கும்
வேலை, வேலை பார்க்கும் இடம், மற்ற விவரங்கள் பலருக்கும் தெரியும்.
ராகாகியின் ஒரு முக்கிய உறுப்பினர் என் மனைவியை சந்தித்திருக்கிறார்.
டோண்டுவிற்கு என்னை பற்றி சில விவரங்கள் தெரியும். அவரை நான்
எதிர்காலத்தில் சந்திக்கக் கூடும். ராகாகியின் முக்கிய சில
உறுப்பினர்களை சந்திக்கும் திட்டம் சில நாட்களில் உண்டு. பலருடன்
தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு. தொலைபேசியில் பேசியுள்ளேன்.
நானே என்னை பற்றிய சில தகவல்களை என் எழுத்துக்களில் தந்துள்ளேன்.
இணையத்தின் மூலம் என்னை பற்றிய தகவல்களை பெறுவதும் கடினமில்லை. இதை
படிக்கும்(திருமலை உட்பட) யாருக்கேனும் என்னுடன் பேச விரும்பினால் என்
மொபைல் எண்ணை தரமுடியும்.

இந்நிலையில் 'என் ஜட்டிக்குள் கைவிடுவது' என்று நான் எதை
விவரித்தேனோ, அந்த வேலையை தன் மடலில் திருமலை செய்திருக்கிறார்.
என் ஜாதி, அதனுடன் எனக்குள்ள முரண்பாடான, முரண்நகையான உறவு, எழுத்துக்கும்
என் வாழ்வுக்கும் இடையிலான சமரசங்கள் இது குறித்து, அதற்கான(அதை
மற்றவர்கள் வாசிப்பதற்கான) முக்கியத்துவம் ஏற்படும் கட்டத்தில் நிச்சயம்
எழுதுவேன். அதை மறைக்க, நிச்சயமாய் என் ஜாதியை மறைக்க, எனக்கு எந்த
அவசியமும் இல்லை. அது என் கருத்துக்களுக்கு சாதகமாக இருக்குமே ஒழிய
பாதகமாக முடியாது. மேலும் என் ஜாதி பல நண்பர்களுக்கு தெரியும்.
திருமலையைபோல எது எதற்கோ போராடிய குடும்பத்திலிருந்த வந்ததாக நான்
பீலா விடுவதில்லை. அவரைப்போலவே அப்படியே அச்சாக பீலா விடக்கூடிய
எல்லா சாத்தியமுள்ள ஒரு பிண்ணணியிலிருந்தே நான் வந்தாலும், அந்த
பீலாக்களை வன்மையாய் மறுப்பவன். என் பாட்டனார், என் பெற்றோர்
இவர்களிடன் உள்ள ஜாதிவெறியையும், என் சொந்த ஜாதியையும், வாழ்வின்
அத்தனை தளங்களிலும் எதிர்த்து வருபவன் நான். அதற்காக பல விலைகளை
கொடுத்தவன். இன்றைக்கும் சரி செய்ய இயலாத நிலையிலேயே, (அவர்களுக்கு
வேறு நாதியில்லாத) ஒரே மகனான என் பெற்றோர்களுடனனான உறவு
இருக்கிறது. மிகவும் எதிர்பாராத முறையில் நிகழ்ந்த ஒரு துயர
சம்பவத்தினால், அந்த ஒரே காரணத்தால் மட்டும் சில சமரசங்களை
பெற்றோர்களுடன் செய்துகொண்டவன். அதற்கான சமன்பாட்டை நான் மட்டுமே
தீர்மானிக்க முடியும். அந்த சமரசங்களை நான் சொன்னதன்றி வேறு யாருக்கும்
தெரியவும் வாய்ப்பில்லை. திருமலை யார் என்ன சொன்னதை கேள்விப்பட்டார்
என்று எனக்கு தெரியாது. அது குறித்து கவலையும் இல்லை. (டோண்டு உட்பட)
யாருடனும் பேசும் போது இது குறித்த ஜாக்கிரதை உணர்வை வைத்துகொள்வதும்
கிடையாது.

திருமலையை நான் சாதிவெறியர் என்பது அவருடைய எழுத்தை முன்வைத்து
மட்டுமே. அவர் குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது. அதற்கான
முயற்சியையும் கவலையும் நான் ஒருபோதும் கொள்வதில்லை. வேறு யார்
குறித்தும் கூட அவர்கள் எழுதியதை தவிர்த்து மற்றவற்றை வைத்து எதுவும் இதுவரை
பேசியதில்லை. எப்படியிருந்தாலும் தன் முன்னோர்களின் அழுகலை தின்று
அழுகலுடனேயே வாழ்ந்து அதையே உன்னதமாய் முன்வைக்கும் திருமலை போன்ற
சாதிவெறியர்களுக்கும், பெயர் சொல்லாமல் என் தளத்தில் இது குறித்து
எழுதிய மற்ற அனாமதேய புழுக்களுக்கும் என் நக அழுக்கை தீண்டும் தகுதிகூட
கிடையாது. என்ன அடைப்படையில், யாரிடம் கேள்விபட்டு, நான் வீட்டில் ஒரு
வேஷமும், இணையத்தில் ஒரு வேஷமும் போடுவதாக, (அதுவும் இவர்
கடைபிடிக்காத) பிராமணியத்தை நான் வீட்டில் கடைபிடிப்பதாக குற்றம்
சாட்டி எழுதினார் என்பதையும், மற்றவரை முனகுவதற்கெல்லாம் மன்னிப்பு கோரி
உதார் விடுபவர், அதை பற்றி ஆதாரம் தரமுடியாத பட்சத்தில் மன்னிப்பு
கேட்கும் நாகரீகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று நன்றாகவே தெரியும்.
வாயை பொத்திகொள்ள மட்டுமே மீண்டும் இதை சொல்கிறேன். அந்த
அளவிற்காவது வெட்கம் இருக்குமா என்பதும் சந்தேகமே!

இதற்கு திருமலை எழுதப்போகும் பதிலையும் உடனடியாய் படிக்கப் போவதில்லை.
படிக்காமலே கூட இருக்கலாம். நிச்சயமாய் அதற்கு பதில் சொல்லும் ஆசை
இல்லை. ஆனால் நான் இன்னும் சில புளுகுகளை எதிர்பார்பதால் அதை மறுக்க
மட்டும் ஒருவேளை பதில் எழுதலாம். உதாரணமாய், இந்த மடலில் நான்
சொன்னதை மீண்டும் திரித்தும், தமிழ்மணத்தில் நடந்த சில விவகாரங்கள்,
ஆபாச சண்டைகளை திரித்தும் சில வாதங்களை அவர் வைக்க முடியும். அது
குறித்து கவலையில்லை. ஆனால் அதையும் தாண்டி சில அப்பட்டமான புளுகுகளை
முன்வைக்கும் துணிவு இவருக்கு உண்டு. அதை மட்டும் ராகாகியின் சூழல் கருதி
மறுக்கும் தேவை எனக்கு இருக்கும். ஒருவேளை 'என்னவும் சொல்லிவிட்டுத்
தொலையட்டும்' என்று புறக்கணிக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி மறுத்தால் அது
விவாதம் அல்ல. திருமலை போன்றவர்கள் புழங்கும் இடத்தில் நானும் புழங்க
நேர்வதால் என் மீது ஏற்படும் நிர்பந்தம் மட்டுமே.

திருமலை எழுதிய ஆபாச மடல் முழுவதும் கிழே உள்ளது. அதற்கு கீழே என்
பழைய மடல் உள்ளது.


************************************************************************************

இங்கு ரோசா வசந்த் என்ற பெயரில் எழுதுபவர் தன்னை இணைய உலகின் மகா
மேதாவியாகவும், இவரது வலைப் பதிவில் இவருக்கு ஜால்ரா போடும் கும்பலைத்
தவிர
இது போன்ற குழுமங்களில் எழுதுபவர்கள் எல்லோரும் ஏதோ வெட்டிப் பேர்வழிகள்
என்றும், அசடுகள், தரமில்லாதவர்கள் என்றும் பொருள்படும் படி இங்கு பதில்
அளி
த்துள்ளார். இவருக்கு எங்கு எழுதுவதைப் படிக்க மாட்டேன் அல்லது அரைகுறையாய்
படித்தேன் என்று சொல்லிக் கொண்டே நான் எழுதியவற்றுக்கு ஆதாரம்
கேட்டுள்ளார். அரைகுறையாய் படித்தவருக்கு நான் ஈ வெ ராவைப் பற்றிக்
கேட்டக்
கேள்விகள் மட்டும் பளிச்சென்று கண்ணுக்குப் பட்டுவிடும் போல. விவாதங்களை
எல்லாம் வெட்டி விவாதம் என்று சொல்லிக் கொண்டே, கலந்து கொள்வதில்
ஆர்வம்
இல்லை என்று சொல்லிக் கொண்டே பக்கம் பக்கமாய் பதில் எழுதுவார். இனி
இங்கு
எழுதவே மாட்டேன் என்று வீராவேசமாகச் சொல்லிச் சென்ற பொழுதும் ஆயிரம்
முறை தி
ரும்ப வந்து எழுதுவார். இவரது இது போன்ற அசட்டுத்தனமான நடவடிக்கைகள்
எல்லாம்
இணைய உலகில் இன்று பெரிய ஜோக்காக உலவுகிறது. அது போல இந்த இடம்
இவர்
விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்குத் தகுதியான இடமாக இவருக்குத்
தெரியவி
ல்லையாம். அதற்கான இடமாகவும் இவர் நினைக்கவில்லையாம். இதற்கு முன்
இவரது
நண்பர் இது குமட்டும் இடம் என்று சொல்லி விட்டுச் சென்றார். அவருக்கு
சொன்ன அதே பதில்தான் இவருக்கும் நான் அளிப்பேன். ஆம் இது இவர் போன்ற
ஆட்கள் எழுதக் கூடிய கழிவறைச் சுவர் இல்லைதான், ஆண் குறியை அறுப்பேன்,
என்றும், ஜட்டிக்குள் கையை விட்டுப் பார்க்கட்டும் என்றும், அவிழ்த்துக்
காட்டுகிறேன்
என்றும், மிகவும் கண்யமான மொழியில் நாகரீகமானப் பதிலை இவரை இங்கு
யாரும்
எழுத விட மாட்டார்கள் என்பதினால் இங்கு கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லை
என்கி
றார் போலும். இவரது கண்யமானப் பதிவுகளைச் சகித்துக் கொள்ளக் கூடிய இடம்
இந்த
குழுமம் இல்லைதான் என்ன செய்வது? இங்கு அது போன்ற தரமான எழுத்துக்களை
யாரும் இங்கே எழுத மாட்டார்கள் என்பதனாலும், எழுதினால் அனுமதிக்க
மாட்டார்கள்
என்பதினாலும் இவருக்கு விவாதத்தில் கலந்து கொள்ளக் கூடிய இடமாகத்
தோன்றாமல்
போயிருக்கலாம். அந்த வரை, இவர் பாணியிலேயே சொல்லுவதானால் இதை
ராயர்
காப்பி கிளப்பிற்கு கிடைத்த ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்ளலாம்.
இவர் இது
போல் ஒதுக்கும் அல்லது அவர்கள் இவரை ஒதுக்கும் மற்றொரு இடம் தி
ண்ணை, அங்கும் ஆபாசங்களுக்கு இடம் அளிக்கப் படுவது கிடையாது. இது வி
வாதத்துக்குத் தகுந்த இடம் இல்லையென்றால் ஆதாரம் கேட்டதுடன் மட்டும்
நிறுத்திக்
கொண்டிருக்கலாமே, பக்கம் பக்கமாக பதில் எழுதவில்லை என்று யார்
அழுதார்கள்?

கேட்டால் அது அசட்டுத்தனமானது என்பார். அசட்டுத்தனம், அம்பி போன்ற ஒரு
சில
வார்த்தைகள் இன்றி இவரால் நாலு வாக்கியம் கூட எழுத முடியாது
என்பதனால் அவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் இடங்கள் விவாதத்திற்குத்
தரமில்லாத
இடங்களகாகவும் அசட்டுத்தனமான கேள்வி கேட்கும் இடங்களாகவும் மாறி விடும்.
முதலி
ல் இந்த இடத்தையும், இதில் எழுதுபவர்களையும் மதிக்கக் கற்றுக் கொண்ட
பின்னர் எந்த
ஒரு விவாதத்தையும் இவர் தாராளமாகத் தொடரட்டும். இங்கு, இதுவரை இவர்
கண்யமாகவே எழுதியிருக்கிறார் என்ற பொழுதும், இந்த இடத்தை விவாதம்
செய்வதற்குத்
தகுந்த இடமாகத் தான் கருதவில்லையென்று சொல்லும் பொழுதே இவரது ஆணவமும்,
கர்வமும் வெளிப்படுகிறது. இவரைப் போலவே நானும் இவரும் இவரது ஜால்ராக்
கும்பல்கள் எழுதும் வலைப் பதிவை நாகரீகமான இடங்களாகக் கருதுவதி
ல்லை. அங்கெல்லாம் போய் பின்னூட்டம் இடுவதும் இல்லை. என்னைப்
போன்றவர்கள் வராமல் இருப்பது இவரது வலைப்பக்கத்துக்கு கிடைத்த கவுரவம்
பாராட்டு
என்று வழக்கம் போல பீற்றிக் கொள்ளலாம். ஆனால் நான் அங்கு சென்று உன்
வலைப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, குமட்டுகிறது, தரமில்லாதது, குரோதம்
நி
றைந்தது, என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டே பதில் போடுவது
கிடையாது. துஷ்
டனைக் கண்டால் தூர விலகு என்பதைக் கைக் கொண்டு அங்கெல்லாம் பதிலுடுவதும்
கி
டையாது. அது போன்ற குறைந்த பட்ச நாகரீகம் எதையும் இவர் அறிவதில்லை
என்பது
தான் இவரது ஆணவமான பதில் விளக்குகிறது.

----------------------------------------------------------------------
---------------------------------------------------------------

இனி எனது வரிக்கு வரி பதில்

<
திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்.
>


எது திரித்தல் எது புளுகு என்று சற்று ஆழமாகப் பார்க்கலாமா?

<
அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த
சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்
எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை.
>

ஆமாம். உங்களைத்தான் குறிக்கிறது. நீங்கள் ஆதாரம் கேட்ட பின்பு நான்
தருகிறேன்
என்று சொன்ன பின்பு, இங்கு விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லையென்று
குறிப்பிட்ட
பின்பு உங்களிடம் பேசுவதில் பயன் இல்லையென்பதால் மட்டுமே நான் நண்பர்
நடராஜனுக்குப் பதில் அளித்தேன். இப்ப அதற்கு என்ன வந்தது? "இந்த இடத்தி
ல்" அதாவது காப்பிக் கிளப்பில் , விவாதத்தில் ஈடுபட விரும்பாதவரோடு
நாம்
ஏன் அநாவசியமாகப் பேசி அவர் கூற்றுப் படி ஒரு "வெட்டி விவாதத்தை"
உருவாக்குவானேன் என்ற அக்கறையில் நான் வேறு ஒருவருக்குப் பதில்
அளிப்பதோடு நி
றுத்திக் கொண்டேன், ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை
என்று
சொன்னவர், வெட்டி இடம் என்று சொன்னவர் நான் இன்னொருவருக்குச் சொன்ன
பதி
ல் குறித்துக் கவலை கொள்வானேன்? பக்கம் பக்கமாகப் பதில் அளிப்பானேன்?
இது
என்ன போலி நாடகம்? எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு குமட்டுகிறது,
எனக்குக்
குத்துகிறது, எனக்குக் குடைகிறது என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுத்தி
சுத்தி
வருவானேன்? இதுதான் அசட்டுத்தனம், சிறுபிள்ளைத் தனம். இதைத்தான் அருண்
வைத்தியநாதன் நன்றாக நையாண்டி செய்துள்ளார். இதை வேலையை நீங்கள்
இணையத்தில் உள்ள பல வலைப் பதிவுகளிலும், திண்ணையிலும் பல முறை செய்து
இன்று ஒரு கேலிப் பொருளாக நிற்கின்றீர்கள் என்பது கூட உணராமல் இருப்பது
பரி
தாபம்தான்.

நீங்கள் எதற்கும் வீடியோ ஆதாரம் கேட்கவில்லைதான், ஆனால் பாம்பு
உதாரணத்திற்கு
ஆதாரம் கேட்டதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது. ஈ வெ ரா அப்படிப்
பேசியிருக்கி
றார், நான் கேட்டிருக்கிறேன் என்று சொல்லியாயிற்று, அட நான் தான்
புளுகன், அபார
நினைவு சக்தியுள்ள டோண்டு ராகவன் அவர்களும் சொல்லியிருக்கிறார். ஊர்
முழுக்க
சவர் முழுக்க கருப்புப் பெயிண்டால் எழுதித் தள்ளியுள்ளார்கள், ஒரு தலவைன்
பேசாததை தொண்டர்கள் எழுதி விட முடியுமா? இது வரை அவர் அப்படிப் பேச
வி
ல்லையென்று தி க வும் இன்று வரை மறுக்கவில்லை. இதை விட மோசமாகப்
பேசியி
ருப்பதையெல்லாம் நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். நியாயமும்
படுத்துகிறீர்கள். ஆனால்
இதை மட்டும் பேச வில்லையென்று ஆதாரம் கேட்கிறீர். அதைத்தான் நான்
வீடியோ
ஆதாரம் என்று குறிப்பிட்டேன். இனியும் குறிப்பிடுவேன். ஈ வெ ரா அப்படிப்
பேசி
னார், கேட்டிருக்கிறோம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்டோர் சொல்லி வி
ட்டோம், அவர் அப்படிச் சொல்லவில்லையென்று அவரோ அவரது சீடர்களோ
இந்நாள்
வரை மறுக்கவில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் அப்படி அவர்
பேசியிருக்கமாட்டார்
என்று வக்காலத்து வாங்குவதைத்தான் நான் வீடியோ ஆதாரம் என்று
குறிப்பிட்டேன்.
இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் கொலை செய்வான், கற்பழிப்பான்,
கொள்ளையடிப்பான் ஆனால் கன்னம் மட்டும் வைத்துக் கொள்ளையடிக்க
மாட்டான் அப்படி செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பது போல்
இருக்கிறது. ஈ
வெ ரா ஒரு இனத்தின் மீது அளவுகடந்த துவேஷத்தையும் வெறுப்பையும்,
வன்முறையையும் கொட்டினார் என்கிறேன். அதை ஜீவா போன்றவர்களும்
கண்டித்திருக்கி
றார்கள் என்கிறேன். அதை நீங்களும் மறுக்கவில்லை அப்படிச் செய்வது
நியாயம்தான்
என்று வக்காலத்து வாங்கிறீர்கள். போய் தி க மடத்தில் போய்க் கேளுங்கள்
அவர்களே
மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர் செய்ததையும், சொன்னதையும் எல்லாம் விட்டு
வி
ட்டு, அவர் பேசிய ஒரே ஒரு வன்முறைப் பேச்சுக்கு மட்டும் ஆதாரம் கேட்கி
றீர்கள். அதைத்தான் நான் அவ்வாறு குத்தலாக வீடியோ ஆதாரம் கேட்பார்கள்
என்று கூறி
னேன்.

<
வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த
சான்றிதழாகவே பார்கிறேன்.
>

இதே வசனத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது வேறு
ஏதாவது
புது வசனங்கள் பயன் படுத்துங்கள். நான் சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு ஈ வெ
ராவை மதிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி¢.


<
அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,
கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை
நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்
சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது
குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து
வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்
இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்
பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.
அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது
ஒரு தகவல் மட்டுமே.
>

ஆம் நானும் கேட்டிருக்கிறேன். நன்றாகக் கேட்டிருக்கிறேன். நான் முதன் முதலில்
தீண்டாமை என்றால் என்பதை அறிந்ததே ஒரு செங்குந்த முதலியார் ஜாதி
நண்பன்
மூலமாகத்தான், ஒரு இக்கட்டான தருணத்தில் எங்கள் வீட்டில் கூடப் படித்த
மாணவர்களை தேர்வு சமயத்தில் தங்க அனுமதித்த பொழுது, அதில் ஒரு மாணவன்
தாழ்த்தப்பட்ட மாணவன் என்பதற்காக, அந்த முதலியார்ப் பையன் எங்கள் வீட்டில்
தங்க
மறுத்து, தெருவோரத்தில் அவன் தங்கியபொழுதுதான் தீண்டாமையின் முழு
வீச்சை
நான் அறிந்து கொண்டேன். வேலைக்குச் சென்ற பொழுது அந்த அரசு
அலுவலகத்தில்
இருந்த ஒவ்வொரு தூணும் ஜாதி பார்த்தது, தீண்டாமையை ஏதாவது ஒரு
விதத்தில் கைக்
கொண்டது. அங்கும் கேட்டிருக்கிறேன். ஆனால் இரண்டாயிரம் பேர் வேலை
பார்த்த அந்த இடத்தில் பிராமணர்கள் ஒரு பத்து பேர் கூட கிடையாது, நான்
பார்த்ததெல்லாம் பிற ஜாதியினரிடம்தான். என்னை ஜாதி வெறியன் என்று
சொல்வோருக்கு நான் யார், எனது குடும்பப் பாரம்பரியம் என்ன, ஜாதி
குறித்தான
எனது கொள்கைகள், நிலைப்பாடுகள், என்ன என்பதையெல்லாம் நான் இங்கு
யாருக்கும் தமுக்கடித்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைத் தெரி
ந்தவர்களுக்கும் என் மனசாட்சிக்கும் தெரியும். இன வெறியர்களின்
ரவுடித்தனங்களையும்,
வன்முறைகளையும் ஆதரிக்கும், நியாயப் படுத்தும் பிரகிருதிகளுக்கு நிச்சயமாக
நான் அறிவி
க்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலுக்கு நானும் அதே வசனத்தைத் திருப்பிக்
கூறுகி
றேன். நான் தேவரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாயக்கரீயத்தைக்
கண்டிருக்கிறேன்,
முதலியாரீயத்தைக் கண்டிருக்கிறேன், நாடாரீயத்தைக் கண்டிருக்கிறேன்,
பார்ப்பணீயத்தையும் கண்டிருக்கிறேன். அனைத்தையும் உணர்ந்து அதைத் தவி
ர்க்கவும் அது தவறு என்று சொல்லியே வளர்க்கப் பட்டிருக்கிறேன், இது போன்ற
சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்ற குடும்பத்தில்
இருந்து

வந்திருக்கிறேன். நான் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு எழுதுவதில்லை. நான்
வீட்டில் என்ன கடைப்பிடிக்கிறேனோ அதைத்தான் வெளியிலும் சொல்வேன்
செய்வேன்.
தீண்டாமை எதிர்க்கும் அதே தீவீரத்துடன் எதிர் தீண்டாமையும் எதிர்ப்பவன்.
ஒன்றைத்
தவறு என்று சொல்லும் வேளையில் அதற்குப் பழி தீர்ப்பதும் தவறு என்று
சொல்பவன்.
வேண்டுமானால் என்னைப் பற்றி முழுக்க அறிய வேண்டுமானால் தாராளமாக
என்னுடன் என் வீட்டிற்கு வந்து உறுதி செய்து கொள்ளலாம், அப்பொழுது தெரியும்
யார்
இன வெறியன் என்பது. ஆனால் வீட்டில் ஒரு வேஷமும் இணையத்தில் தன்னை
முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்ள ஒரு முகமூடியும் அணிந்து
கொண்டிருப்பவர்களுக்கு என்னை இன வெறியன் என்று சொல்ல எவ்வித அருகதையும்
கிடையாது. நான் இங்கு வெளிப்படையாகக் கூறியது போல் என்னை யார்
வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் இங்கு எனது நி
லையைக் கூறியது போல், தன் முகமூடியைக் கழட்டி விட்டு தான் யார்,
வீட்டில்
யார் , வெளியில் யார் என்பதை நீங்கள் வெளிக்காட்டத் தயாரா? நான்
யார், எங்கிருக்கி
றேன், என்ன செய்கிறேன், என் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் இங்கு
பலரும் அறிவார்கள். நான் அப்படிப் புளுகி விட்டு ஓடி விடுவதற்கு முகமூடி
அணிந்து
கொண்டு தேவைப்படால் கலைத்து விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் எழுதிக்
கொண்டிருக்கும் ஒரு கோழை அல்ல, ஒரு போலி அல்ல.


<
திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்
நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.
அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்
அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்
சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே
நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்
வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த
இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்
antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்
தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக
குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு
சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,
இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்
ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்
நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது
ஜுஜுபி.
>

வன்முறையில் ஜான் என்ன முழம் என்ன? குறைந்த வன்முறை அதிக வன்முறை
என்று அளக்க வன்முறை என்ன பனியன் சைசா? ஸ்மால், மீடியம் , லார்ஜ்
என்று அளக்க. வன்முறை எப்பொழுதுமே எக்ஸ்டிரா லார்ஜ்தான் (நன்றி அந்நியன்
சுஜாதா). எது மிகக் குறைந்த வன்முறை? ஏதோ ஒரு சினிமாவில் ஒருவன்
பெண்களைக் கொல்வதாக வரும் காட்சியினாலேயே அவனது ஆண் குறியை அறுக்க
வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விட்டவருக்கு, பிராமணப் பெண்களைத்
தேசி
ய மயமாக்க வேண்டும் என்று அறிவித்தது சாதாரணமான ஒரு விஷயமாகத்
தெரிகிறது.
குறைந்த பட்ச வன்முறையாகத் தெரிகிறது!! என்னே ஒரு இரட்டை வேடம்!
என்னே
ஒரு ஹிப்போகிரைசி!! என்னைப் பொருத்தவரையில் வன்முறையிலும்
தீவீரவாதத்திலும்,
ரவுடித்தனத்திலும் சின்ன சைஸ் பெரிய சைஸ் நடுவாந்திர சைஸ் என்பதெல்லாம்
கி

டையாது. வன்முறையை நியாயப் படுத்துபவன் எவ்வளவு பெரிய ஆளாக
இருந்தாலும்
சீர்த்திருத்தவாதியாக கருதப்பட்டாலும் கூட என்னைப் பொருத்தவரை இன
வெறியன்
தான். அதைப் போலவே அதை ஆதரிப்பவர்களும் கீழ்த்தரமான விலங்குகளே.
அந்தக்
கருத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. வன்முறையைக் கைக் கொண்டு
பலவீனமானவர்களை மட்டும் தாக்கித் தன் கொள்கையைப் பரப்புவதாகக் கூறுபவன்
நி
ச்சயம் சீர்திருத்தவாதியாக இருக்க முடியாது. ஒரு ரவுடியாகவோ,
பொறுக்கியாகவோதான்
இருக்க முடியும். ஆண் குறியை அறுக்க வேண்டாம் அதற்குக் காண்பித்த தார்மீகக்
கோபத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது "தேசியமயமாக்க வேண்டும்" என்று
எழுதிய இழிபி
றவிகளைத் திட்டியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அதைக் கண்டிக்கக் கூட
மனம்
வரவில்லையே? வக்கிரம் பிடித்த மனது அதற்கு வக்காலத்து அல்லவா
வாங்குகிறது?
இவருக்கு இதெல்லாம் ஒரு ஜூஜூபியாகத் தெரிகிறது. வன்முறையில் சிறிது
பெரிதெல்லாம்
கிடையாது, அது மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், இனத்தின் பெயரால்
செய்யப்பட்டாலும், ஜாதியின் பெயரால் செய்யப்பட்டாலும், ஏன்...
சீர்திருத்தம் என்ற
பெயரால் செய்யப் பட்டாலும் அது வெறித்தனம்தான், அதற்கு வக்காலத்து

வாங்குபவர்களும் இன வெறியர்கள்தான். நானும் கூட பார்ப்பனீயம்,
வன்னியரீயம்,
தேவரீயம் எல்லாவற்றையும் கடுமையாக நிராகரிக்கிறேன் ஆனால் அதற்கு நான்
கைக்கொள்ளும் வழி வன்முறை அல்ல. அதையும் ஒரு பலகீனமான சாராரிடம்
மட்டும்
காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். எத்துனை முறை ஈ வெர்
ராவும் அவர்தம் சீடர்களும் ஒரு தேவர்கள் தீண்டாமைக் கொடுமை புரியும்
இடங்களுக்கோ, வன்னியர்கள் இரட்டைத் தம்ளர் கைக்கொள்ளும் இடங்களுக்கோ,
நாயக்கர்கள் உயிரோடு கொளுத்திய இடங்களுக்கோச் சென்று தன் ஜாதிய
எதிர்ப்பைக்
காட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? எத்துனை இடங்களில் இரட்டைத்
தம்ளர்
வைத்திருக்கும் கடைகளைக் கொளுத்தியிருக்கிறார்கள் என்று கணக்குச் சொல்ல
முடியுமா? எத்துனை தேவர்களின் மீசையை அறுத்திருக்கிறார் என்ற புள்ளி
விவரம் அளி
க்க முடியுமா? என்றைக்காவது தீண்டாமை புரியும் தேவரையும் தேளையும் பார்த்து
வி
ட்டால் தேளை விட்டு விட்டு தேவரை அடி என்று சுவர்களில் எழுதியிருக்கி
றார்களா? அப்புறம் என்னையா பார்ப்பணீயம், பித்தளை பேரிச்சம்பளம்
எல்லாம்?
யாரை ஏமாற்ற?


<
நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்
அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்
படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்
சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,
விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)
>


உங்கள் கோரிக்கையைத்தான் நிச்சயம் நிறைவேற்றுகிறேன் என்று
சொல்லியுள்ளேனே.
ஈ வெ ரா பேசியது எழுதியது செய்தது எல்லாம் ஒன்று கூட மறைக்காமல்
உண்மையாக, பொய்க் கலப்பின்றி ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று மனசாட்சி
என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுக் கூற முடிய்மா? ஈ வெ ராவின் வைக்கம்
போராட்டம் முதல் செருப்பால் அடித்த போராட்டம் வரை உண்மைகள் மறைக்கப்
பட்டுள்ளன, திரிக்கப் பட்டுள்ளன. உங்களைப் போன்ற இனவெறியர்களின்
அடியாட்கள்
வேண்டுமானால் அந்த ஆவணங்களை நம்பிக் கொள்ளலாம். அதே
ஆவணங்களே அவர் இரு இனவெறியர் என்பதை மறுக்கவில்லை என்பதுதான்
உண்மை. ஈ வெ ரா அப்படி ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் செருப்பால்
அடித்த
புகைப் படங்களை வெளியிட்ட துக்ளக் ஏன் அடித்து நொறுக்கப் பட்டது? படங்களை
நீக்கி விட்டு வெளியிட உத்தரவிடப்பட்டது? அதை ஈ வெ ரா செய்தால்
என்ன அவருடைய எடுபிடிகள் , ரவுடிக் கும்பல்கள், போலீஸின் துணையுடன்,
அரசி
ன் அராஜகத்தின் துணை கொண்டு செய்தால் என்ன? மறைப்பு மறைப்புதானே?
திரிப்பு தி
ரிப்புத்தானே?


<
திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட
வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்
இருக்க வாய்பில்லை.
>

முதலில் ஆதாரம் கேட்க வேண்டியது. திகதி போட்டு இங்கே சொன்னார் என்று
சொன்னால் அதைப் பொய் என்று கூசாமல் கூற வேண்டியது. இதுதான் இவரது தர்க்க
நேர்மை. ஐயா நான் இந்த பத்திரிகையில் இந்த தினத்தில் இப்படி
எழுதியிருக்கிறார் என்று
ஒரு ஆதாரத்தை வைக்கிறேன். அதை பொய் என்று சொன்னால் அதை நிரூபிக்க
வேண்டும், இல்லை மன்னிப்புக் கேட்க வேண்டும். அசோகமித்திரன் விஷயத்தில்
மட்டும் அசோகமித்திரன் சொன்னதாகக் கூறப்பட்டவற்றை அப்படியே நம்பிக்
கொண்டு அப்படி அவர் சொல்லவில்லையென்று சொன்னால் அதை அவர்தான்
நிரூபிக்க
வேண்டும் என்று சொன்ன அதே நியாயவான்கள், இப்பொழுது ஆதாரம் கொடுத்தால்
கூட பொய் என்று கூசாமல் கூறுகிறார்கள். உண்மையாய் இருக்க வாய்ப்பி
ல்லையாம், அப்படியென்றால் அதை நிரூபிக்க வேண்டியதுதானே? நான் என்ன
உங்களைப் போல் முகமூடிப் போட்டுக் கொண்டு என் அடையாளங்களை மறைத்துக்
கொண்டா எழுதுகிறேன் இல்லையே!! குறைந்த பட்ச நேர்மை இருக்குமானால் நான்
இங்கிட்டதை பொய் என்று நிரூபியுங்கள் இல்லையேல் இனிமேல் இது
போன்ற அபாண்ட குற்றசாட்டுக்களை இனிமேல் கூறமாட்டேன் என்று சொல்லி
பகிரங்க
மன்னிப்புக் கேளுங்கள். செய்வீர்களா?


<
பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.
29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன
பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது
கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.
திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்
இதற்கு ஆதாரம் உள்ளது.
>

முழுப் பத்தியையும் கொடுக்க வேண்டிய தருணத்தில்தான் கொடுக்க முடியும்.
எங்களுக்கு
இது முழு நேர வேலையில்லை. அல்லது இதையே முழு நேர வேலையாகச்
செய்யும் அளவிற்கு நான் எந்தப் உயர்நிலை ஆராய்ச்சிநிலையங்களிலோ,
பல்கலைக்
கழகங்களிலோ ஆராய்ச்சியாளானாகவும் இல்லை. நான் ஏற்கனவே கூறியது
போல
கூடிய விரைவில் அவசியம் என்னிடம் இருக்கும் எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து
கொள்ளத்தான் போகிறேன். ஈ வெ ரா முன்னுக்குப் பின் முரணாகத்தான்
எதையுமே
பேசுவார் செய்வார் , அவர் ஒரு மிகப் பெரிய முரண்பாட்டாளர் என்பதுதான்
உலகமே அறியுமே. அவர் அப்படிச் சென்னாராம் அதை ராஜன் குறை
எழுதியுள்ளாராம்
ஆகவே அவர் ஒரு இன வெறியர் இல்லையென்று நான் ஏற்றுக் கொள்ள
வேண்டுமாம். அதை அந்த ராஜன் குறை கூட முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பாரா
என்பதே சந்தேகம்.

<
"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை
போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி
சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்
இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம்.
>

எனக்குச் சந்தேகத்தின் பலனை அளிப்பதற்கு நன்றி. தாராளமாக சரி செய்து
பார்த்துக்
கொள்ளலாம், உரசி உண்மையா இல்லையா என்று பரிசோதித்துக் கொள்ளலாம்,
யாரும் யாரையும் தடுக்கவில்லை. எனக்குப் படிக்கக் கிடைத்ததை அளித்துள்ளேன்.
தவறு என்றால் தாராளமாக நிரூபித்துக் கொள்ளலாம்.

<
கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,
காந்தியார், நேரு படங்களைக்
கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி
டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,
கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற
வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்
மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க
வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்
கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது
திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்
மேற்கோள் காட்டட்டும்.
>


நிச்சயம் நான் ஆதாரத்தைக் கொடுக்கிறேன், முழுப்பக்கத்துடன். அப்படி அவர்
சொன்னார் என்று நிரூபிக்கப் பட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு
இன வெறியர்

என்பதை ஒத்துக் கொள்ளப் போகிறீர்களா என்ன? அதற்கான அடிப்படை நேர்மை

இருக்கிறதா? அதையும் நியாயப் படுத்தவும் வக்காலத்து வாங்கவும்தானே
போகிறீர்கள்.
யார் சொல்லுவது புளுகு யார் புளுகன் யார் யோக்கியன் என்பதையெல்லாம் நான்
இங்கே மேலும் ஆதரங்களை இட்ட பின்பு பேசிக் கொள்ளலாம். இணையத்தில் ஒரு
பதி
லை போடுவதும் பின்னர் அதை அழித்து விட்டு மறைக்கப் பார்க்க முயலும் அண்டப்
புளுகன் யார் என்பதை பி கே எஸ் , டோண்டு போன்றவர்களிடம் கேட்டால்
தாராளமாகச் சொல்லுவார்கள்.

<
பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்
'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி
மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க
முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்
கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார்.
>

முதலில் அவர் சொல்லியிருக்கவே மாட்டார் என்று சொல்ல வேண்டியது. அப்புறம்
ஒரு
தருணத்தில் சொல்லியிருக்கலாம் என்று எழுத வேண்டியது. முரண்பாட்டில் நீங்கள்
குருவை மிஞ்சிய சிஷ்யன்தான். முதலில் திருமலை சொல்லுவது புளுகு என்று
சொல்ல
வேண்டியது. அடுத்த வரியிலேயே அப்படி சொல்லியிருந்தாலும் அதுவும்
நியாய்ம்தான்
என்று வக்காலத்து வாங்க வேண்டியது. நான் சொல்லுவது புளுகு என்று உறுதியாகச்
சொல்ல முடியுமானால் அப்புறம் ஏன் சப்பைக் கட்டு? சரி அப்படியே ராஜாஜி
ஒரு சட்டம்
கொண்டு வந்திருந்தால் அரசாங்கத்தை அல்லவா எதிர்க்க வேண்டும். அப்பாவி
பிராமண
மக்கள் என்ன பாவம் செய்தனர். அவர்களையேன் அடித்தார்கள்? ராமர்,
பிள்ளையார் சி
லைகளைச் செருப்பால் அடித்த மாவீரர் அதைப் பற்றிய படங்கள் வெளிவருவதை
மட்டும்
ஏன் தடுத்தாராம்? உத்தம புத்திரனாக இருந்தால் தான் என்ன செய்தேன் என்பதை
தயங்காமல் ஊருக்குக் காட்டுவதுதானே? ஏன் துக்ளக்கைப் பறிமுதல் செயதார்கள்,
போலீசார் மூலமும் ரவுடிக்கள் மூலமும் அந்த இதழ் வெளிவருவதைத்
தடுத்தார்கள். அந்தப் படங்கள் எல்லாம் நீக்கப் பட்டு, வெற்றிடங்களாகத்தானே
அந்த
துக்ளக் வெளிவந்தது? இதுதான் இவர் நடத்திய போராட்டங்களின் லட்சணம்.
ரவுடித்தனமும் அராஜகங்களும்தான் இவர் நடத்திய போராட்டங்கள் என்பதற்கு
இருட்டடிக்கப் பட்ட அந்தத் துக்ளக் இதழே சாட்சி. அட நான் தான் புளுகன்,
பொய்யன். உங்கள் நண்பர் கனடா வெங்கட்டிடம் சென்று கேட்க
வேண்டியதுதானே? அவர் உறவினரை அல்லது பக்கத்து வீட்டுக் காரரை எப்படிக்
கொன்றார்கள் என்று? எந்தச் சூழலில் சொன்னால் என்ன வன்முறைப் பேச்சு, இன
அழி
ப்புப் பேச்சு இல்லையென்று ஆகி விடுமா? இந்தப் பேச்சு ஒன்றே போதுமே ஒரு
கடைந்தெடுத்த இன வெறியன் என்பதை நிரூபிக்க.

<
(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,
அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக
பார்கிறேன்.)
>

உங்களைப் போன்ற வெறுப்பையை மூச்சாக விடுபவர்களுக்கு வேண்டுமானால் அது
வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். சம்பந்தமேயில்லாமல் பாதிக்கப் படும்
அப்பாவி
களுக்கு அது ஒரு இனவெறியாகத்தான் கண்ணுக்குத் தெரியும்.

<
'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்
அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த
பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்
இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்
ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே
தெரியும்.
>

உங்கள் முகமூடியைக் கழட்டி வைத்த்து விட்டு வந்தால். நான் யார், யார் இன
வெறி
யன் என்பதை நேரில் வந்து தாராளமாகப் பார்த்துக் கொள்ளலாம். முகமூடி
மாட்டிக்
கொண்டு என்னை இன வெறியன் என்று சொல்லுவதற்கும் ஜாதி வெறியன் என்று
சொல்லுவதற்கும் உங்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. உங்களைப் பற்றியும்
பலரும் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை நான் பி
ராமணத்துவத்தை எந்த விதத்திலும் கடைப்பிடிக்காதவன் என்று நிரூபிக்க
வேண்டியதுதானே? இணையத்தில் முகமூடி போட்டுக் கொண்டு பெரிய
சீர்திருத்தவாதி
மாதிரி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அல்லவா? நான்
இப்படித்தான் வாழ்கிறேன் யார் வேண்டுமானாலும் வந்து என்னைப் பற்றி அறிந்து
கொள்ளுங்கள் என்று மறைக்காமல் கூறுகிறேன். அப்படி உங்களால் கூற முடியுமா?
உங்களை இனங்காட்ட முடியுமா? உங்களி குரோத எழுத்துக்களுக்கு உள்நோக்கம்
எதுவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறும் துணிவு உண்டா?

எத்துனை முறை நீங்கள் தமிழை முன்வைத்த பாசிசத்தையும், இந்து மதம் அல்லாத
பிற
மதங்கள் முன்வைக்கும் தீவீரவாதத்தையும், கம்ன்யூஸ்டிகள் நடத்திய
படுகொலைகளையும்
கண்டித்திருக்கிறீர்கள் என்று கூறினால் நான் படித்துச் ஜென்ம சாபல்யம் அடைந்து
கொள்வேன். பிராமண வசவுகளில் நூறில் ஒரு பகுதியாவது அத்தகைய
கண்டனங்கள்
இருந்திருக்குமா? சினிமாவைப் பற்றி எழுதியதில் பத்தில் ஒரு பங்காவது
உலகளாவிய மதப்
பயங்கரவாதத்தைக் கண்டித்திருபீர்களா? எத்துனை முறை தமிழை முன்வைத்த
பாசி
சத்தைக் கண்டித்துக் கட்டுரை எழுதியுள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? எத்துனை
முறை விடுதலை என்ற பெயரில் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகளைக்
கண்டித்தி
ருக்கிறீர்கள் என்று புள்ளி விபரம் கொடுக்க முடியுமா? இந்துத்துவ எதிர்ப்பைத்
தவிர பிற
மதம் சார்ந்த தீவீரவாதங்களைக் கடுமையாகக் கண்டித்து (ஆ கு அறுப்பு
ஸ்டைலில்)
என்றைக்காவது ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியது உண்டா? எழுதத் துணிவுதான்
உண்டா?

<
ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட
சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்
காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்
பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்
எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு
ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!
>

ஆக உங்களுக்குத் தேவையென்றால் ஜீவாவின் வார்த்தை வேதமாகத் தெரியும்.
யார்
மேற்கோள் காட்டினால் என்ன? ஜீவாவின் பேச்சில் சத்தியம், நியாயம்
இருக்கிறதா
இல்லைய என்பதுதான் இங்கே கேள்வி. அதை விடுத்து விட்டு வழக்கம் போல
திசைதி
ருப்பும் வேலைகளை வேறு ஆட்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். ஜீவா ஈ வெ
ராவி
ன் அரசியலை ஒரு இனவெறி அரசியலாக்த்தான் பார்க்கிறார். க்டுமையாகக்
கண்டிக்கி
றார். அதில் உண்மை உள்ளது. தாராளமாக ஜீவா ஜாதி குறித்துச் சொன்னதை
போட்டுக் கொள்ளுங்களேன்! நான் என்ன மறுக்கவா போகிறேன்? அதை ஏற்கும்
நான்
இதையும் ஏற்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் ஜீவா பேசியதில் இருக்கும்
சத்தியம்
உறுத்துகிறது. எட்டிக்காயாகக் கசக்கிறது. நான் ஜீவாவின் ஜாதி குறித்த
பார்வைகளை
ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் ஜீவா ஈ வெ ராக் கூட்டத்தை இனவெறிக்
கும்பல்
என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என்னைப் பற்றிய ஒரு சில சொந்தத்
தகவல்களை பொதுவில் அளிப்பது முறையாக இருக்காது என்பதனால் நான்
வளர்ந்த வி
தத்தை, எனது சூழலை நான் இங்கு குறிப்பிடாமல் விடுகிறேன்.

<
இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்
மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்
என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.
(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு
இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்
ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்
இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ
ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.
http://rozavasanth.blogspot.com/
>

இது போலக் குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பீர்களா?
இது
போன்று யாராவது பேசினால் சும்மா 'ரோசா மாதிரி உளறாதே" என்று
இணையத்தில்
உங்களது வழக்கம் ஒரு சொலவாடையாகவே மாறிப் போய் விட்டது. ஏன் இந்த
பம்மாத்தெல்லாம். கொஞ்சம் முதிர்ச்சி அடையப் பாருங்கள். பதில்
உடனடியாகப் போடவி
ல்லையென்றாலோ, பதிலே போடவில்லையென்றாலோ, பயந்து ஓடி விட்டார்
என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இங்கு யாரும் எழுதப் போவதி
ல்லை. அப்படியெல்லாம் எழுதுவது உங்களது பிறப்புரிமை மட்டுமே. உங்கள்
ஏகபோக உரிமையைப் பாதியதைக் கொண்டாடும் எண்ணம் இங்கு யாருக்கும் கி
டையாது. விரும்பினால் எழுதலாம், விரும்பாவிட்டாலோ,
நேரமில்லாவிட்டாலோ
எழுதாமலும் இருக்கலாம், இங்கு நீங்கள் என்னதான் எழுதினாலும் நீங்கள் எழுத
எழுத
என் கருத்துக்கள் உறுதிப் படவே செய்யும். சும்மா அடித்து விட்டு ஒளிந்து
கொள்வேன்
என்று கூறுகிறீர்கள். அதை புத்திசாலித்தனம் என்றும் பெருமையாகப் பீற்றிக்
கொள்கி
றீர்கள். எது அசட்டுத்தனம் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

உங்களுக்கு வேலைப் பளு இருப்பின் தாராளமாக அதை முதலில் பாருங்கள். ஈ வெ
ராவும், அசோகமித்திரனும் வந்து நமக்குச் சம்பளம் தரப்போவதில்லை.
குழந்தைகளுடன்
நேரம் செலவழிப்பது அதை விட முக்கியம். அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய
பின் இங்கு
கடைசியாக வந்தால் போதும். அப்படி வரும் பொழுது இது குமட்டுகிற இடம்,
இங்குள்ளவர்களுக்குத் தகுதி யில்லை தராதரம் இல்லை என்றெல்லாம் கூறாமல்
பதில் அளி
க்க விரும்பினால் மட்டுமே தாராளமாகக் கலந்து கொள்ளலாம். விருப்பமி
ல்லையென்றாலும் குறையொன்றுமில்லை. உங்கள் தேர்வு.


இதற்கு என்னப் பதில் வரப்போகிறது என்பதை என்னால் இப்பொழுதே சொல்ல
முடியும், இருந்தாலும் அந்த நகைச்சுவையை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்று
நான் சொல்லாமல் விடுகிறேன். உங்களிடம் நேர்மையில்லை, நீங்கள் அசடு,
அம்பி,
உங்களுடன் எல்லாம் விவாதிக்கும் தகுதி கிடையாது, இனிமேல் எழுத
மாட்டேன், மூஞ்சி
லேயே முழிக்க மாட்டேன், வேலை நெருக்கடி, ஒண்ணுக்குப் போகிறேன், ஊருக்குப்
போகிறேன், குமட்டுகிறது, நாறுகிறது, நீங்கள் திட்டுவதால் எனக்குப்
பெருமை
என்றெல்லாம் பம்மாத்துப் பண்ண ஜல்லியடிக்கவெல்லாம் எனக்குத் தெரியாததால்,
நான்
நிச்சயம் ஆதாரங்களுடன் ஒரு சில மாதங்களில் இங்கு மீண்டும் எழுதுவேன்
என்பதை
மட்டும் கூறிக் கொண்டு இந்த இழையில் இருந்து இப்பொழுது விடை பெற்றுக்
கொள்கி
றேன். பதில் ஏதும் வருமாயின் அதற்குப் பதில் சொல்லவும் நிச்சயம் வருவேன்.

******************************************************************************

அதற்கு முன்பு நான் எழுதியது கீழே.

திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்.

அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த
சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்
எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை. மாறாக நடராஜன் சொன்ன
பல விஷயங்கள் உண்மையாய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவே
சொல்லியிருக்கிறேன். அவர் என்னை கேட்டதால் அது குறித்து நான்
அறிந்தவற்றை சொல்லியிருக்கிறேன். மேலும் 'ஈவேரா
இனவாதியா(வெறியறா?)' என்ற விவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக
அவரை 'இனவெறியன்' என்ற வார்த்தையால் திருமலை போன்றவர்கள்
வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த
சான்றிதழாகவே பார்கிறேன். அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,
கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை
நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்
சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது
குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து
வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்
இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்
பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.
அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது
ஒரு தகவல் மட்டுமே.

திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்
நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.
அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்
அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்
சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே
நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்
வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த
இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்
antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்
தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக
குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு
சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,
இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்
ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்
நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது
ஜுஜுபி.

நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்
அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்
படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்
சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,
விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)

திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட
வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்
இருக்க வாய்பில்லை. பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.
29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன
பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது
கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.
திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்
இதற்கு ஆதாரம் உள்ளது.

"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை
போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி
சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்
இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம். "பாப்பானை ஒழிக்க கடவுளை
ஒழிக்க வேண்டும்" என்பதாக பெரியார் சொல்லியிருக்க கூடும்,
சொல்லியிருக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு பார்பனிய எதிர்பின்
மீது கட்டப்பட்டதே ஒழிய கடுவுள் மறுப்பிற்காக பார்பனிய எதிர்ப்பை அவர்
கைகொள்ளவில்லை. அதனால் இந்த வகையில்தான் அவர் சொல்லியிருக்க
வேண்டும். மேலும் '9/10/58'இல் மட்டுமில்லாமல் பலமுறை 'பாப்பான் ஒழிய
வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். அதை பாப்பானை அடித்து ஒழிக்க
வேண்டும் என்பதாக திருமலை கொள்ள முடியும். ஆனால் பெரியார் 'சூத்திரன்
ஒழிய வேண்டும்' இன்னும் 'பறையன் ஒழியவேண்டும்' என்று கூட
சொல்லியிருக்கிறார். 'பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம்
ஒழியாது' என்றும் சொல்லியிருக்கிறார். 'பாப்பான் ஒழியாமல் சூத்திரன்
ஒழிக்க முடியாது' என்றும் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,
காந்தியார், நேரு படங்களைக்
கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி
டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,
கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற
வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்

மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க
வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்
கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது
திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்
மேற்கோள் காட்டட்டும்.

பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்
'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி
மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க
முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்
கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். பெரியாரின்
இறப்புக்கு பிந்தய திக போல் அல்லாமல், அவர் காலத்தில் அவருக்கு பரவலான
வெகுஜன ஆதரவும் உண்டு. ராஜாஜி ஆட்சி காலத்தைவிட 70இல் திமுக
அலையும், பெரியாருக்கான ஆள்பலம் மட்டுமின்றி, அரசும் அவர் பக்கம்
இருந்தது. எத்தகைய வன்முறையிலும் அவரால் இரங்கியிருக்க முடியும். மாறாக
அவரால் கடைசியாய் களத்தில் புகுந்த 'கருவறை நுழைவு' போராட்டத்தில் கூட
வெற்றி பெறமுடியவில்லை. பரிதாபமாக அவர் அதில் தோல்வி கண்டதுடன்,
இன்றுவரை கூட திகவால் அதில் ஒரு அடிகூட நகர முடியவில்லை. பெரியார்
கருவறையில் நுழையப் போவதாய் அறிவித்து, கருணாநிதி அதன் விளைவையும்
தன் ஆட்சியையும் குறித்து பயந்து, அவரே சட்டம் கொண்டுவந்து, பெரியாரும்
அதை ஏற்று(இதுதான் அவர் காட்டிய வன்முறை) பின்னர் சுப்ரீம் கோர்ட்
கருணாநிதி கொண்டுவந்த அனைவரும் அர்சகராகும் சட்டத்தை ஒன்றும்
இல்லாமலாக்கியது. எல்லாம் சாதகமாய் பெரும் பலத்துடன் இருந்த காலத்தில்
அவர் செய்த ஒரே விஷயம் ஒரு எதிர்வினையாய்(மேல்விபரத்திற்கு என்னை
அணுகலாம்) ஒரு குறியீடாய் ராமர் படத்தை செருப்பால் அடித்தது மட்டுமே!
(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,
அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக
பார்கிறேன்.)

'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்
அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த
பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்
இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்
ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே
தெரியும்.

ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட
சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்
காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்
பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்
எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு
ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!

இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்
மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்
என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.
(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு
இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்
ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்
இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ
ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.
http://rozavasanth.blogspot.com/

ரோஸாவசந்த்.

Site Meter