கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Tuesday, September 19, 2006

என் பின்னூட்டம்.

ரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும் ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.



என் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட, நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே.



மேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே.



ரவி சீனிவாஸு,

என்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா? உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா? இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா? வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன்.

5 Comments:

Blogger லக்கிலுக் said...

யப்பா... என்னாமா பொளந்து வூடு கட்டுறீங்க.... :-)

12:32 AM  
Blogger ROSAVASANTH said...

லக்கி, பின்னூட்டத்திற்கு நன்றி.

ரவி அளித்த சுட்டிகளில் ப்ரேம் அளித்திருந்த சுருக்கமான பதில் மிக மிக முக்கியமானது. ப்ரேமும் ரமேஷும் தங்களை பெரியாரிஸ்ட் என்று சொல்லிகொள்வதில்லை; தங்கள் எழுத்துக்களில் பெரியாரை மேற்கோள் காட்டுவதும் இல்லை; அம்பேத்கார் கருத்தியல் மற்றும் பௌத்தத்தின் அடிப்படையிலேயே இயங்கி வரும் அவர்கள், பெரியார் மற்றி மிகுந்த சமனுடன் சொல்லியிருக்கும் கருத்து மிக முக்கியமானது. பெரியாரை தங்கள் ஆதர்சமாக கொள்ளாதவர்கள், தமிழ் சூழல் பெரியாரை புறக்கணிக்கும் அளவிற்கு எந்த பரிமாணத்தையும் அடையவில்லை என்பதை முன்வைத்து பேசியிருக்கிறார்கள். அதை பார்த்து சிரிக்க வேண்டும் என்று சொல்லும் அற்பத்தனத்தை கண்டே, பின்னூட்டம், எழுதும் உந்துதலை அடக்கவியலாமல் நான் எழுதினேன்.

12:41 AM  
Blogger இளவெண்ணிலா said...

பெரியார் குறித்த ப்ரேம்-ரமேஷ் பார்வை மிக அருமை.....அதைப் படித்தால் ரவி சீனிவாசுக்கு சிரிப்பு வருகிறதாம்..எனக்கு கூடதான் இவர் எழுதுவதைப் படித்தால் உடலின் ஒன்பது ஓட்டை வழியாகவும் சிரிப்பு வருகிறது...."நீங்க யாருக்குண்ணே எழுதுறீங்க?ன்னு கேட்டு பின்னூட்டம் ஒன்னு விட்டேன்..ஆனால் வரவில்லை..:)

1:13 AM  
Blogger ROSAVASANTH said...

லக்கிலுக்கின் பதிவில் அளித்த பின்னூட்டம்.

http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_18.html

முதலில் ப்ரஸன்னா எழுதியது,

Prasanna said...
Hi Luckylook

Sorry for typing in English

For judging the role of controversial personalities like Savarkar,greater degree of maturity in understanding historial events and contexts is required.The analysis should be based on dispassionate study of history not done through the prism of one's own ideological predilections and biases.I am afraid you have done that

Savarkar was a complex personality His life and thoughts cannot be explained within the framework of Hindutva politics

He was atheist,never spoke about Hinduism as a religious construct,supported cow slaughter,fiercely advocated for abolition of casteism.He vigorously opposed meaningless rituals of Brahmanicial Hinduism

He definitely had the potential to emerge as one of the towering personality in the freedom struggle but the tame apology letter he wrote to Britishers is a definite black spot .This indisputable fact cannot be erased by modern day Hindutva historians

Having said that ,communist who had too openly sided with Britishers during quit India movement

Gandhi too has actively collabarated with British before calling for total freedom

So all strands of ideology,whether its left,right or gandhian worked in tandem with Britishers

My only appeal to you is that when you are anlysing historical personalities ,do a fair assesment.

History ,especially in the hands of inspired ideologues, becomes poisionous propaganda.This has been India's problem - history being written to suit ideological prejudices .

எனது பதில்,

Hi, Prasanna, I agree partially with you except you didn't seem to understand that the ' good qualities' of Savarkar, makes him more dangerous than other conservative hintutvas. Savarkar is definitely a modernist, who is against causte. But his is definitley a hindutva idealogy. He wanted to use hindutva for making India a வல்லரசு. அது மற்ற பழமைவாத இந்துத்வாக்களை விட அவரை இன்னும் ஆபத்தானவராக்குகிறது. விரும்பினால் மேலே பேசலாம். (பாதி தமிழ், பாதி ஆங்கிற்கு மன்னிக்கவும்.)

1:21 AM  
Blogger ROSAVASANTH said...

புலிப்பாண்டி, பின்னூட்டத்திற்கு நன்றி.

12:46 AM  

Post a Comment

<< Home

Site Meter