கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Sunday, August 20, 2006

கேவலங்களிலும் கேவலம் - 2.

சென்ற பதிவில் நான் கண்டித்திருந்த பின்னூட்டத்தை தான் இடவில்லை என்ற தகவலை விடாது கருப்பு அளித்திருந்தார். இப்போது அவருடைய பின்னூட்டத்தை பார்த்த பிறகே அந்த மட்டமான பின்னூட்டம் அவருடையது அல்ல, போலியானது என்று அறிகிறேன். அவரும் அதை இதற்கு முன்பு மறுத்ததாக எனக்கு தெரியவில்லை. இந்த தவறுக்கு நான் மட்டும் முழு பொறுப்பு இல்லையெனினும், தவறாக எடுத்துக் கொண்டு கண்டித்ததற்கு என் மன்னிப்புக்களை தெரிவித்து, அது தொடர்பான என் கண்டனத்தை திரும்ப பெற்று கொள்கிறேன். மற்றபடி அவரை பற்றி சொன்ன கருத்து எதிலும் மாற்றமில்லை. என் கருத்துக்களை அவர் மீண்டும் நிருபித்ததற்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

சில பார்பன புழுக்களும், அனானி மல புழுக்களும் சொல்வதையே இவரும் சொல்லியிருப்பதன் மூலம், இவர் அவர்களில் இருந்து அடிப்படைகளில் எந்த விதத்திலும் வேறு படவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார். என்னை விடவா பார்ப்னர்களையும், பார்பனியத்தையும் அவர் அதிகம் எதிர்கிறார் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். நிச்சயமாக இல்லை! நான் பார்பனியத்தை எதிர்ப்பது என்பது பிரபஞ்சம் தழுவிய மனித விடுதலை சார்ந்தது. அது எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. அவரது 'எதிர்ப்பும்', வெறுப்பும், ஏற்கனவே சொன்னது போல, ஒரு பாப்பானாக தான்பிறக்காத தாழ்மை உணர்வால், கோபத்தால், ஆதங்கத்தால் உண்டானது. அது பார்பனியத்துடன் எளிதில் சமரசம் செய்து கொள்ளக் கூடியது. பார்பனியத்திலிருந்து அடிப்படையில் வேறுபடாதது. அதை எனக்கு அளித்த பதிலிலேயே அவர் நிருபித்துள்ளார்.

திருமலை ராயர் காப்பி க்ளப்பில் என்னை ஏதோ ஓட ஓட விரட்டியதாக இவருக்கு நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்ததாம். திருமலை போன்ற பச்சையான பார்பன வெறியர்களை, விடாது கறுப்பு போன்ற பார்பனராய் பிறக்காமல், அவ்வாறு பிறக்காத ஒரே காரணத்தால் மட்டும் பார்பனர்களை திட்டும் பிறவிகள், சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஆதரவுக்கு சேர்த்துகொளவ்தும், ஆதாரமாக காட்டுவதிலும் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை; இயல்பானதுதான்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமலை என்னை ஓட விரட்டும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. இணையத்தில் இப்போது அனானி மலப்புழுக்களும் (அது திருமலைதானா என்று எனக்கு சரியாய் தெரியாது), கடந்த பின்னூட்டத்தில் கருப்புவும் செய்தது போல, என் ஜட்டிக்குள் ஒரு மடலில் திருமலை கை விட்டுருந்தார். இப்போது கருப்பு எழுதியது போலவே ஒரு மிரட்ட்ல் என்று நினைத்து அவ்வாறு செய்திருந்தார். அதற்கு தெளிவான ஒரு பதிலை நான், சற்று காலம் தாழ்த்தி எழுதியிருந்தேன். நான் அறிந்து கடைசி வரை திருமலை அதற்கு பதில் தரவில்லை. ஆகையால் ஓடியது திருமலையேஅன்றி நான் இல்லை. திருமலைக்கு எழுதிய கடைசி பதிலை முடிந்தால் அடுத்த பதிவில் தருகிறேன்.

இப்போதைக்கு இந்த பதில் போதும் என்று தோன்றுகிறது. மற்ற பதிவுகளையும், அவர் என்னை முன்வைத்து எழுதிய பதிவையும் இன்னும் படிக்கவில்லை. தேவையிருந்தால் பிறகு.

2 Comments:

Blogger Unknown said...

எனக்கு உங்களின் இருவரின் இது தொடர்பான பதிவுகளையும் படித்தால் தோன்றுவது இதுதான்
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் " :(

8:29 AM  
Blogger ரவி said...

Vidunga Boss !!!

9:53 AM  

Post a Comment

<< Home

Site Meter