கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, October 27, 2010

நோய் காமெடியன்கள்.

என்னாதான் உள்ளடக்கச் சரக்கே இல்லாவிட்டாலும், என் பதிவிற்கு பதிலாக இரண்டு பதிவு போட்டதற்கு, நாம் ஒரு குட்டிபதிவாவது பதில் போடாவேண்டாமா? மற்றபடி ஏதாவாது திடுக்கிடும் ஆதாரங்கள் (அப்படி எதுவும் யதார்த்தத்தில் இல்லாத காரணத்தால் பொய்கள்) வந்தால் ஒழிய இனி இதை நான் எதிர்கொண்டு எழுத மாட்டேன்.

நாம் இயல்பான சிந்தனை என்று நினைப்பதற்கு நேரெதிர் விநோதமாக, எப்படி வேறு சிலர் அதே இயல்பாக யோசிக்க கூடும் என்று சும்மா சம்பந்தமில்லாமல் யோசித்த போது தோன்றியதை நேற்று பின்னூட்டமாக எழுதியிருந்தேன். சுரேஷ் கண்ணனை நான் முதலில் திட்டவில்லை. அவர்தான் மோசமாக திட்டினார். நான் பதிலுக்கு நிதானம் காத்து அவர் என்னை பற்றி சொன்னதற்கு விளக்கத்துடன் எழுதுமாறு கேட்டேன். அவர் நேர்மையான பதிலை நிச்சயம் தரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு என் காட்டமான பதிலை எழுதினேன். மிக தெளிவாக நான் சீண்டியதாக, அவரை திட்டியதாக, பொது சந்திப்பில் அவரிடம் அநாகரிகாமாக நடந்ததாக சொல்லியதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மறுத்து, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி ஆதாரம் தரசொல்லி கேட்டு எழுதியிருக்கிறேன். இன்னமும் வேறு எதையோ ஜல்லியடிக்கிறாரே ஒழிய, நான் எங்கே சீண்டினேன், அவரை பற்றி இது வரை என்ன ஆபாசமாக எழுதினேன், பொது சந்திப்பில் என்ன அநாகரிகமாக நடந்தேன் என்பதற்கு பதில் இல்லை. இவ்வளவு எழுதும் ஆசாமிக்கு இதை ஒரு நாலுவரி எழுத, இவ்வளவு உதார் விட்ட பிறகும் செய்யவேண்டுமே என்கிற துப்பில்லை. அட, ஆதாரமும், பதிலும் இருந்தால்தானே சொல்லமுடியும். இவ்வாறு அவர் பதில் சொல்லாமல் வெட்டியாக வேறு எதையோ எழுதுவதையும், மேலும் மேலும் என்னை பற்றி ஆதாரமில்லாமல் மோசமாக எழுதுவது பற்றியும் நான் கவலைப்படமுடியாது. வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று (அவர்களை போல் வாய்பேச்சில் இல்லாமல் உண்மையாக) புறக்கணிப்பதுதான் நான் செய்யகூடியது.

ஆனால் இப்போது பல யோக்கியசிகாமணிகள் இதில் செட்டு சேர்ந்து போகிற போக்கில் கருத்து சொல்லிவிட்டு போகிறார்கள். நான் வலைப்பதிவை விட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விலகியிருக்கிறேன். சு.க. தொடர்ந்து எழுதுவதால், நாலுபேர் 'தல, வாங்க ஒரு கை பாத்துரலாம்' என்று, சுரேஷ் ரொம்ப வெறுக்கும் சில்லூண்டித்தனமாக எழுதுவது ஒகே. பொதுபுத்தியில இதெல்லாம் சகஜம். தர்க்கரீதியாய் எதுவுமின்றி சல்லித்தனமாக சொல்லிவிட்டு ஓடுபவர்கள் பற்றி என்றைக்கும் கவலையில்லை. அல்லது ரொம்ப நாளாய் 'சீரியசான' சமாச்சாரங்கள் பற்றி சு.க. எழுதிவருவதால், 'கவலை விடுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்' என்று மொட்டையாக அவருக்கு 'தார்மீக ஆதாரவு' தெரிவித்து வரும் பின்னூட்டமும் ஒகே. இப்போது அதை தாண்டி உளவியல் நிபுணர்களும், வேறு சில யோக்கிய சிகாமணிகளும் கிளம்பியிருக்கிறார்கள். சமூகத்தின் புற்று நோயே இவர்கள்தான்.

பொதுவில் கருத்து சொல்லும் தைரியம் இல்லாத ஒரு பேர்வழி, பெயர் சொல்லாமல் கருத்து மட்டும் சொல்லியிருக்கிறது. அந்தாள் பேர் வராவிட்டாலும், கடிதத்தில் வெற்றாக விடப்பட்ட மற்ற பெயர்கள் யாருடையன என்பதை ஊகிக்க முடியும். அது கருத்து அல்ல கழிவு என்றால், திட்டுகிறான் என்று திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூட புரியாமல், அல்லது புரிந்து கொண்டு பொய்யாக போகிற போக்கில் மற்றவர்கள் பாதிக்கப்படுவது பற்றி கவலையின்றி, எதோ அறிவுஜீவி போல நடித்து கருத்து சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம்? சுரேஷ் தனியாக 'சீண்டினான் ..தாக்கினான்' என்று ஆதாரம் தராமல் புலம்பினால் பரிதாபம் கூட கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் கல்லெறிந்து, மேதாவித்தனம் காட்டும் இந்த பேர்வழிகளின் நோய் உளவியல்தான் சுவாரசியமானது. அதிலும் நோய் உளவியல் உளவிலாராய்ச்சி செய்வதுதான் இன்னும் சுவாரசியம். இதில் மாதவ்ராஜும் சேர்ந்திருக்கிறார்.

இந்த மாதவ்ராஜ் எழுதிய அப்பட்டமான அரசியல் ஹிபாக்ரசி பதிவுகளாக, இலங்கை பிரச்சனை பற்றியும், தோழார் வரதராஜன் மரணத்தை பற்றியும் வாசித்திருக்கிறேன். அதெல்லாம் அவர் கோளாறு மட்டுமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கோளாறு. மற்றபடி நான் அவரை வாசித்ததில்லை, வாசிப்பதில்லை. ஆனால் இப்போது அவர் செய்திருப்பதற்கு அவரது இயல்பு கோளாறு மட்டுமே காரணம்.


அய்யா..மாதவராஜ்.. இந்த நாட்டாமை வேலை ரொம்ப அயோக்கியத்தனம் அல்லவா? நடந்தது என்னவென்றாவது தெரியுமா? அந்தாள் என்னை பற்றி அபாண்டமாகவும், மோசமாகவும் திட்டிவிட்டு, நான் இவ்வளவு provoke செய்தபிறகும் எந்த யோக்கியமான பதிலும் ஆதாரமும் தராமல் எழுதுவதை எல்லாவற்றையும் வாசித்து பார்த்தீர்களா? உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையெனில் விட்டுவிடலாம்; மௌனமாக இருக்கலாம். போகிற போக்கில் அடித்தவனுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவனை தாக்கும்விதாமாக எழுதுவது என்ன வகை முற்போக்குத்தனம்? நாட்டமையாக எதுவும் சொல்லவில்லையே என்று சமாளிக்க முடியாது. உங்கள் பின்னூட்டம் யாரை மதிக்கிறது, யாரை சீண்டல்பேர்வழி, அரட்டை பேர்வழி என்கிறது என்பது தெளிவு.

பொதுபுத்தி எவ்வளவு லூஸுத்தனமாக வேண்டுமானாலும் சிந்திக்கும் என்று தெரியும். அது யோக்கிய வேஷம் போடுவதும் சகஜம்தான். ஆனால் அறிவுபோலவும், விவேகம் போலவும் வேஷம் போடுவதை இங்கேதான் பார்க்கிறேன்.

(இதை சுனா கானாவின் பதிவில் பின்னூட்டமாக எழுதினால் வராது என்று தெரியும். மேலும் எனக்கு விருப்பமில்லை. அதனால் இங்கே போட்டிருக்கிறேன். இதற்கான பதிலை யோக்கிய சிகாமணிகள் இங்கே எழுதலாம். எழுத வரவேற்கிறேன். ஆனால் எச்சரிக்கை: பிரித்து மேயப்படும். ஆனால் ஏற்கனவே ட்விட்டரில் நான் அறிவித்தபடி புதன் வந்துதான் பின்னூட்டங்களை அனுமதித்து தேவையானால் பிரித்து மேயமுடியும்)

14 Comments:

ROSAVASANTH said...
சுரேஷ் கண்ணனுக்கு தன் பக்கம் நியாயம் எதுவும் கிடையாது என்று நன்றாக தெரியும். அதனால் தன் யோக்கியவாதி இமேஜை சாமாளித்து நிறுத்துவதற்காக தொடர்ந்து இப்படி எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் எதற்காக புறக்கணிக்க வேண்டும், புறக்கணியுங்கள் என்று சொல்லியபடி சுனா கானாவின் அதே காமெடி சீனை தாங்களும் மறு ஆக்கம் செய்கிறார்கள்?

10/15/2010 2:01 PM
மணிகண்டன் said...
ரோசா, சென்றமுறை பொது புத்தியில் உங்களை அனைவரும் தாக்கியபோது நீங்கள் ப்ளாக் செய்தவரில் நானும் ஒருவன். சுந்தரின் பதிவில் நான் உங்களுக்கு எதிராக எதுவும் எழுதவில்லை. நீங்கள் ட்விட்டரில் வந்து தற்செயலாக கேபிள் சங்கரின் குறும்படத்தை பார்த்ததாகவும், தமிழ்மணத்தை சுற்றி வந்தபோது நர்சிம்மின் பதிவை பார்த்ததாகவும் எழுதினீர்கள். அப்பொழுது உங்களிடம் அடுத்தது யார் தற்செயலாக "சுரேஷ் கண்ணனா" என்றேன். உடனடியாக ப்ளாக் செய்தீர்கள். நல்லது தான். ஏனென்றால் கோபத்தை கட்டுபடுத்தமுடியாமல் அடிப்பதை விட, இது போன்ற கேள்வி கேட்பவர்களை ப்ளாக் செய்வது சரியானது தான். நல்ல பாடம் கற்று கொண்டீர்கள் என்று தான் நினைத்தேன்.


ஆனால் நான் கேட்ட கேள்வியான அடுத்தது சுரேஷ் கண்ணனா என்பதற்கு அவரே ஒரு சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமல் தர்க்கரீதியாக அருமையாக அடித்துள்ளீர்கள். நல்லது.


சுந்தரை குறித்தும் சிவராமன் /வினவு பதிவின் போது மறுபடியும் ஆரம்பித்தீர்கள். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கவலைப்படாதீர்கள். அவரும் ஏதாவது தவறு செய்வார். அப்பொழுது அடிக்கலாம். காத்திருப்போம்.

10/15/2010 2:31 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
மணிகண்டன்,

நீங்கள் என்னை பற்றி காட்டமாக ஏதோ சொன்னதால் நான் ப்ளாக் செய்யவில்லை. ரொம்ப அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுதொந்தரவு செய்தீர்கள். தொந்தரவு தாங்காமல்தான் செய்தேன். (பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் நீக்கி விட்டேன்.) இன்னும் அதே அளவு புத்திசாலித்துடன் நீங்கள் தொடர்வது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தற்செயலாகத்தான் கேபிள் சங்கரின் படத்தை அன்று பார்த்தேன். நான் பொதுவாக பதிவுகளை படிப்பதில்லை. வேறு எதையோ தேடியபோது அந்த குறும்படம் பார்த்தேன். சுஜாதா கதையின் காப்பி, ஆனால் பெயர் போடவில்லை என்பதால் அதை சொன்னேன். பின்னரே பரிசல்காரன் எழுத்யிருந்ததை (ட்விட்டரில் ஒருவர் சொல்லி) வாசித்தேன். நர்சிம்மின் பதிவு மிக போலியானது. அதை குறிப்பிட்டேன். இது தவிர எத்தனையோ பேர்களை விமர்சித்தும் எழுதியிருக்கிறேனே. விமர்சனத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதான் நேர்மையும் அறிவுடமையும் ஆகும். நான் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை, அல்லது பிழை. விமர்சிக்க கூடாது, உனக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பது அழுகுணித்தனம். ஜ்யோவ் பற்றி நான் எழுதியதும் எனக்கு இருந்த உண்மையான விமரசனம்தான். என்னிடம் பகைமை இருக்கிறது, உங்களை மாதிரி ஆசாமிகள் அதை திரிப்பார்கள் என்பதால் என் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது..

அப்புறம் நீங்கள் என்ன ஒரு தீர்க்கதரிசி. உங்கள் தீர்க்க தரிசனம் ஓராண்டு கழித்தாவது நடப்பதற்கு பாராட்டுக்கள். தர்க்கத்தால் அடித்திருக்கிறேனா? ஏதோ கம்பை வைத்து அடித்தது போல குற்றம் சொல்கிறீர்கள். தர்க்கத்தில் என்ன பிரச்சனை என்று சொல்வதுதானே நேர்மையும், அறிவும் என்று கேட்டால் நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்களா? உங்களிடம் எதுவும் பேசமுடியாது என்று உடனடியாக, லூஸுத்தனமான உங்கள் கேள்விகளை பார்க்க விரும்பாமல்தான் ப்ளாக் செய்தேன் என்பதையும் உங்களுக்கு விளக்க முடியயுமா?

10/15/2010 3:18 PM
ROSAVASANTH said...
கோவி.கண்ணன் said...
//'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' //

வழிமொழிகிறேன்.

Kaarthik said...
நான் எண்ணியதையே தங்கள் நண்பரும் கூறியுள்ளார், சற்று அருமையான நடையில். தாங்கள் இதுபோன்ற வம்புச் சண்டைகளிலிருந்து விலகி தங்களுக்கே உரித்தான அற்புத பதிவுகளை என்னைபோன்ற விசிரிகளுக்காக மீண்டும் எழுதத் துவங்க வேண்டுகிறேன். Ignore them and pls come back to your form.

வடகரை வேலன் said...
சுரேஷ் கண்ணன்,

சில மாதங்களுக்கு முன்பே இதை நான் தங்களுக்குத் தனி மடலில் எழுதி இருந்தேன். இது ஒரு மாயச் சுழல் மாட்டிக் கொண்டால் பாழாவது உங்கள் படைப்புத் திறன் என்று.

அதுவேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

விரைவில் வெளியே வந்து விடுங்கள்.


எப்படிப்பா இதெல்லாம்? நீங்கள்ளாம் தமிழ் படிக்க தெரிந்தவர்கள்தானே. எதோ பத்தாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கதானே? (பத்தாங்கிளாஸ் எனபது சும்ம உருவகம், ஏட்டு சுரிக்காய் கறிக்குதவாது என்று தெரியும்) போற போக்கில் இப்படி எல்லாம் சொல்ல வெக்கமாவே இல்லையா? சோத்துக்கு பதில் வேற எதையாவது தின்கிறீர்களா?
(ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் இந்த பின்னூட்டத்தை என் பதிவில் இடுவதற்கு பதில் சுரேஷ் கண்ணன் பதிவில் இட்டுவிட்டேன். அதுவும் நல்லதுதான். வெளிவந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.)

10/15/2010 4:37 PM
மணிகண்டன் said...
ரோசா, நரசிம், கேபிள் சங்கர் மற்றும் சுரேஷ்கண்ணன் சுந்தர் விஷயத்திற்கு பிறகு உங்களை குறித்து பதிவோ / காட்டமாக பின்னூட்டமோ போட்டார்கள். நீங்கள் ட்விட்டரில் எழுத ஆரம்பித்தவுடன் அவர்கள் நரசிம் மற்றும் கேபிள் சங்கர் பதிவை தற்செயலாக பார்த்ததாக எழுதினீர்கள். அதற்கு நான் .அடுத்ததாக சுரேஷ் கண்ணன் தானே என்றேன். இதில் என்னளவில் எந்த அதிபுத்திசாலித்தனமும் இல்லை. அந்த சமயத்தில் உடனடியாக எழுதியதால் ஏற்பட்ட சந்தேகம். இப்பொழுதும் நீங்கள் சமயம் பார்த்து அடிக்கிறீர்கள் என்று தான் கூறுகிறேன். உங்கள் விமர்சனம் குறித்தான கருத்தையோ / நேர்மையோ குறித்தோ பேசவில்லை.

மற்றபடி நீங்கள் சுரேஷ்கண்ணன் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனங்களை நான் படித்ததில்லை. எனக்கு அவரின் பதிவுகள் சுவாரசியமாக பட்டதில்லை. அதனால் பதிவுகளையும் அதிகம் படித்ததில்லை.

இங்கு நான் திரித்ததாக கூறுவது எல்லாம் டுபாக்கூர். அடுத்ததாக சுரேஷ்கண்ணன் உங்களை சைக்கோ என்று அழைத்ததில் உடன்பாடில்லை.

10/15/2010 5:01 PM
ROSAVASANTH said...
'உலகம் உருண்டைன்னு இந்தாள் அநாகரிகமாக, வன்மத்துடன் பொய் சொல்றான்' என்கிறான் அவன். உலகம் உருண்டைக்கான என்பதற்கான ஆதாரங்களை அடுக்கி, அதில் அநாகரிகமும், வன்மமும் இல்லை என்கிறான் இவன். இந்த மாதிரி சொல்லி என்னை முதலிலிருந்தே சீண்டினான், நுள்ளினான், கிள்ளினான் என்று ஒப்பாரி வைக்கிறான் அவன். நண்பர்கள் 'சிலர் தாங்கள் புகழ் பெறுவதற்காக இவ்வாறு உலகம் உருண்டை என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்கிறார்கள். ஆமாம், 'அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் புறக்கணித்து விட்டு செல்ல வேண்டும்' என்று வழிமொழிகிறார்கள். அவனுக்கு குஷி, இனி உலகம் தட்டை என்பதற்கு ஆதாரம் எதுவும் தரவேண்டாம். 'உங்களை எனக்கு தெரியும், உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை' என்று வேறு சொல்கிறார்கள்.

இவ்வளவுதானப்பா உலகம். இதில் தர்க்கம் அறிவு எதுவும் தேவையில்லை. இந்த குருட்டுபயல்கள் உலகத்தில் நாம் சொல்வது எடுபடுவது எடுபடாதது குறித்து கவலைப்பட முடியுமா?

நண்பர்களே, ஒரு சமூகக் கூட்டம் அறிவும், நேர்மையும் குறைவாக இருப்பது பிறழ்வோ பெரிய பிரச்சனையோ அல்ல; அதை புத்திசாலித்தனமாகவும், யோக்கியமாகவும் கருதி, கும்பல் புத்தியாக பரிணமிப்பதுதான் விபரீதம்.

இவ்வளவுதான். நான் எழுத வேண்டியதை எழுதியாகிவிட்டதால் மன உளைச்சல் எல்லாம் எதுவும் இல்லை. மனம் விடுதலை அடைந்த உணர்வுதான். பை!

10/15/2010 5:07 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
ROSAVASANTH said...
மணிகண்டன், சமயம் பார்த்து அடிக்க இவங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை நண்பா. (ஆனால் நர்சிம், கேபிள் சங்கருடன் நேரில் நல்லபடியாக பேசியிருக்கிறேன்) மேலும் சமயம் பார்த்து நான் சொன்னாலும் சொன்ன விஷயத்தில் என்ன பிரச்சனை என்று பார்பதுதானே அறிவுடமை. நீங்கள் இப்படி எதையாவது சொல்வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்க முடியுமா? அதானால் உங்கள் வாதத்தில் சத்து இல்லை என்பது என் கருத்து. இருக்கிறது என்று நினைத்தால் சந்தோஷமாக் போங்கள்.

10/15/2010 5:17 PM
V.Radhakrishnan said...
பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

பார்வையாளர்கள் கருத்து சொல்பவர்களாக மாறும்போது பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்வதுதான் சிறந்தது.

எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நிலைப்பாடு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

மிகவும் வருத்தம் தரும் செயல்கள் நடந்தேறிவிட்டது என்பதுதான் கொடுமை.

10/15/2010 7:13 PM
ROSAVASANTH said...
ராதா கிருஷ்ணன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. ஏனெனில் நீங்களும் சுரேஷ் கண்ணன் பதிவில் ஒழுங்காய் நடந்ததை புரிந்து கொள்ளாமல் ஒரு பின்னூட்டம் இட்டுருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. எப்படி இருப்பினும் இந்த இடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

சுரேஷ் கண்ணன் பதிவில் எழுதப்பட்ட மற்றவைகளை பார்த்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் கேவலமாக, புழுக்களின் ஓர்மை கூட இல்லாதவர்களாக எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று கண்டு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அது தவிர ரொம்ப சீரியசாக தங்களை கருதிகொண்டு எப்படி எல்லாம் விநோதமாக யோசிப்பார்கள் என்றும் அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக மேலே மணிகண்டன் என்கிற அதி புத்திசாலி எழுதியிருப்பதை சொல்லலாம்.

5 நாட்களாக இணையத்திலிருந்து விலகியிருந்தது நல்ல ஆசுவாசமாக இருந்தது. நான் இந்த விஷ சூழலை விலகியிருந்து புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதால் எந்த உணர்ச்சி கொந்தளிப்பும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதுவேன். புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

10/20/2010 12:17 PM
ROSAVASANTH said...
இன்னமும் யோக்கியமாக எதையும் பேசாமல், பல பல நாடகங்கள் மட்டும் போடும் மலப்புழு, ட்விட்டரில் அடித்த கிண்டல் குறித்து எழுதியதை வாசித்தேன். அட, மலப்புழு முகம் சுளித்து 'மலநாற்றம்' என்று புகாரிட்டால், அது என்னவென்று முகரும் திறன் கொண்டவர்கள் அறிவார்களே; அது அற்றவர்கள்தான் பாவம்!

10/21/2010 5:21 PM
test said...
புழுக்கள் நெளியுமிடம் அழுகிபோனது என்று சொல்வது எழுத்தாளனின் கடமை அல்லவா?

- ennathu neer Ezhuthalara. Ithu eppothula irunthu ....

10/23/2010 4:19 AM
ROSAVASANTH said...
இந்த பதிவும், முந்தய பதிவும் நாளை இங்கிருந்து எனது 'கூத்து' வலைப்பதிவிற்கு மாற்றப்படும். வேறு தீவிர விஷயங்கள் பேசும்போது இந்த பதிவுகள் திசை திருப்பலாக இங்கே இருக்க வேண்டாமே என்று இந்த ஏற்பாடு. மற்றபடி பதிவுகள் நீக்கப்படவில்லை என்பதை அறிக.

10/27/2010 3:10 AM

0 Comments:

Post a Comment

<< Home

Site Meter