'வேதம் பற்றி' பின்னூட்டங்கள்!
இந்த வலைப்பதிவின் பின்னூட்டங்கள் பற்றிய தகவல், தமிழ்மணத்தில் வருவதில்லை. அதனால் சென்ற பதிவில் வந்த பின்னூட்டங்களில், விவாதத்திற்குரியதாய், என் பார்வையில் தெரிவதை, இங்கே தொகுக்கிறேன். எனது கருத்துக்கள் மிக மேலோட்டமாய் இருப்பதாலும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தேவை இருப்பதாலும், இப்போது சொல்ல உருப்படியாய் எதுவும் இல்லை. பின்னர் கணக்கில் கொள்ளும் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது, முற்றிலும் என் தனிப்பட்ட தேர்வு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. முழுமையாய் படிக்க சென்ற பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி.
Geetha Sambasivam: Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars.
paarvai: வேதம் பற்றி எதுவுமே தெரியாது,அதனால் என் வாழ்க்கையில் நான் தடம் புரளவில்லை. ஆனாலும் ஆர்வமிகுதியால் ,ஏதோதெல்லாம் சொல்லியிருக்காமே ,அது என்னனுன்னு நாமும் அறிவோமே என்று யாராவது அது பற்றி எழுதினால் படிக்கும் பழக்கம் உண்டு. அவ்வகையின் துக்ளக் சோ; நக்கீரனில் ஒரு வைஸ்ணவ ஆச்சாரியார், இப்போ சாரு நிவேதிதா இவர்கள் ஓரளவுக்கு என் சிற்றறிவுக்குப் புரியும் படி எழுதுகிறார்கள். அதனல் படித்தேன். அந்த வைஸ்ணவ ஆச்சாரியார்; பிராமணராக இருந்த பொழுதும்;வேதங்கள் பற்றி பெரிய அபிப்பிராயம் உள்ளவர் போல் எழுத்தில், தெரியவில்லை.அதே சமயம் தன் கருத்துக்களை ,சொல்லும் விதம்;அவர் புலமையைப் புடம் போட்டுக்காட்டுகிறது.சங்கரராமன் போல் அவரை இதுவரை போட்டுத்தள்ளாமல் விட்டுவைத்துள்ளதே, எனக்கு பெரிய ஆச்சரியம்.
தங்கமணி: வசந்த்:நானும் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர ஆங்காங்கே படித்தது கொஞ்சம். வேதத்தைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக சில தோன்றுகிறது.
1. உபநிடத்தையும் வேதங்களையும் ஒரே அடைப்புக்குறிக்குள் போட முடியாது. நான் பல உபநிடதங்களைப் படித்தவரையில் அவற்றுள் பல அற்புதமானவை. உண்மையான ஞானத்தேடலும், அபரிமிதமான நுட்பமும் கொண்டவை. அதன் பொருட்செறிவு, தத்துவம் குறித்து அறிவாய் சேகரிப்பதைவிட (ஆனால் பலர் இதையே செய்யமுனைகின்றனர்) ஏற்கனவே அறிந்திருப்பதைக் கட்டுடைக்க, உதிர்க்க உபநிடதங்களின் பல பயன்படும்.
2. உபநிடதங்களின் விளக்க உரைகளுடன் கூடிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் உதவாதவை. நான் நேரடியான ஒவ்வொரு சொல்லுக்கான மொழிபெயர்பையும் கொண்ட உரைகளில் இருந்து என்னுடைய புரிதலைப் பெறுவதை விரும்புவேன். பல இடங்களில் சொற்கள் பின்னாளைய சமயச் சார்புகள், கண்ணோட்டங்களில் புரண்டெழுந்து வந்தவையாக இருப்பதால் அதைக்கூட கவனமாக கண்டுகொள்ள கொஞ்சமேனும் சம்ஸ்கிருத அறிவும், சொந்த அனுபவமும் அவசியம். (கர்மா என்பதை செயல் என்று சாதரணமாக பெயர்க்க மட்டார்கள், அதனோடு கூடிய அத்தனை சமயச் சாயத்திலும் புரட்டி உரை எழுதி இருப்பது சாதரணமாக நடகும் விபத்து) பாராயணம் தான் நோக்கமெனில் இது எதுவும் தேவையில்லை.(- உபரியான தகவல், கண்ணனின் பதிவில் http://emadal.blogspot.com/2006/03/blog-post_22.html திருலோக சீத்தாராம் பற்றிய மோகனraங்கனின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நேரங்கிடைக்கும் போது கேட்கவும். சொற்கள்/ கவிதகள் குறித்த அவரது அணுகுமுறை நான் பலகாலமாக பின்பற்றி வருவது. அது மிகச்சரியானதும், பயனளிக்கக்கூடியதும் என்பது என் அனுபவம்.)
3. வேதங்கள் என்ற வகையில் சாரு குறிப்பிடுகிற மாதிரி பல இடங்கள்ல் நல்ல கவிதை உள்ளன. சில கவிதைகளை நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.
4. சாரு குறிப்பிடுகிற மாதிரியான வசைகள், அச்சங்களினால் விளைந்த வேண்டல்கள் மிகுதியாக இருப்பதாய் நானும் அறிந்தவரையில் நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு , கர்மகாண்டங்களின் நோக்கத்தைப் பார்த்தாலும் புரிந்துகொள்ளமுடியும். உபநிடதங்கள் இதனின்று பிரிந்து கிளைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
5. வேத பாராயணம் செய்தவர்கள், செய்கிறவர்கள் எல்லோரும் வேதத்தை ஆராய்ந்தவர்கள் கிடையாது. பலர் தொழிலுக்காகச் செய்வது.
6. ஆனால் காலங்காலமாக வேதத்தின் பெயரால் பல மோசடிகள் செய்யபப்டுகிறது; அதற்காக அது கேள்வி எழுப்பமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைக்கு சாதாரண கணக்கு முதல் சட்டினி/ துவையல் வரை வேதக்கலர் கொடுக்க, சம்பாதிக்க எந்த வேதத்தையும் படித்திருக்க வேண்டாம். எவரும் கேள்வி கேட்காமல் (வேதத்தைப் புறக்கணிக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள் கூட) ஒத்துக்கொள்வார்கள். :)
7. இப்படி ஒத்துக்கொள்பவர்கள் தான் காலங்காலமாக வேதத்தை யாரும் குறை சொல்லாமல் பார்த்துகொள்கிறவர்கள் என்பதும், அதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களுமாக இருப்பது ஒரு சுவையான விதயம். :)
என்னுடைய பதிவை ( வேதத்தில் சாதி...) நீங்கள் படிக்கவேண்டும். புருஷ சூக்தத்தில் சாதி பற்றிய (வருணாசிரமம்) பற்றிய முதல் அறிவுறுத்தல் இருப்பது பலர் அறிந்ததே., ஆனால் 'பெரியவா' ஆடுதுறையில் நள்ளிரவில் வருணாசிரமத்தை சுதந்திர இந்தியாவில் சட்டப்பூர்வமாக் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை அறிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். அதாவது அவரது சாதி உணர்வு எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், வேதம் போல பவித்திரப்படுத்தப்படுகிற அவரது தோற்றத்துக்குப் பின் வருணாசிரமத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த முயற்சிகளை மறுக்கமுடியாத ஒருவர் சொல்லித் தெரிந்துகொள்வது முக்கியமானது என்று நினைக்கிறேன்.
நியோ: சாரு அவர்கள் பல Sources மூலமாக வேதத்தைப் படித்திருக்கலாம். முக்கியமாக Indologists, இந்தியவியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் (அதாவது அந்தத் துறையில் 'உலக அறிஞர்களால் மதிக்கப்படுபவர்கள்) எழுதியவற்றையும் அவர் படித்திருக்கக் கூடும்.
இருந்தாலும் இந்தச் சுட்டி தருகிறேன் :
http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm
இந்தியவியல், வேத, சமஸ்கிருத அறிஞர் - பேராசிரியர் மைக்கேல் விட்சலினுடைய வலைமனை அது.
அதில் பல கட்டுரைகள் 'வேத' காலம் குறித்தும், ஆரியரின் சிந்துவெளி 'வருகை' குறித்தும், 'ரிக்' முதலான வேத நூல் தொகுப்புகள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளில் அலசுகிறார்.
முக்கியமாக அவரின் "Autochthonous Aryans?" ( "ஆரியர்கள் (இந்தியத் துணைக்கண்டத்தின்) பூர்வ குடிகளா?) என்கிற கட்டுரை வாசித்தே தீர வேண்டியது.
அதில் - ஆரியர்களின் 'படையெடுப்பு' என்பது நிகழாமல் போயிருக்கலாம்; ஆனால் ஆரியர்கள் குடியேறிகளே எனத் தெளிவாகக் காட்டுகிறார் (மிக நுட்பமாக); சில இடங்களில் Politically Correct speech உள்ளது; ஆனாலும் முழுவதுமாகப் படிப்பவருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும் :)
கீதா சாம்பசிவம் போன்றவர்கள் (பொதுவாக பார்ப்பனர்கள்) - "தேவ பாஷை" என்கிற மாயையை விடாப்பிடியாக கட்டமைக்கப் பார்ப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது!இவர்கள் வேண்டுமென்றால் - 'ரிக்'-இல் இருக்கும் ஒவ்வொரு 'சொல்லுக்கும்' அதன் பொருள் இன்னின்ன என்று ஒரு அகரமுதலி போடட்டும்!Linguists, Indologists ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்கிற பார்ர்ப்பனிய, சமஸ்கிருத - இந்துத்துவ "ஆராய்ச்சியாளர்கள்" செய்யும் காமடிக்கு அளவில்லாமல் போகிறது நாளுக்கு நாள்!
Geetha Sambasivam: Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars.
paarvai: வேதம் பற்றி எதுவுமே தெரியாது,அதனால் என் வாழ்க்கையில் நான் தடம் புரளவில்லை. ஆனாலும் ஆர்வமிகுதியால் ,ஏதோதெல்லாம் சொல்லியிருக்காமே ,அது என்னனுன்னு நாமும் அறிவோமே என்று யாராவது அது பற்றி எழுதினால் படிக்கும் பழக்கம் உண்டு. அவ்வகையின் துக்ளக் சோ; நக்கீரனில் ஒரு வைஸ்ணவ ஆச்சாரியார், இப்போ சாரு நிவேதிதா இவர்கள் ஓரளவுக்கு என் சிற்றறிவுக்குப் புரியும் படி எழுதுகிறார்கள். அதனல் படித்தேன். அந்த வைஸ்ணவ ஆச்சாரியார்; பிராமணராக இருந்த பொழுதும்;வேதங்கள் பற்றி பெரிய அபிப்பிராயம் உள்ளவர் போல் எழுத்தில், தெரியவில்லை.அதே சமயம் தன் கருத்துக்களை ,சொல்லும் விதம்;அவர் புலமையைப் புடம் போட்டுக்காட்டுகிறது.சங்கரராமன் போல் அவரை இதுவரை போட்டுத்தள்ளாமல் விட்டுவைத்துள்ளதே, எனக்கு பெரிய ஆச்சரியம்.
தங்கமணி: வசந்த்:நானும் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர ஆங்காங்கே படித்தது கொஞ்சம். வேதத்தைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக சில தோன்றுகிறது.
1. உபநிடத்தையும் வேதங்களையும் ஒரே அடைப்புக்குறிக்குள் போட முடியாது. நான் பல உபநிடதங்களைப் படித்தவரையில் அவற்றுள் பல அற்புதமானவை. உண்மையான ஞானத்தேடலும், அபரிமிதமான நுட்பமும் கொண்டவை. அதன் பொருட்செறிவு, தத்துவம் குறித்து அறிவாய் சேகரிப்பதைவிட (ஆனால் பலர் இதையே செய்யமுனைகின்றனர்) ஏற்கனவே அறிந்திருப்பதைக் கட்டுடைக்க, உதிர்க்க உபநிடதங்களின் பல பயன்படும்.
2. உபநிடதங்களின் விளக்க உரைகளுடன் கூடிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் உதவாதவை. நான் நேரடியான ஒவ்வொரு சொல்லுக்கான மொழிபெயர்பையும் கொண்ட உரைகளில் இருந்து என்னுடைய புரிதலைப் பெறுவதை விரும்புவேன். பல இடங்களில் சொற்கள் பின்னாளைய சமயச் சார்புகள், கண்ணோட்டங்களில் புரண்டெழுந்து வந்தவையாக இருப்பதால் அதைக்கூட கவனமாக கண்டுகொள்ள கொஞ்சமேனும் சம்ஸ்கிருத அறிவும், சொந்த அனுபவமும் அவசியம். (கர்மா என்பதை செயல் என்று சாதரணமாக பெயர்க்க மட்டார்கள், அதனோடு கூடிய அத்தனை சமயச் சாயத்திலும் புரட்டி உரை எழுதி இருப்பது சாதரணமாக நடகும் விபத்து) பாராயணம் தான் நோக்கமெனில் இது எதுவும் தேவையில்லை.(- உபரியான தகவல், கண்ணனின் பதிவில் http://emadal.blogspot.com/2006/03/blog-post_22.html திருலோக சீத்தாராம் பற்றிய மோகனraங்கனின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நேரங்கிடைக்கும் போது கேட்கவும். சொற்கள்/ கவிதகள் குறித்த அவரது அணுகுமுறை நான் பலகாலமாக பின்பற்றி வருவது. அது மிகச்சரியானதும், பயனளிக்கக்கூடியதும் என்பது என் அனுபவம்.)
3. வேதங்கள் என்ற வகையில் சாரு குறிப்பிடுகிற மாதிரி பல இடங்கள்ல் நல்ல கவிதை உள்ளன. சில கவிதைகளை நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.
4. சாரு குறிப்பிடுகிற மாதிரியான வசைகள், அச்சங்களினால் விளைந்த வேண்டல்கள் மிகுதியாக இருப்பதாய் நானும் அறிந்தவரையில் நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு , கர்மகாண்டங்களின் நோக்கத்தைப் பார்த்தாலும் புரிந்துகொள்ளமுடியும். உபநிடதங்கள் இதனின்று பிரிந்து கிளைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
5. வேத பாராயணம் செய்தவர்கள், செய்கிறவர்கள் எல்லோரும் வேதத்தை ஆராய்ந்தவர்கள் கிடையாது. பலர் தொழிலுக்காகச் செய்வது.
6. ஆனால் காலங்காலமாக வேதத்தின் பெயரால் பல மோசடிகள் செய்யபப்டுகிறது; அதற்காக அது கேள்வி எழுப்பமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைக்கு சாதாரண கணக்கு முதல் சட்டினி/ துவையல் வரை வேதக்கலர் கொடுக்க, சம்பாதிக்க எந்த வேதத்தையும் படித்திருக்க வேண்டாம். எவரும் கேள்வி கேட்காமல் (வேதத்தைப் புறக்கணிக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள் கூட) ஒத்துக்கொள்வார்கள். :)
7. இப்படி ஒத்துக்கொள்பவர்கள் தான் காலங்காலமாக வேதத்தை யாரும் குறை சொல்லாமல் பார்த்துகொள்கிறவர்கள் என்பதும், அதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களுமாக இருப்பது ஒரு சுவையான விதயம். :)
என்னுடைய பதிவை ( வேதத்தில் சாதி...) நீங்கள் படிக்கவேண்டும். புருஷ சூக்தத்தில் சாதி பற்றிய (வருணாசிரமம்) பற்றிய முதல் அறிவுறுத்தல் இருப்பது பலர் அறிந்ததே., ஆனால் 'பெரியவா' ஆடுதுறையில் நள்ளிரவில் வருணாசிரமத்தை சுதந்திர இந்தியாவில் சட்டப்பூர்வமாக் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை அறிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். அதாவது அவரது சாதி உணர்வு எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், வேதம் போல பவித்திரப்படுத்தப்படுகிற அவரது தோற்றத்துக்குப் பின் வருணாசிரமத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த முயற்சிகளை மறுக்கமுடியாத ஒருவர் சொல்லித் தெரிந்துகொள்வது முக்கியமானது என்று நினைக்கிறேன்.
நியோ: சாரு அவர்கள் பல Sources மூலமாக வேதத்தைப் படித்திருக்கலாம். முக்கியமாக Indologists, இந்தியவியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் (அதாவது அந்தத் துறையில் 'உலக அறிஞர்களால் மதிக்கப்படுபவர்கள்) எழுதியவற்றையும் அவர் படித்திருக்கக் கூடும்.
இருந்தாலும் இந்தச் சுட்டி தருகிறேன் :
http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm
இந்தியவியல், வேத, சமஸ்கிருத அறிஞர் - பேராசிரியர் மைக்கேல் விட்சலினுடைய வலைமனை அது.
அதில் பல கட்டுரைகள் 'வேத' காலம் குறித்தும், ஆரியரின் சிந்துவெளி 'வருகை' குறித்தும், 'ரிக்' முதலான வேத நூல் தொகுப்புகள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளில் அலசுகிறார்.
முக்கியமாக அவரின் "Autochthonous Aryans?" ( "ஆரியர்கள் (இந்தியத் துணைக்கண்டத்தின்) பூர்வ குடிகளா?) என்கிற கட்டுரை வாசித்தே தீர வேண்டியது.
அதில் - ஆரியர்களின் 'படையெடுப்பு' என்பது நிகழாமல் போயிருக்கலாம்; ஆனால் ஆரியர்கள் குடியேறிகளே எனத் தெளிவாகக் காட்டுகிறார் (மிக நுட்பமாக); சில இடங்களில் Politically Correct speech உள்ளது; ஆனாலும் முழுவதுமாகப் படிப்பவருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும் :)
கீதா சாம்பசிவம் போன்றவர்கள் (பொதுவாக பார்ப்பனர்கள்) - "தேவ பாஷை" என்கிற மாயையை விடாப்பிடியாக கட்டமைக்கப் பார்ப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது!இவர்கள் வேண்டுமென்றால் - 'ரிக்'-இல் இருக்கும் ஒவ்வொரு 'சொல்லுக்கும்' அதன் பொருள் இன்னின்ன என்று ஒரு அகரமுதலி போடட்டும்!Linguists, Indologists ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்கிற பார்ர்ப்பனிய, சமஸ்கிருத - இந்துத்துவ "ஆராய்ச்சியாளர்கள்" செய்யும் காமடிக்கு அளவில்லாமல் போகிறது நாளுக்கு நாள்!